சுங்கத்துறை நடவடிக்கைகள் முதலாவதாக.
ரூ 81.4 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ 6.6 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல், ஒருவர் கைது.
சென்னையை சேர்ந்த ஜாகிர் உசேன், 40, என்பவர், இண்டிகோ விமானம் மூலம் சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த நிலையில், வெளிநாட்டு பணத்தை
அனுமதியின்றி அவர் எடுத்துச் செல்வதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து புறப்பாடு முனையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது உடைமைகளை சோதனையிட்டபோது, அவரது கைப்பையில் இருந்து ரூபாய் 6.6 லட்சம் மதிப்புடைய 7,500 யூரோக்கள் கண்டறியப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், துபாயில் இருந்து சென்னை வந்த விமானங்களில் ஐந்து தங்கக் கடத்தல் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஃபிளை துபாய் விமானத்தில் சென்னை வந்திறங்கிய திருச்சிராப்பள்ளியை சேர்ந்த முகமது இத்ரீஸ், 25, ராமேஸ்வரத்தை சேர்ந்த முகமது இர்பான், 36, மற்றும் லியாகத் அலி, 36, ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் வெளியே செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்டபோது உடலுக்குள் மறைத்து வைத்து ஏழு பொட்டலங்களில் தங்கப் பசையை கடத்தி வந்தது தெரியவந்தது. 1.33 கிலோ எடையுடைய ரூபாய் 67.1 லட்சம் மதிப்புடைய 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த அபுபக்கர் சித்திக், 21, மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹிர், 21, ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனை செய்து பார்த்தபோது ஜீன்ஸ் கால் சட்டைப்பைக்குள் தங்க பசையை மறைத்து வைத்து தைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து 285 கிராம் எடையுடைய ரூபாய் 14.34 லட்சம் மதிப்புடைய 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் ரூ 81.4 லட்சம் மதிப்புள்ள 1.62 கிலோ தங்கம், ரூ 6.6 லட்சம் மதிப்புள்ள 7,500 யூரோக்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையர் செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார். இரண்டாவதாக மேலும் மற்றொரு சம்பவம்.
மருந்து கட்டு, ஜீன்ஸ் உடையுள் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 14.73 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்
இன்று துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 1644 என்னும் விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 27 வயதான திரு அஹமத் அனாஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் அவரது உடலில் மருந்து கட்டு போடப்பட்டு இருப்பதையும், சந்தேகத்தின் பெயரில் அதனை சோதனையிட்டதில் அதனுள் 168 கிராம் எடையில் இரண்டு தங்கப் பசை பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இடமிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பில் 147 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று துபாயிலிருந்து ஏர் இந்தியா ஏஐ 906 விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 48 வயதான திரு ஜும்மா கான் மற்றும் 46 வயதான திரு முகமது ரஃபி ஆகியோரை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர். அவர்களை சோதனையிட்டதில், அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் உடையின் உள்ளே 176 கிராம் எடையுள்ள 4 தங்க பொட்டலங்கள் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 7.23 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு சம்பவங்களில் இருந்தும் மொத்தம் 289 கிராம் எடையில் ரூ. 14.73 லட்சம் மதிப்பிலான தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்