முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திர இந்தியாவில் ஹைதராபாத் இணைப்பில் இரும்பு மனிதர் சர்தார் பட்டேல் தீரம்

இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு மொழி வழி மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை எழுந்தததையடுத்து, 1956 ல் நவம்பர் முதல் தேதியன்று இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் என்பது ஆந்திரா, ஹைதராபாத், கேரளா, கர்னாடகா மற்றும் மதராஸ் அனைத்தும் இணைந்து நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. 1938 ஆம் ஆண்டு வார்தாவில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் சுதந்திரமடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிப்பது குறித்து அரசியலமைப்பு நிர்ணய சபையால் என்.கே.தார் தலைமையில் குழு ஒன்றை நிறுவி அக்குழு நாட்டின் ஒற்றுமைக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என அறிக்கையும் வெளியிட்டது.ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறும் போது, 562 சுதேச சமஸ்தான அரசுகள் இருந்தன. அவற்றை இணைத்து இந்தியா ஒரே நாடாக வர சர்தார் படேலுக்கு காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் அரசுகள் மட்டும் உடன்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாதிற்கென்று தனி ராணுவம், ரயில் சேவையும் தபால் துறை போன்ற வசதிகளைக் கொண்டு இந்தியாவின் முதல் தர சுதேச அரசாக இருந்து இயங்கியது . பிரிட்டிஸ் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அரசு என்கிற பெயர் வேறு ஹைதராபாத் அரசுக்கிருந்தது. .ஹைதராபாத். அரசின் பரப்பளவு இங்கிலாந்தையும் ஸ்காட்லாந் தையும் ஒன்று சேர்த்த அளவிற்கு மிகப்பெரிய பரப்பளவு கொண்டு இந்தியாவிலேயே சர்வ வல்லமையோடிருந்த ஹைதராபாத் . அதாவது பாக்ய நகர். அப்போது ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் பகதூர். இந்தியாவுடன் ஹைதராபாதை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஜின்னாவுக்கு அழைப்பு கொடுத்து ஹைதராபாத் பாகிஸ்தானோடு இணைய விரும்புவதாக அறிவித்தார். இதை இந்தியா எதிர்த்து ராணுவ நடவடிக்கைக்குத் தயாரான நேரத்தில் இந்திய- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஹைதராபாத் இந்தியாவோடு தான் இணைய வேண்டும் என அங்கிருந்த ஹிந்துக்கள் சுவாமி இராமானந்த தீர்த்தர் எனும் துறவி தலைமையில் போராட ஆரம்பித்தார்கள். அவர்களை ஹைதராபாத் நிஜாமிற்கு ஆதரவாக நின்ற ரசாக்கர்கள என்கிற இஸ்லாமியர் படை கொன்று குவித்தார்கள். இவர்கள் தலைவனாக காசிம் ரிஸ்வி என்கிற வக்கீல் இருந்தார் இப்பொழுது ஹைதராபாத்தை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கும் அசாதுதீன் உவைசியின் குரு என்று கூடகஹ கூறலாம். உவைசியின் மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் என்கிற அமைப் பின் அப்போதைய தலைவர் தான் இந்த காஸிம்ரிஸ்வி. இந்த அமைப்பு 1911 லியே ஹைதராபாத் நிஜாமால் துவங்கப்பட்ட அமைப்பாகும். இது துவக்கப்பட்ட உடனே ஹைதராபாத் இஸ்லாமிய நாடாக அப்போது அறிவிக்கப்பட்டது. உஸ்மானியா பல்கலைக்கழகத்தை் கொண்டு வந்த ஹைதராபாத் நிஜாம் கல்வி கற்க வரும் ஹிந்து மாணவர்களுக்கு உருது கற்பிக்க வைத்து தெலுங்கை அழித்து மாணவர்களை முழு அளவில் மதம் மாற்றும் வேலைகளைச் செய்து வந்தார். உடன்படாத ஹிந்துக்களை நிஜாமின் கூலிப் படையான ரசாக்கர்கள் அடித்து கொன்றும் ஹைதராபாத்தை விட்டு துரத்தி் விட்டுக் கொண்டும் இருந்தார்கள். . ரசாக்கர்களின் கொடுமை தாங்க முடியாமல் ஆயிரக் கணக்கான ஹிந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தஞ்சம் அடைந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் . வேறு பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் ஹைதராபாத் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று ஹைதராபாத் நோக்கி வந்தார்கள் அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகளும் வழங்கப்பட்டது. இந்த காலத்தில் மட்டும் ஹைதராபாத்தில் குடியேறிய முஸ்லிம் மக்கள் மட்டும் சுமார் ஒரு இலட்சம் அளவில் இருக்கும். ஹைதராபாத் முஸ்லிம் நாடு எங்களை இந்தியாவால் அடக்கி ஆள முடியாது என்கிற கோஷமே ஹைதராபாத்தில் எதிரொலித்தது. இதனால் கோபம் கொண்டு