முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திர இந்தியாவில் ஹைதராபாத் இணைப்பில் இரும்பு மனிதர் சர்தார் பட்டேல் தீரம்

இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு மொழி வழி மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை எழுந்தததையடுத்து, 1956 ல் நவம்பர் முதல் தேதியன்று இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் என்பது ஆந்திரா, ஹைதராபாத், கேரளா, கர்னாடகா மற்றும் மதராஸ் அனைத்தும் இணைந்து நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. 1938 ஆம் ஆண்டு வார்தாவில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் சுதந்திரமடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிப்பது குறித்து அரசியலமைப்பு நிர்ணய சபையால் என்.கே.தார் தலைமையில் குழு ஒன்றை நிறுவி அக்குழு நாட்டின் ஒற்றுமைக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என அறிக்கையும் வெளியிட்டது.ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறும் போது, 562 சுதேச சமஸ்தான அரசுகள் இருந்தன. அவற்றை இணைத்து இந்தியா ஒரே நாடாக வர சர்தார் படேலுக்கு காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் அரசுகள் மட்டும் உடன்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாதிற்கென்று தனி ராணுவம், ரயில் சேவையும் தபால் துறை போன்ற வசதிகளைக் கொண்டு இந்தியாவின் முதல் தர சுதேச அரசாக இருந்து இயங்கியது . பிரிட்டிஸ் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அரசு என்கிற பெயர் வேறு ஹைதராபாத் அரசுக்கிருந்தது. .ஹைதராபாத். அரசின் பரப்பளவு இங்கிலாந்தையும் ஸ்காட்லாந் தையும் ஒன்று சேர்த்த அளவிற்கு மிகப்பெரிய பரப்பளவு கொண்டு இந்தியாவிலேயே சர்வ வல்லமையோடிருந்த ஹைதராபாத் . அதாவது பாக்ய நகர். அப்போது ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் பகதூர். இந்தியாவுடன் ஹைதராபாதை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஜின்னாவுக்கு அழைப்பு கொடுத்து ஹைதராபாத் பாகிஸ்தானோடு இணைய விரும்புவதாக அறிவித்தார். இதை இந்தியா எதிர்த்து ராணுவ நடவடிக்கைக்குத் தயாரான நேரத்தில் இந்திய- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஹைதராபாத் இந்தியாவோடு தான் இணைய வேண்டும் என அங்கிருந்த ஹிந்துக்கள் சுவாமி இராமானந்த தீர்த்தர் எனும் துறவி தலைமையில் போராட ஆரம்பித்தார்கள். அவர்களை ஹைதராபாத் நிஜாமிற்கு ஆதரவாக நின்ற ரசாக்கர்கள என்கிற இஸ்லாமியர் படை கொன்று குவித்தார்கள். இவர்கள் தலைவனாக காசிம் ரிஸ்வி என்கிற வக்கீல் இருந்தார் இப்பொழுது ஹைதராபாத்தை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கும் அசாதுதீன் உவைசியின் குரு என்று கூடகஹ கூறலாம். உவைசியின் மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் என்கிற அமைப் பின் அப்போதைய தலைவர் தான் இந்த காஸிம்ரிஸ்வி. இந்த அமைப்பு 1911 லியே ஹைதராபாத் நிஜாமால் துவங்கப்பட்ட அமைப்பாகும். இது துவக்கப்பட்ட உடனே ஹைதராபாத் இஸ்லாமிய நாடாக அப்போது அறிவிக்கப்பட்டது. உஸ்மானியா பல்கலைக்கழகத்தை் கொண்டு வந்த ஹைதராபாத் நிஜாம் கல்வி கற்க வரும் ஹிந்து மாணவர்களுக்கு உருது கற்பிக்க வைத்து தெலுங்கை அழித்து மாணவர்களை முழு அளவில் மதம் மாற்றும் வேலைகளைச் செய்து வந்தார். உடன்படாத ஹிந்துக்களை நிஜாமின் கூலிப் படையான ரசாக்கர்கள் அடித்து கொன்றும் ஹைதராபாத்தை விட்டு துரத்தி் விட்டுக் கொண்டும் இருந்தார்கள். . ரசாக்கர்களின் கொடுமை தாங்க முடியாமல் ஆயிரக் கணக்கான ஹிந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தஞ்சம் அடைந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் . வேறு பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் ஹைதராபாத் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று ஹைதராபாத் நோக்கி வந்தார்கள் அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகளும் வழங்கப்பட்டது. இந்த காலத்தில் மட்டும் ஹைதராபாத்தில் குடியேறிய முஸ்லிம் மக்கள் மட்டும் சுமார் ஒரு இலட்சம் அளவில் இருக்கும். ஹைதராபாத் முஸ்லிம் நாடு எங்களை இந்தியாவால் அடக்கி ஆள முடியாது என்கிற கோஷமே ஹைதராபாத்தில் எதிரொலித்தது. இதனால் கோபம் கொண்டு