முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விருதுநகர் போலவே சேலத்தில் பதிவுத்துறை துணைத்தலைவர் சிக்கினார் பலகோடி சொத்துகள்

சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறை துணைத் தலைவர் வீட்டில் ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை சேலம் மண்டல பத்திரப்பதிவு துறை துணைத் தலைவர் ஆனந்த் நேற்று கடலூருக்குப் பணி மாற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு துணைத் தலைவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தியதை அறிந்த சேலம் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் ஐந்துரோடு பகுதியில் உள்ள ஆனந்த் வீடு மற்றும் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து ரொக்கப் பணம் ரூ 3 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 13 லட்சம் மதிப்புள்ள 34 தங்க காசுகளையும் பறிமுதல் செய்தனர் பத்திரப்பதிவு துணை தலைவர் ஆனந்த் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிந்து தொடர்ந்து துணைத் தலைவரிடம் விசாரணை நடக்கிறது சேலம் மண்டல பத்திரப்பதிவு துறை துணைத் தலைவர் வீட்டில் சோதனை நடந்தது. சமீபத்தில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலக அறையில் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்தை இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலைச் சேர்ந்த விஷ்ணுபரண் (வயது 37) என்பவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் குரூப்-1 தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் பெற்றவர். இவரது அலுவலகத்திற்கு பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பல்வேறு காரணங்களுக்காக நேரடியாக வந்து இலஞ்சப் பணம் கொடுப்பதாக இலஞ்ச ஒழிப்புப் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததன்பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா ஆகியோர் கண்காணிப்பு அலுவலர் பொன்ராஜ் தலைமையில் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தைக் கண்காணித்தனர். அப்போது வெம்பக்கோட்டை யூனியன் ரெங்கபாளையம் பஞ்சாயத்துத் துணை தலைவர் ராமர் என்பவர் உதவி இயக்குனர் அலுவலகத்திற்குள் சென்றார். இதைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு காவல்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்ததையடுத்து அவர்கள் இராமரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் திட்ட வேலை நிர்வாக அனுமதி பெற ரூ.20 ஆயிரம் இலஞ்சம் கொடுக்க வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்ததனைத் தொடர்ந்து காவல்துறை அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்ததையடுத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்த விஷ்ணுபரணின் டிரைவர் சரவணகுமார் (வயது 50) என்பவரை சோதனை செய்த போது அவரின் கால்சட்டை பையில் ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்த அவர் அந்த பணத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் கிடந்ததாகவும், அதனை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய தகவல் நம்ப முடியாத நிலையில், போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்படி பணம், பல்வேறு பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் இலஞ்சமாகப் பெற்றது தெரியவந்ததையடுத்து அந்தப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விஷ்ணுபரண், சரவணக் குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரியிடமும், டிரைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் சேலத்தில் மேற்கண்ட அதிரடி சோதனை நடந்தது. சேலம் பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி ஆனந்த் அவர்களின் முறைகேடான சொத்து குவிப்பு அறிக்கை பின்வருமாறு' என்ற தலைப்பில் தொடங்கும் அந்த நோட்டீஸில் `வாராந்திர கந்து வட்டி கலெக்‌ஷன்: ஐ.ஜி., உத்தரவு மீறி ஜூனியர்களுக்குப் பொறுப்பு போட்டு சம்பாதித்தது என ஒரு பெரும் பட்டியலே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம் மேற்கு போன்ற மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தொடர்ந்து அதில், ``பொறுப்புப் பதவிகள் மூலம் மாதாந்திர கலெக்‌ஷன் 20 லட்சத்து 40 ஆயிரம். பொறுப்பு பதவிகள் மூலம் வருடாந்திர கலெக்‌ஷன் சுமார் 2 கோடியே 45 லட்சம். கடந்த 4 வருடத்தில் சுமார் 10 கோடி. இது தவிர சேலத்தில் சுமார் 60 அலுவலகங்களில் மாதாந்திர கலெக்‌ஷன் சுமார் 120 லட்சம். ஒரு வருட சேலம் மண்டலத்தில் கலெக்‌ஷன் 15 கோடிகள். கடந்த 4 வருடத்தில் மொத்தம் 60 கோடிகள்.இது தவிர லேஅவுட் நிர்ணயம், லேஅவுட் முறையீடு என இவரது கலெக்‌ஷன் பல 100 கோடிகளைத் தாண்டும். மிகவும் குறைவாகப் பார்த்தாலும் கடந்த 4 வருடத்தில் இவரது சேலம் மண்டல கலெக்‌ஷன் குறைந்தது 200 கோடிகளைத் தாண்டும். சேலத்தில் 4 வருடத்திலேயே 200 கோடி என்றால் இவரது ஒட்டு மொத்தப் பணியில் சேர்ந்த நாள்முதல் கலெக்‌ஷன் 400 கோடிகளைத் தாண்டும். அரசியல்வாதிகளை விஞ்சும் அளவுக்கு ஊழல் புரியும் ஆனந்த் டி.ஐ.ஜி., இந்த ஊழல் பணத்தில் ஐ.ஏ.எஸ்., ஆக முயல்கிறார். இவர் ஐ.ஏ.எஸ் ஆனால் தமிழ்நாட்டையே விற்று விடுவார். சேலம் மண்டல டி.ஐ.ஜி ஆனந்த்தின் கலெக்‌ஷன் ஏரியாக்கள்: கிருஷ்ணகிர் உதவி டி.ஆர் அலுவலகம், சூளகிரி எஸ்.ஆர் பாய்கர், ஓசூர் எஸ்.ஆர் நேருஜி, தர்மபுரி எஸ்.ஆர் ராசிகண்ணு, நாமக்கல் எஸ்.ஆர் சுந்தர வடிவேல், திருச்செங்கோடு எஸ்.ஆர் தமிழ்ச்செல்வன், பரமத்திவேலூர் ஓ.ஏ ஷஃபி, தர்மபுரி எஸ்.ஆர் திருப்பதி, மகுடஞ்சாவடி எஸ்.ஆர் சசிந்தர். சேலம் டி.ஐ.ஜி ஆனந்த் ஜீப் வரும் வழியில் இவர்கள் முன்கூட்டியே கலெக்‌ஷன் செய்து பணத்தை ஒப்படைக்க, அவர் ரயிலில் ஏறி சென்னை விரைந்து விடுவார்'' என நீளும் இந்தக் கடிதத்தில்... லேஅவுட் நிர்ணயம், முறையீடு வெற்றிகரமாக முடித்தால் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டி என லிஸ்ட் நீளும். வேறு வழியின்றி இவர் கையெழுத்துக்காக பலரின் தலையெழுத்து மாறியுள்ள தகவல் அதிர்ச்சியாகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்