முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீடுகள் தோரும் காய்கனித் தோட்டம் மத்திய அரசின் திட்டம்

ஊட்டச்சத்து காய்கறிகளையும் பழங்களையும் முறையாகப் பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டின் பின்தளத்திலும் சமையலுக்கான தோட்டத்தை அமைக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. செப்டம்பர் மாதம் ஊட்ட சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது கே. தேவி பத்மநாபன் – கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி கொவிட் 19 தொற்றுநோயால் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழலில், பொருட்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி 'உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்” என அழைப்பு விடுத்ததுடன், ”சுயசார்ப்பு பாரதம்” திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளுடன் தன்னம்பிக்கை பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள - SAM குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கூடுதல் சத்தான உணவை அளிக்க, ஊட்டச்சத்து - தோட்டங்கள் / சமையலறை தோட்டங்களை அமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். உலக சுகாதார அமைப்பு- WHO தரத்தின்படி, கடுமையான ஊட்டசத்து குறைபாடு கொண்ட (SAM) குழந்தைகளின் எடை-உயர  விகித வித்தியாசம் 3-க்கும் குறைவாக இருக்கும்.  போஷன் மா - ஊட்டச்சத்து மாதத்தில், அங்கன்வாடி தொழிலாளர்களால் சிறப்பு செயலி மூலம் கடுமையான ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஒட்டுமொத்த கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு / SAM நிர்வாகத்தை உள்ளடக்கிய அங்கன்வாடி தொழிலாளர்களுக்கான விரிவான திறன் மேம்பாட்டு செயலிகள் இயக்கப்படும். விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள / SAM குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண சமூக அடிப்படையிலான உணர்திறன் மேற்கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஊட்டசத்து குறைபாடுடைய  குழந்தைகளை அடையாளம் காண்பதுடன், வீட்டு கொல்லைப்புறம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் சமூக மட்டத்திலும் சத்தான சமையலறை தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆரோக்கியமான குழந்தைக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து பெண்கள் மத்தியில், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கப்படுகிறது. அரியலூரில், ஊட்டச்சத்து மாத கண்காட்சியைத் திறந்து வைக்கும் போது மாவட்ட ஆட்சியர் திருமதி டி ரத்னா, கர்ப்பிணிப் பெண்கள் குறைந்தது 10 கிலோ எடை அதிகரிப்பதுடன், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்க நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். அரியலூர் மாவட்டத்தின் ஆறு தொகுதிகளில் 774 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களைச் சேர்ந்த அங்கன்வாடி தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். ஊட்டச்சத்து விழிப்புணர்வு திட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு சமையலறை தோட்டம் அமைக்க கத்திரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், பட்டாணி, சுரைக்காய் விதைகள் மற்றும் கரிம உரம் ஆகியன வழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டத்தின், திருச்சி அதிகாரிகள் வீட்டின் கொல்லைப்புறங்களில் ஊட்டச்சத்து / சமையலறை தோட்டங்களை அமைக்க ஊக்குவிப்பதாக திட்ட அலுவலர் திருமதி டி புவனேஸ்வரி தெரிவித்தார். திருச்சியில் 1850 அங்கன்வாடி மையங்கள் உள்ளன என்று அவர் கூறினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்ட தொழிலாளர்களின் உதவியுடன் வீடுகளில் 1314 க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து தோட்டங்களும், அங்கன்வாடி மையங்களில் 735 ஊட்டச்சத்து தோட்டங்களும், சமூக மட்டத்தில் 155 ஊட்டச்சத்து தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். மொட்டை மாடி தோட்டம் மற்றும் கொல்லைப்புறத்தில் பல வகையான காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக திருமதி பத்மஸ்ரீ கூறினார். அவர் சுரைக்காய், சுண்டைக்காய், புடலங்காய், கத்திரிக்காய், பீன்ஸ், சாலட் வெள்ளரி, காலிஃபிளவர், வெண்டைக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், பட்டாணி, தக்காளி ஆகியவற்றை வளர்த்து வருவதாக தெரிவித்தார். மாட்டு சாணம் உள்ளிட்ட கரிம உரம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொற்றுநோய் காரணமாக ஊரடங்க்கு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் உள்நாட்டில் வளர்க்கப்படும் முருங்கை கீரை, பசலைக்கீரை - கீரை உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்று அவர் கூறினார். மேலும் அவர், இது வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் மூலம் எளிதில் கிடைக்கும் சத்தான உணவை உறுதி செய்கிறது, என்று கூறினார். ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் தோட்டக்கலைகளிலும் ஈடுபடுகிறார்கள். தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு சுய-நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊட்டச்சத்து முக்கியமானது. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு தேவை. சமையலறை தோட்டங்கள் அனைவருக்கும் மலிவு விலையில் சத்தான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய உதவும், மேலும் மக்கள் எந்தவொரு நோய் தொற்றையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள், அதே நேரத்தில் தன்னிறைவு வளரும்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்