முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதப் பிரதமர் குஜராத்தில் பல திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்தார்

பிரதமர் அலுவலகம் சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவை தொடங்கி வைத்தார் பிரதமர் கெவாடியா வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் ஒற்றுமை படகு சேவை தொடக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கெவாடியா ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் 4 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.  புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  வனப் பயணம் மற்றும் பிரம்மாண்ட பறவைகள் கூண்டு: சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவில் உள்ள பிரம்மாண்ட பறவைகள் கூண்டு பற்றி பிரதமர் கூறுகையில், ‘‘ இந்த உயரமான பறவைகள் கூண்டு, பறவைகளை ரசிப்பர்களுக்கு மகிழ்ச்சி  அளிக்க கூடியதாக  இருக்கும். கெவாடியாவுக்கு வந்து, உயிரியல் பூங்காவில் உள்ள இந்த பறவைகள் கூண்டை பாருங்கள். இது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்’’ என்றார். மிக நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள  உயிரியல் பூங்கா, 375 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. 29 மீட்டர் முதல் 180 மீட்டர் உயரம் வரை 7 விதமான இடங்கள் இங்கு உள்ளன. இங்கு 1100 பறவைகள், விலங்குகள் மற்றும் 5 லட்சம் தாவரங்கள் உள்ளன. இது மிகவும் விரைவாக உருவாக்கப்பட்ட உயிரியல் பூங்கா. இதில் இரண்டு விதமான பறவை கூண்டுகள் உள்ளன. ஒன்றில் உள்நாட்டு பறவைகளும், மற்றொன்றில் கவர்ச்சிகரமான பறவைகளும் உள்ளன.  இது பறவைகளுக்கான உலகின் மிகப் பெரிய கூண்டு. இதைச் சுற்றிலும் செல்ல பிராணிகளின் மண்டலம் உள்ளது. இங்குள்ள பஞ்சவர்ண கிளி, அழகு கிளிகள், முயல்கள், அழகு எலிகள் ஆகியவற்றை தொட்டு பார்த்து மகிழ்ச்சியடையலாம். ஒற்றுமை படகு சேவை: ஒற்றுமை படகு  சவாரி மூலம் ஒருவர், ஷ்ரஸ்தா பாரத் பவனிலிருந்து, ஒற்றுமை சிலை அமைந்துள்ள பகுதியை  6 கி.மீ தூரத்துக்கு 40 நிமிடங்கள் சுற்றி பார்க்க முடியும். இதற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள நவீன படகில் ஒரே நேரத்தில் 200 பேர் பயணம் செய்யலாம்.  இந்த படகு சேவை செயல்பாட்டுக்காக புதிய கோரா பாலம் கட்டப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலையை, சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காகவே, படகு வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்தார் சரோவர் அணையில் சக்திவாய்ந்த மின் விளக்குகள்: பிரதமர் தொடங்கி வைத்தார் ஐ.நா.வின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும்,ஒற்றுமை சிலை இணையதளம் தொடக்கம் கெவாடியா கைப்பேசி செயலி தொடக்கம் மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒற்றுமை தோட்டம் தொடக்கம் சர்தார் சரோவர் அணையில் சக்திவாய்ந்த மின் விளக்குகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஐ.நா.வின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் உருவாக்கப்பட்ட ஒற்றுமை சிலை இணையதளம், மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒற்றுமை தோட்டத்தில், கெவாடியா கைப்பேசி செயலி ஆகியவற்றையும்  பிரதமர் தொடங்கி வைத்தார். அழகு கற்றாழை செடிகள் தோட்டத்தையும், பிரதமர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஒற்றுமை தோட்டம் இது 3.61 ஏக்கரில் அமைந்திருக்கும் தனிச்சிறப்பான பொழுது போக்கு பூங்கா. இதில் மின் விளக்குகளால் ஒளிரும் கண்ணாடி  மாயத் தோற்றங்கள், உருவங்கள் இடம் பெற்றுள்ளன.  இந்த இரவு சுற்றுலா அனுபவத்தை ரசிக்க, அனைத்து சுற்றுலா பயணிகளையும் பிரதமர்  வரவேற்கவுள்ளார். கற்றாழை தோட்டம் இந்த பிரம்மாண்ட பசுமை தோட்டத்தில், 17 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட  450 தேசிய மற்றும் சர்வதேச  வகைகள் உள்ளன. 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில், 1.9 லட்சம் கற்றாழை செடிகள் உட்பட 6 லட்சம் தாவரங்கள் உள்ளன


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...