சர்தார் பட்டேல் ஜவகர்லால் நேருவிடம் ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக நிற்கவே, ஆனால் நேருவோ அவசரம். வேண்டாம் பொறுமை காப்போம். என்றார். சுமார் 2 மாத காலம் பொறுமை காத்த சர்தார் படேல் வேறு வழியின்றி,1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஹைதராபாத் சமஸ்தானத் தைக் கைப்பற்ற இந்திய ராணுவத்தை அனுப்பிய நடவடிக்கை 'ஆபரேஷன் போலோ' என்று . இந்திய ராணுவம் பெயர் வைத்தது காரணம். உலகிலேயே அதிக எண்ணிக் கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் தான் இருந்தது. நிஜாம்களுக்கு போலோ விளையாட்டு என்றால் இங்கிலாந்து கணவான்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பது போல் தான் போலோ. நிஜாம்களின் பொழுது போக்குக்கு 17 போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் மட்டும் இருந்தது. அதனால் ஹைதராபாத்தை உலகின் போலோ கிரவுண்ட் என அயல் நாடுகள் அழைத்து வந்தன. ஐந்து நாட்கள் மட்டுமே நீடித்த ஆபரேஷன் போலோ நடவடிக்கையில், ஹைதராபாத் சமஸ்தானத்தின் கூலிப்படை ரஜாக்கர்கள் சுமார் 1500 பேர் கொல்லப்பட்டதோடு ஹைத ராபாத் அரசின் தரப்பில சுமார் 1300 பாதுகாவலர்களும் உயிரிழந்தார்கள். இந்திய ராணுவத்தின் தரப்பில் 66 வீரர்கள் உயிரி ழந்ததாகவும் 97 பேர் காயமடைந்ததாகவும் இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்க ப்பட்ட இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா காலமாகி விட்டதால் ஹைதராபாத் தை முன் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு முழு அளவிலான போர் நிகழாமல் போய் விட்டது என்றே கூறவேண்டும். இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் இந்தியாவிலும் காந்தி இல்லை ஹைதராபாத்தை இந்திய ராணுவம் கைப்பற்றியதும் வீறு கொண்டு எழுந்த ஹிந்துக்கள் ரசாக்கர்கள் அப்பாவி முஸ்லிம்கள் என்று பிரித்து பார்க்காமல் தாக்கியதில் சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஹைதராபாத் 1948 செப்டம்பர் 18 ஆம் தேதி வந்தது. ஹைதராபாத் இராணுவத் தளபதி ஜெனரல் எல்.எட்ரூஸ் இந்திய படைக்கு தலைமை தாங்கி ஆப்பரேசன் போலோவை நடத்தி ஹைதராபாத் தை கைப்பற்றிய மேஜர் சௌத்ரியிடம் சரணடைந்தார். ஹைதராபாத் இந்தியாவின் கைக்கு வந்தவுடன் ரசாக்கர்கள் படை கலைக்கப்பட்டு மஸ்ஜில் இட்டே ஹதுல் முஸ்லிமின் அமைப்பு தடை செய்யப்பட்டது காசிம் ரிஸ்வியை கைது செய்த இந்திய ராணுவம் நேருவின் கட்டளைக்கு ஏற்ப வீட்டுக் காவலில் வைத்தது. காசிம் ரிஸ்வியை எப்படியாவது சிறைக்குள் வைக்க வேண்டும் என்கிற சர்தார் பட்டேலின். முயற்சி கடைசி வரை நேருவிடம் எடுபடவே இல்லை. ஆனால் மக்கள் விடவில்லை. காசிம் ரிஸ்வியை கொலை செய்ய முயற்சித்ததால் வேறு வழியின்றி அவரை சிறையில் அடைத்து வைத்து பின் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் ஜவகர்லால் நேரு. இந்த ஹைதராபாத்தை மீட்கும் ஆப்பரேசன் போலோ நடவடிக்கை கூட நேருவின் விருப்பம் இன்றியே சர்தார் பட்டேல் மேற்கொண்டார். இந்த ஆப்பரேசன் போலோ நடைபெறும் பொழுது காஷ்மீர்க்காக இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் சண்டையில் இருந்ததனால் பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்குவதற்கு ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகானிடம் 20 கோடி ரூபாய் கடன் கேட்டு இருந்தது. நிஜாமும் பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாயை கட்டி வைத்து காத்து கொண்டிருக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து பணத்தை மட்டும் அல்ல ஹைதராபாத் சமஸ்தானத்தையே கைப்பற்றி இந்தியாவோடு இணைத்த சர்தார் பட்டேல் இல்லை என்றால் நவீன இந்தியாவே இல்லை என்று கூறலாம். இரண்டு லட்சம் ரசாக்கர்கள் என்னிடம் இருக்கிறார்கள்.. முடிந்தால் வாருங்கள் மோதிப் பார்ப்போம் என இந்தியாவிடம் சவால் விட்ட நிஜாம்உஸ்மான் அலிகானின் சவாலை ஏற்று சரியாக 100 மணி நேரத்தில் 2 லட்சம் ரசாக்கர்களை பின்னடையச் செய்த இந்திய ராணுவத்திற்கு தலை வணங்கி இந்த திட்டம் முடிந்த பிறகு ஹைதராபாத்துக்கு சென்ற சர்தார் பட்டேலை நிஜாம் உஸ்மான் அலிகான் வணங்கி நின்ற காட்சி தான் இங்குள்ளது. இது வரலாற்று நிகழ்வு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்