முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் கிஷான் திட்ட விவசாயிகள் பணத்தில் முறைகேடு சிக்கும் புரோக்கர்கள் சிக்காத அதிகாரிகள்

பாரதப் பிரதமரின் கிஷான் திட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் குத்தகை இல்லாத, நேரடி விவசாயிகளுக்குப் பயிர் செய்வதற்கு உதவும் வகையில் ஒரு தவணைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் விவசாயிகளின் நேரடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் சுமார் 6,5000கோடி வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசால் அனுப்பப்பட்ட திட்டத்தில் தமிழகம் முழுவதும் முறைகேடு நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் 1500 போலி பயனாளிகள். இரண்டு தவணைகளில் ரூ. 60 லட்சம் வரை மோசடி. விழுப்புரம் மாவட்டத்தில் 11,200 போலி விவசாயிகள். மோசடியாக சேர்ந்த 11,200 பேரிடம் இருந்து ரூ.4 கோடி மட்டுமே பறிமுதல். திருவாரூர் மாவட்டத்தில் 375 போலி விவசாயிகள்.ரூ.15.40 லட்சம் வரை மோசடி.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில், 18 கோடி ரூபாய் முறைகேடாகச் செலுத்தப்பட்ட 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1.51 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். அதன்பின் கொரானா பாதிப்பு காலத்தில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகின்றது.. கரூர் மாவட்டத்தில் 85 பேர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.40 லட்சம் மீட்பு. பெரம்பலூர் 1,700 பேர், 2 தவணைகளில் ரூபாய்.68 லட்சம் முறைகேடாக நிதி உதவி இதுவரை ரூபாய்.11 லட்சம் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமாக இரண்டு லட்சம் பேர் மோசடி. இதனால் கிசான் திட்டத்தின் கீழ் அவர்கள் பெற்ற பணம் திருப்பி வசூலிக்கப்படுகிறது. ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை ரூபாய் 5.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலை இந்தத் திட்டத்தில் நடந்த ஊழலில் இதுவரை பல கோடி ரூபாய் அளவிற்கான பணத்தை போலியான விவசாயிகள் கணக்கில் இருந்து மத்தியரசு அதிரடியாக கைப்பற்றியுள்ளது. மத்திய அரசு திட்ட பணம் என்று கூறி இடைத்தரகர்கள் இடத்தில் பார்கோடுகளை கொடுத்து ஆவணங்களை பெற்று கிசான் திட்டத்தில் அதிகாரிகள் முறைகேடாக இணைந்துள்ளனர். இதில் சம்மந்தபட்ட அனைவரும் கண்டறியபட்டு முறைகேடாக வெளியே சென்ற பணம் அத்தனையும் அரசு மீட்க வேண்டும்.. சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்வது மட்டுமல்லாமல் போலி விவசாயிகளாக இணைந்து பலன் பெற்ற நபர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை வேண்டும்.. விவசாய துறையில் முதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தம். உண்மையான விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களின் வங்கி கணக்கு நில உடமை மற்றும் உரிமை ஆவணம் + ஆதார் விவரங்களை இணைத்து.. ஒவ்வொரு உண்மையான விவசாயிக்கும் தனியாக அடையாள எண்ணுடன் கூடிய முழுமையான database .என நாடு தழுவிய அளவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் என உருவாக்க வேண்டும் அரசியல்வாதிகள் உட்பட விவசாயத்திற்குச் சம்பந்தமேயில்லாத பலரும் ஆளாளுக்கு தானும் விவசாயி என்று போலியாக அடுத்தவர் நிலத்தைக் காண்பித்து. ஊழல் செய்வதை. அப்போதுதான் தடுக்க இயலும். இது புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம் மதுரை மாவட்டங்களில் பார்வை திரும்பினால் பல போலி விவசாயிகள் சிக்கும் வாய்ப்பு உண்டு விவசாயிகளிண் கௌரவ நிதியில் ஊழல் செய்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் மற்றும் போலிப் பயனாளிகள் மீது தமிழக அரசு சி பி சி ஐ டி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது போல், ஏழை மக்கள் கழிப்பறை கட்டுவதற்கும் வீடுகட்டிக் கொடுக்கும் திட்டத்திலும் மத்திய அரசு ரூபாய் 8000/- வீதம் வழங்கிய பல்லாயிரக்கணக்கானோரின் பெயர்களில் கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகள் கௌரவ நிதி விவகாரம். இது வரை ஐந்து லட்சத்துக்கும் அதிகமான போலி கணக்குகள்.110 கோடி ரூபாய் ஊழல். இடைத்தரகர்கள் மட்டுமே காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது திட்டமிடப்பட்ட கொள்ளை. பல மாவட்டங்களில் நடந்துள்ளது. காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் ஒட்டு மொத்த அமைப்பே இலஞ்சம் மற்றும் ஊழலில் சிக்கித் திளைக்கிறது என்பதற்கான அடையாளமாகவே இது அனைவராலும் பாரக்கப்படும் நிலையில் விவசாயிகள் கௌரவ நிதியில் நடைபெற்ற முறைகேடுகள். விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய நிதியில் பல முறைகேடு நடந்துள்ளது, நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைப்பிலேயே லஞ்சம் மற்றும் ஊழல் ஊடுருவியுள்ளதை தெளிவாகக் குறிக்கிறது.உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூலை, 2018 ல் இந்தியாவிலேயே 'தமிழகம் தான் ஊழலில் முதலிடம் வகிக்கிறது' என்று சொன்னதை நிரூபித்துள்ளது. இந்தக் கேவலமான செயல். விவசாயிகளின் வயிற்றிலடித்து பிழைப்பு நடத்தும் அற்பப் பதர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். புரையோடிப்போயிருக்கிற இலஞ்ச ஊழலை ஒழிக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் ஊழல் என்றாலே அரசியல் கட்சிகளை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை என்பதையும், அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் விவசாய பயனாளிகளின் பெயரில் ஏமாற்றி பணம் பெற்ற பொதுமக்களில் சிலர் என அனைவருமே தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதையும் உணர்தல் வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...