முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் பாதை சகாயம் ஐ ஏ எஸ் விருப்ப ஓய்வும் விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் நகர்வும் ஒரே பாதைக்கு வருகிறதா

சகாயம் விருப்ப ஓய்வு விண்ணப்பமும் விஜயின் அரசியல் பிரவேசமும் தயாராகிறதா களம் சகாயத்திற்காக நடிகர் விஜய் அரசியல் வாய்ஸ் தரப்போகிறார் என பல தகவல் அரசபுரசலாக வரவே உண்மைத்தகவல் எது என்பது அறிய மக்கள் ஆவலாகக் காத்திருக்க வருகிறாரா விஜய், `சரி, அப்படியென்றால், நாம் நேரடி அரசியலில் களமிறங்கலாமா, அது எப்போது தனித்தா, கூட்டணியா?’ என வரிசையாகக் கேள்வி அடுக்கியிருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா எனத் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஒருதரப்பில் காருத்தும் வருகிறது. தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சேலம், நாகப்பட்டினம், கடலூர், சென்னையில் நாம் மிக வலிமையாக இருக்கிறோம். கிட்டத்தட்ட 175 தொகுதிகள் வரை நாம் முழுமையாக பூத் கமிட்டியை அமைத்திருக்கிறோம். இப்போது தேர்தலில் நின்றாலும் சுமார் 70 தொகுதிகளில் ஜெயிக்கலாம். கூட்டணி என்றால் ஆளும்கட்சிக்கு எதிரான கூட்டணியை அமைத்தால் சரியாக இருக்கும். தனித்தே நாம் ஆட்சியதிகாரத்தை வெல்ல வேண்டுமென்றால் 2026 ல் முடியும். அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 2021 நிச்சயம், 2026 இலட்சியம்' என்று ஆர்வத்தோடு பலர் தெரிவிக்க எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு `இப்போ சுமார் 10 மாவட்டங்களில் சேவை செய்யும் விலையில்லா விருந்தகத்தை எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துங்க. இப்போ தினமும்,109 பேருக்கு உணவளிக்கிறீங்க. இந்த எண்ணிக்கையையும் அதிகப்படுத்துங்க. உலகத்துல பசியை போக்குறதைவிட எதுவும் பெரிய விஷயம் இல்லை. கொரோனா இன்னும் முழுசா முடிந்தபாடில்லை. எனவே, பாதுகாப்பாக இருங்க' எனச் சுருக்கமாக விஜய் முடித்துக்கொள்ள, அவரிடம் மத்திய மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளோ , `வரும் தேர்தலில் நாங்கள் சுயேச்சையாகப் போட்டியிடலாமா?' என்று கேட்டிருக்கிறார்கள். `எந்தக் கட்சியையும் சாராமல், ஓட்டுக்குப் பணம் தராமல் போட்டியிடலாம். மக்களுக்குச் சேவை செய்வது நல்ல விஷயம்தானே' என்றார் விஜய். `அப்படியென்றால் மக்கள் இயக்கக் கொடியைப் பயன்படுத்தலாமா?' என இயக்கத்தினர் வேடிக்கையாகக் கேட்க, அதற்கு வழக்கமான புன்னகையையே பதிலாகக் கொடுத்திருக்கிறார் விஜய். `ஓ.கே சொல்லவில்லைதான். ஆனால், எதிர்க்கவுமில்லை. ஒண்ணு மட்டும் புரியுதுங்க...