முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீடுகள் தோரும் காய்கனித் தோட்டம் மத்திய அரசின் திட்டம்

ஊட்டச்சத்து காய்கறிகளையும் பழங்களையும் முறையாகப் பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டின் பின்தளத்திலும் சமையலுக்கான தோட்டத்தை அமைக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. செப்டம்பர் மாதம் ஊட்ட சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது கே. தேவி பத்மநாபன் – கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி கொவிட் 19 தொற்றுநோயால் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழலில், பொருட்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி 'உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்” என அழைப்பு விடுத்ததுடன், ”சுயசார்ப்பு பாரதம்” திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளுடன் தன்னம்பிக்கை பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள - SAM குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கூடுதல் சத்தான உணவை அளிக்க, ஊட்டச்சத்து - தோட்டங்கள் / சமையலறை தோட்டங்களை அமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். உலக சுகாதார அமைப்பு- WHO தரத்தின்படி, கடுமையான ஊட்டசத்து குறைபாடு கொண்ட (SAM) குழந்தைகளின் எடை-உயர  விகித வித்தியாசம் 3-க்கும் குறைவாக இருக்கும்.  போஷன் மா - ஊட்டச்சத்து மாதத்தில், அங்கன்வாடி தொழிலாளர்களால் சிறப்பு செயலி மூலம் கடுமையான ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஒட்டுமொத்த கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு / SAM நிர்வாகத்தை உள்ளடக்கிய அங்கன்வாடி தொழிலாளர்களுக்கான விரிவான திறன் மேம்பாட்டு செயலிகள் இயக்கப்படும். விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள / SAM குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண சமூக அடிப்படையிலான உணர்திறன் மேற்கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஊட்டசத்து குறைபாடுடைய  குழந்தைகளை அடையாளம் காண்பதுடன், வீட்டு கொல்லைப்புறம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் சமூக மட்டத்திலும் சத்தான சமையலறை தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆரோக்கியமான குழந்தைக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து பெண்கள் மத்தியில், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கப்படுகிறது. அரியலூரில், ஊட்டச்சத்து மாத கண்காட்சியைத் திறந்து வைக்கும் போது மாவட்ட ஆட்சியர் திருமதி டி ரத்னா, கர்ப்பிணிப் பெண்கள் குறைந்தது 10 கிலோ எடை அதிகரிப்பதுடன், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்க நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். அரியலூர் மாவட்டத்தின் ஆறு தொகுதிகளில் 774 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களைச் சேர்ந்த அங்கன்வாடி தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். ஊட்டச்சத்து விழிப்புணர்வு திட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு சமையலறை தோட்டம் அமைக்க கத்திரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், பட்டாணி, சுரைக்காய் விதைகள் மற்றும் கரிம உரம் ஆகியன வழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டத்தின், திருச்சி அதிகாரிகள் வீட்டின் கொல்லைப்புறங்களில் ஊட்டச்சத்து / சமையலறை தோட்டங்களை அமைக்க ஊக்குவிப்பதாக திட்ட அலுவலர் திருமதி டி புவனேஸ்வரி தெரிவித்தார். திருச்சியில் 1850 அங்கன்வாடி மையங்கள் உள்ளன என்று அவர் கூறினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்ட தொழிலாளர்களின் உதவியுடன் வீடுகளில் 1314 க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து தோட்டங்களும், அங்கன்வாடி மையங்களில் 735 ஊட்டச்சத்து தோட்டங்களும், சமூக மட்டத்தில் 155 ஊட்டச்சத்து தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். மொட்டை மாடி தோட்டம் மற்றும் கொல்லைப்புறத்தில் பல வகையான காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக திருமதி பத்மஸ்ரீ கூறினார். அவர் சுரைக்காய், சுண்டைக்காய், புடலங்காய், கத்திரிக்காய், பீன்ஸ், சாலட் வெள்ளரி, காலிஃபிளவர், வெண்டைக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், பட்டாணி, தக்காளி ஆகியவற்றை வளர்த்து வருவதாக தெரிவித்தார். மாட்டு சாணம் உள்ளிட்ட கரிம உரம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொற்றுநோய் காரணமாக ஊரடங்க்கு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் உள்நாட்டில் வளர்க்கப்படும் முருங்கை கீரை, பசலைக்கீரை - கீரை உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்று அவர் கூறினார். மேலும் அவர், இது வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் மூலம் எளிதில் கிடைக்கும் சத்தான உணவை உறுதி செய்கிறது, என்று கூறினார். ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் தோட்டக்கலைகளிலும் ஈடுபடுகிறார்கள். தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு சுய-நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊட்டச்சத்து முக்கியமானது. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு தேவை. சமையலறை தோட்டங்கள் அனைவருக்கும் மலிவு விலையில் சத்தான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய உதவும், மேலும் மக்கள் எந்தவொரு நோய் தொற்றையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள், அதே நேரத்தில் தன்னிறைவு வளரும்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...