நடிகை சித்ராவின் கணவர் கைது விசாரணை தீவிரம்
. ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கியுள்ளார். சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணனிடம் விசாரணை நடந்தது. சித்ராவின் கணவர் ஹேமந்தை நசரத்பேட்டை காவல்துறையினர் ஆறாவது நாளாக நடத்திய விசாரணையில் சித்ராவைத் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டார் மேலும் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு சித்ராவின் படப்பிடிப்புத் தளத்திற்கே சென்று சண்டையிடுவாரென விசாரணையில் தெரிந்தது. மேலும்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' எனும் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்ததில் கணவர் சித்ரா மீது நடத்தையில் சந்தேகம் கொண்டு சண்டையிட்டு வந்ததாகத் தெரிகிறது. நடிப்புத் தொழில் மாத்திரமல்ல ஒரு ஊடக உளவியல் பட்டதாரியும் மக்கள் தொலைக்காட்சியில் பணிசெய்தவர் என்ற பபன்முகத்தன்மை கொண்டவர் சித்ரா இழப்பும் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை என்பதால் விசாரணை தீவிரமாக நடந்தது.
கருத்துகள்