மக்கள் பாதை வழிக்கு மக்கள் இயக்கம் செல்ல வாய்ப்பு அதிகம் அவர் மனசுல ஏதோ திட்டமிருக்குங்க’’ என்கின்றனர் உற்சாகம் குறையாமல் ரசிகர்கள். விஜய் மக்கள் இயக்கத்தினரின் கருத்துகளின் மூலம் விஜய்யின் எண்ண ஓட்டத்தை அனுமானிக்க முடிந்தாலும் மற்றொருபுறம், சமீபத்தில், ``விஜய் மக்கள் இயக்கம், மக்கள் விருப்பப்படும்போது அரசியல் கட்சியாக மாற்றம் பெறும் . மக்கள் அழைக்கும்போது நாங்கள் வருவோம்’’ என்று விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்ததை விஜய் அதிகம் எதிர்க்கவில்லை என்கின்ற ரசிகர்கள் தனது அப்பாவைப் பொது இடங்களில் சந்தித்தால், பேசுவதைக் கடந்து, பல ஆண்டுகளாகவே அவரிடமிருந்து தள்ளியே இருந்து வருகிறார் விஜய். குறிப்பாக, மக்கள் இயக்கத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டிருந்த பாஸ்கர், செல்வகுமார் போன்றவர்களுடன் எஸ்.ஏ.சி தொடர்பில் தான் இருக்கிறார். மக்கள் இயக்கத்திலிருந்தாலும் டம்மியாக்கப்பட்டிருக்கும் குமார், ரவிராஜா போன்றவர்களும் எஸ்.ஏ.சி-யோடு நெருக்கமானவர்கள். இவர்கள் சமீபத்தில் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைமைகளைத் தொடர்புகொண்டு, `வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம், கூட்டணி வைக்கலாமா என்று அப்பா ( எஸ்.ஏ.சி) கேட்கிறார்' எனப் பல கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் விஜய் தெரியாமலா `விஜய் பா.ஜ.க-வுக்கு சாதகமாகச் செயல்படப் போகிறார்’ என்று பரவும் வதந்திக்கெல்லாம்கூட இந்த குரூப்தான் காரணம் என ரொம்பவே கோபப்பட்டார் விஜய். இதையெல்லாம் வைத்துத்தான் `மக்கள் இயக்கம்' தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், அரசியல் உள்ளிட்ட எந்தக் கருத்தும், தான் சொன்னால் மட்டுமே உண்மை' என உணர்த்தவும், இயக்கத்தினர் தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என தெரியப்படுத்தவுமே தற்போது பனையூரில் நிர்வாகிகளைச் சந்தித்தார் விஜய்’’ பாஸ்கர் என்பவர் தற்போது பா.ஜ.க-வில் இருக்கிறார். இவர் மூலமாகவும் பா.ஜ.க-வினர் எஸ்.ஏ.சி-யை வளைக்க முயல்வதாகவும் எஸ்.ஏ.சி-யைப் பொறுத்தவரை, `பா.ஜ.க-வில் இணையும் எண்ணம் இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது தன்னைச் சுற்றி நடக்க வேண்டும் எனக் கருதுகிறார். இந்தத் தேர்தலிலேயே அவரை நேரடி அரசியலுக்குக் கொண்டு வரணும், தான் ஆதிக்கம் செலுத்தியபோது இருந்த மக்கள் இயக்கத்தின் பல மாவட்ட நிர்வாகிகளையும் கன்ட்ரோல் எடுத்து தன்னுடைய பலத்தை நிரூபிக்கணும் எனக் கருதுகிறார் அவர். அதையொட்டித்தான் தன்னுடைய வலது, இடது கரம்போல இருக்கும் ரவிராஜா, குமாரைப் பயன்படுத்திக்கொள்கிறார். மேலும், பி.ஜே.பி தன்னோடு பேசிவருகிறது என்ற பேச்சையும் பரவச் செய்து, அதன் மூலம் தன்னுடைய இருப்பையும் வெளிக்காட்ட முயல்கிறார்.மாஸ்டர்’ படம் எப்போது ரிலீஸ் என்பதை எந்த அளவுக்கு உறுதியாக சொல்லிவிட முடியாதோ, அதேபோலத்தான் `2021-ல் மாஸ்டர் விஜயின்’ கட்சி உதயமும் என்பதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாதபடி விஜய்யைச் சுற்றி பட்டிமன்றமே நட்தினாலும் மாஸ்டரைச் சுற்றி பல ரிங்மாஸ்டர்கள் சர்க்கஸ் நடக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்