முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீதி வியாபாரத்திற்கு பிரதமர் ஸ்வநிதி கடனுதவித் திட்டம் 12.59 லட்சம் வியாபாரிகள் பலன்

பிரதமர் ஸ்வநிதி திட்டம் வீதி வியாபாரிகளுக்கான கடனுதவி 25 லட்சம் விண்ணப்பதாரர்களில் 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டது பிரதமர் ஸ்வநிதி திட்டம் எனப்படும் பிரதமர் வீதி வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம், கோவிட்-19 பெருந்தொற்று பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வீதியோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வீதம் கடனுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 12.59 லட்சம் வியாபாரிகளுக்கு ரூ. 10,000 விதம் கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஸ்வநிதி திட்டத்தின் கீழ், நகர்ப்புற வீதியோர வியாபாரிகள் தொழில் முதலீட்டு கடனாக ரூ.10,000 பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர். இந்தக் கடனை ஓராண்டில் மாதாந்திர தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். இக்கடனுக்கு வணிக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு வங்கிகள் ஆகியவை எவ்வித உத்தரவாதத்தையும் கேட்பதில்லை. உரிய காலத்தில் திருப்பி செலுத்தப்படும் நிகழ்வில், மேலும் அடுத்த சுற்று கடனும் வழங்கப்பட்டு சலுகை  நீட்டிப்பு  அளிக்கப்படும். உரிய காலத்திற்கு முன்னதாக கடனைத் திருப்பிச் செலுத்துவோரிடம் எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ், கடனுதவி பெறுவோர் 7 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கு தகுதி பெறுவர். வீதி வியாபாரிகள் இச்சலுகையைப் பெறுவதற்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும், ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31, மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  டிஜிடல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மாதாந்திர கேஷ்பேக் சலுகையையும் பெறலாம். திருச்சி மாநகரத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்றது. வீதியோர வியாபாரிகளுக்கு எவ்வித தாமதமும் இன்றி கடனுதவி வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீதியோர வியாபாரிகள் தங்கள் கடன் விண்ணப்பங்களை நேரடியாக, மாநாகராட்சி அலுவலகங்கள், மகளிர் திட்டம் மூலமாகவோ அல்லது  www.pmsvanidhi.mohua.gov.in வலைதளம் மூலமோ அளிக்கலாம். 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட வீதி வியாபாரிகள் இதற்கான பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும். திருச்சி மாநராட்சி, ஶ்ரீங்கம் மண்டலத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், 1281 வியாபாரிகளை அடையாளம் கண்டுள்ளது. கடன் பெற்ற வீதி வியாபாரிகள் தங்கள் கடனை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். திருச்சி மாநராட்சியில் பதிவு செய்யப்பட்ட 3,940 வியாபாரிகளில், பெரும்பாலோர் என்எஸ்பி சாலை, பெரிய பஜார் வீதி, தெப்பக்குளம், சிங்காரத்தோப்பு ஆகிய ஶ்ரீங்கம் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தீபாவளி சமயத்தில் இந்த கடனுதவி சரியான பயனை அளித்துள்ளதாக வீதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் வெளியில் வந்து, குறிப்பாக பண்டிகை சமயங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதால், தங்களுக்கு பயன் அளிப்பதாக உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். பிரதமர் ஸ்வநிதி திட்டம், வீதி வியாபாரிகள் தங்கள் விற்பனை பொருட்களை வாங்க உதவியுள்ளது. பெரும்பாலான வீதி வியாபாரிகள் விடுமுறை விற்பனையையே நம்பியுள்ளனர். விடுமுறையின் போது, என்எஸ்பி சாலையில் மக்கள் கூடி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். பெருந்தொற்று முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட வீதியோர வியாபாரிகள் தன்னிறைவு பெறுவதற்கு  ஸ்வநிதி திட்டம் நிச்சயம் உதவும். இந்த பண்டிகை பருவம், நெருக்கடியிலிருந்து அவர்கள் மீளுவதற்கு விற்பனையை அதிகரிக்கும். அதேசமயம், பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளை பராமரிப்பது அவசியமாகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...