சர்தார் பட்டேல் ஜவகர்லால் நேருவிடம் ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக நிற்கவே, ஆனால் நேருவோ அவசரம். வேண்டாம் பொறுமை காப்போம். என்றார். சுமார் 2 மாத காலம் பொறுமை காத்த சர்தார் படேல் வேறு வழியின்றி,1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஹைதராபாத் சமஸ்தானத் தைக் கைப்பற்ற இந்திய ராணுவத்தை அனுப்பிய நடவடிக்கை 'ஆபரேஷன் போலோ' என்று . இந்திய ராணுவம் பெயர் வைத்தது காரணம். உலகிலேயே அதிக எண்ணிக் கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் தான் இருந்தது. நிஜாம்களுக்கு போலோ விளையாட்டு என்றால் இங்கிலாந்து கணவான்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பது போல் தான் போலோ. நிஜாம்களின் பொழுது போக்குக்கு 17 போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் மட்டும் இருந்தது. அதனால் ஹைதராபாத்தை உலகின் போலோ கிரவுண்ட் என அயல் நாடுகள் அழைத்து வந்தன. ஐந்து நாட்கள் மட்டுமே நீடித்த ஆபரேஷன் போலோ நடவடிக்கையில், ஹைதராபாத் சமஸ்தானத்தின் கூலிப்படை ரஜாக்கர்கள் சுமார் 1500 பேர் கொல்லப்பட்டதோடு ஹைத ராபாத் அரசின் தரப்பில சுமார் 1300 பாதுகாவலர்களும் உயிரிழந்தார்கள். இந்திய ராணுவத்தின் தரப்பில் 66 வீரர்கள் உயிரி ழந்ததாகவும் 97 பேர் காயமடைந்ததாகவும் இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்க ப்பட்ட இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா காலமாகி விட்டதால் ஹைதராபாத் தை முன் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு முழு அளவிலான போர் நிகழாமல் போய் விட்டது என்றே கூறவேண்டும். இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் இந்தியாவிலும் காந்தி இல்லை ஹைதராபாத்தை இந்திய ராணுவம் கைப்பற்றியதும் வீறு கொண்டு எழுந்த ஹிந்துக்கள் ரசாக்கர்கள் அப்பாவி முஸ்லிம்கள் என்று பிரித்து பார்க்காமல் தாக்கியதில் சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஹைதராபாத் 1948 செப்டம்பர் 18 ஆம் தேதி வந்தது. ஹைதராபாத் இராணுவத் தளபதி ஜெனரல் எல்.எட்ரூஸ் இந்திய படைக்கு தலைமை தாங்கி ஆப்பரேசன் போலோவை நடத்தி ஹைதராபாத் தை கைப்பற்றிய மேஜர் சௌத்ரியிடம் சரணடைந்தார். ஹைதராபாத் இந்தியாவின் கைக்கு வந்தவுடன் ரசாக்கர்கள் படை கலைக்கப்பட்டு மஸ்ஜில் இட்டே ஹதுல் முஸ்லிமின் அமைப்பு தடை செய்யப்பட்டது காசிம் ரிஸ்வியை கைது செய்த இந்திய ராணுவம் நேருவின் கட்டளைக்கு ஏற்ப வீட்டுக் காவலில் வைத்தது. காசிம் ரிஸ்வியை எப்படியாவது சிறைக்குள் வைக்க வேண்டும் என்கிற சர்தார் பட்டேலின். முயற்சி கடைசி வரை நேருவிடம் எடுபடவே இல்லை. ஆனால் மக்கள் விடவில்லை. காசிம் ரிஸ்வியை கொலை செய்ய முயற்சித்ததால் வேறு வழியின்றி அவரை சிறையில் அடைத்து வைத்து பின் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் ஜவகர்லால் நேரு. இந்த ஹைதராபாத்தை மீட்கும் ஆப்பரேசன் போலோ நடவடிக்கை கூட நேருவின் விருப்பம் இன்றியே சர்தார் பட்டேல் மேற்கொண்டார். இந்த ஆப்பரேசன் போலோ நடைபெறும் பொழுது காஷ்மீர்க்காக இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் சண்டையில் இருந்ததனால் பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்குவதற்கு ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகானிடம் 20 கோடி ரூபாய் கடன் கேட்டு இருந்தது. நிஜாமும் பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாயை கட்டி வைத்து காத்து கொண்டிருக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து பணத்தை மட்டும் அல்ல ஹைதராபாத் சமஸ்தானத்தையே கைப்பற்றி இந்தியாவோடு இணைத்த சர்தார் பட்டேல் இல்லை என்றால் நவீன இந்தியாவே இல்லை என்று கூறலாம். இரண்டு லட்சம் ரசாக்கர்கள் என்னிடம் இருக்கிறார்கள்.. முடிந்தால் வாருங்கள் மோதிப் பார்ப்போம் என இந்தியாவிடம் சவால் விட்ட நிஜாம்உஸ்மான் அலிகானின் சவாலை ஏற்று சரியாக 100 மணி நேரத்தில் 2 லட்சம் ரசாக்கர்களை பின்னடையச் செய்த இந்திய ராணுவத்திற்கு தலை வணங்கி இந்த திட்டம் முடிந்த பிறகு ஹைதராபாத்துக்கு சென்ற சர்தார் பட்டேலை நிஜாம் உஸ்மான் அலிகான் வணங்கி நின்ற காட்சி தான் இங்குள்ளது. இது வரலாற்று நிகழ்வு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...