முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணலும் மரமும் திருடிப் பதுக்கிய திருப்பத்தூர் ஊராட்சி குழுத்தலைவர் கும்பல் மீது வழக்குப்பதிவு

சவுடுமண்னுடன் மணல் பதுக்கிய ஒன்றியக் குழுத் தலைவா் மீது வழக்குப் பதிவு திருப்பத்தூா் ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பவா் கோட்டையிருப்பைச் சேர்ந்த சண்முகவடிவேல் இவா், திருப்பத்தூர் தென்மாபட்டு அருகே கண்டராமாணிக்கம் சாலையில் உள்ள தனியாா் தோப்பு ஒன்றில் 450 லாரி லோடு சவடு மண்ணும், 50 லாரி லோடு மணலும் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவல் வந்து திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயலட்சுமி ஆய்வு செய்த பின்னா் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் ஜெயமணி, ஒன்றியக்குழுத் தலைவராக உள்ள சண்முகவடிவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா். சவுடுமண் மற்றும் மணல் பதுக்கியதாக செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் தற்போது விவசாயம் இல்லாத வறட்சி மாவட்டம் ஆழமாகத் தோண்டி ஆற்றுமணல் அள்ளி சாதனை படைத்திருக்கிறார்கள் சிவகங்கை ஊழல் மணல் கொள்ளையர்கள். தொழில் வளர்ச்சிகளில் முன்னேற்றம் காணவில்லையென்றாலும், கனிம வளக் கொள்ளை அமோகமாக அரங்கேறுகிறது கட்சி வித்தியாசம் இல்லாமல் அரசியல் கட்சியினருக்கு மணல் எடுக்க அனுமதிகள் வழங்கப்பட்டதாம் .2000 க்குப் பின்பாக அரசியல் கட்சியில் பிரபலமான தி.மு.க சண்முக வடிவேல் `கட்சிப் பாகுபாடு இல்லாமல் மாவட்டமே மணல் கொள்ளையால் முக்கால்வாசி சுரண்டப்பட்டுவிட்டது. தேவைக்கு அதிகமான மணல் எடுத்து ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்த நிலையில் மணலைத் திருடி அதை ஸ்டாக் வைத்து பதுக்கிய திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், தி.மு.க வின் தெற்கு ஒன்றியச் செயலாளருமான கோட்டையிருப்பு சண்முகவடிவேல் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததன் பின் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள்லிருந்த 20 க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிகஹ கடத்தியதாகக் கூறி அ.தி.மு.க வின் ஒன்றியச் செயலாளர்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேலு ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டபோது மரங்கள் வெட்டப்பட்டதும் உறுதியானது. அலுவலக வளாகத்திலிருந்த இரண்டு பட்டமரங்களை வெட்ட நிர்வாகத்தினர் ஏலத்தில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் ஏலதாரரான தி.மு.க நகர் இளைஞர் அணி நிர்வாகியான மனோகரன் விடுமுறை நாளில், பட்ட மரங்களுடன் கூடுதலாக அங்கிருந்த பச்சை மரங்களையும் வெட்டியிருப்பதாகவும், வளாகத்திலிருந்த கொன்றை, நாவல், இலவம், மஞ்சனத்தி, வேம்பு உள்ளிட்ட 17 மரங்களை வெட்டியிருப்பதும் தெரியவந்த பின் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெட்டிய மரம் குறித்து வட்டாட்சியர் ஜெயலெட்சுமி திருப்புத்துார் நகர் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகாரளித்த பின் ஏலதாரரான தி.மு.க நிர்வாகி மனோகரன் மீது ஏலத்தில் அனுமதித்ததைவிடக் கூடுதலாக மரங்கள் வெட்டியதாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெட்டப்பட்ட மரங்கள் சண்முகவடிவேலின் தோப்பில் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்வையிட்ட போது அங்கு மணல் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், தோப்பின் உரிமையாளரான ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரான தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் கோட்டையிருப்பு சண்முகவடிவேல் மீது வழக்கு பதிவு செய்தனர். 50 டிப்பர் லாரி மணலும், 450 டிப்பர் லாரி சவுடு மண்ணும் தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக சண்முகவடிவேல் மீது வழக்கு பதிவு செய்திருப்பதை இதையடுத்து வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் ஜெயமணி, திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஐரிஸ் அஸ்மி ஆகியோர் அந்தத் தோட்டத்துக்குச் சென்று அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் கால்நடைகளை வெளியேற்றிய பிறகு, அந்த தோட்டத்துக்கு சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் இருவர் தொடர்ந்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு வீடுகட்டும் திட்டத்திலும் பல ஊராட்சிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்தும் விரைவில் விசாரணை வரலாம் என்ற நிலை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...