முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திக்க்ஷா வலைதளம் ஒரேநாடு ஒரே டிஜிடல் பயிற்சி அமர்வுகள்

திக்க்ஷா வலைதளம்- ஒரு நாடு ஒரே டிஜிட்டல் தளம் தமிழகத்தில் திக்க்ஷாவின் கீழ் 73.28 லட்சம் பயிற்சி அமர்வுகள் நடைபெற்றுள்ளன கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால்  அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, மார்ச் மாத கடைசியில் இருந்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பெருந்தொற்று பரவி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களைத் திறக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளன. பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகின்றன. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.diksha.gov.in  என்ற வலைதளம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு கல்வி குறித்த விவரங்களை அளிக்கும் தனித்துவமான வலைதளமாக விளங்குகிறது. அது அரசின் ஒரு நாடு ஒரே டிஜிடல் தளம் என்னும் நோக்கைப் பிரதிபலிக்கிறது.   நவீன கால ஆசிரியர்கள் டிஜிடல் அறிவைப் பெற்றுள்ளதால், திக்‌ஷா அவர்களுக்கு தேசிய டிஜிடல் கட்டமைப்பாக செயல்படுகிறது. திக்‌ஷா வலைதளம், ஆசிரியர்களுக்கு கல்வியில் தீர்வுகளுக்கு வழி வகை செய்கிறது. ஆசிரியர்கள் தாங்களாகவே கற்றுக்கொண்டு பயிற்சி பெற்று மதீப்பீடு செய்ய இது உதவுகிறது. பயிற்சி அம்சத்தை உருவாக்குதல், சிறப்பு குறிப்புகள், வகுப்பு ஆதாரங்கள், மதிப்பீட்டு உதவி, செய்தி, அறிவிப்பு ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு இது உதவுவதுடன், ஆசிரியர் சமுதாயத்துடன் தொடர்பையும் ஏற்படுத்த பயன்படுகிறது. மாநிலங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகளும், தங்களது இலக்குகள், தேவைகள், திறன்கள் அடிப்படையில் திக்‌ஷாவைப் பயன்படுத்தி ஆசிரியர்களை ஒருங்கிணைக்க முடியும். வகுப்பறை ஆதாரங்கள், ஆசிரியர் பயிற்சி அம்சம், மதிப்பீட்டு உதவிகள், ஆசிரியர் வரலாறு, செய்திகள், அறிவிப்பு ஆகிய திக்‌ஷாவின் அம்சங்களை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சி படிப்புகள், பாடத் திட்டங்கள், கருத்தியல் வீடியோக்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பீட்டு பணித்தாள்கள் போன்ற கற்பித்தல் ஆதாரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களது வலிமை, முன்னேற்றம் ஆகியவற்றைக் கண்டறியலாம்.    ஆசிரியர்கள் தங்களது கைபேசி, மடிக்கணினி மற்றும் இதர உபகரணங்களில்  இந்த விவரங்களை எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இந்த விவரங்கள், உள்ளூர் மொழிகள், பாடத்திட்டத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தப்படும். தமிழகத்தில் இதுவரை, 73.28 லட்சம் பயிற்சி அமர்வுகள் திக்‌ஷாவின் கீழ், நடைபெற்று, பிரபலமடைந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த மூத்த ஆசிரியர் திருமதி ஆனந்தி, ஆன்லைன் கல்வி  மூலம் மாணவர்கள் வகுப்புகளைத் தவற விடுவதில்லை என்று கூறினார். ஜூம் அல்லது கூகுள் சந்திப்பு மூலம் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு பதில் பெறுகின்றனர். தேசிய ஆசிரியர் தளத்தில், ஆசிரியர்களுக்கு வகுப்பறைகள், மேம்பாட்டு வழிமுறைகள், மதிப்பீடு ஆகியவை குறித்த தொடர் கற்பித்தல் முறைகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், அறிவிக்கைகள் பற்றிய தகவல்கள்  உள்ளடங்கியுள்ளன. தேசிய ஆசிரியர் தளம், அனைத்து ஆசிரியர்களுக்கும், எந்த நேரத்திலும், எங்கிருந்தும்  தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும். அது குறைந்தபட்ச, பொதுவாக்கப்பட்ட தொழில்நுட்ப தளம், பல்வேறு நவீன வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும். கற்பித்தல் மற்றும் கற்றல் அம்சங்களுக்கான உபகரணங்களும் அதில் இருக்கும்.    கல்வி என்பது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாகும். அதன் மூலம் அறிவுப் பரவலை, பெருந்தொற்று போன்ற எந்த இடையூறாலும் தடுத்து நிறுத்த முடியாது. கணினி தளங்கள் மூலம் கல்வியைப் பரப்பவும், ஆசிரியர்களுடன் கலந்துரையாடவும் பயன்படும் ஆன்லைன் கல்வி  மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும், கற்றலைத் தடுத்து நிறுத்த  வாய்ப்பளிக்கக் கூடாது  என்பதால், எந்த வித இடையூறும் இன்றி தரமான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு அரசு தொடர்ந்து உதவி வருகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்