முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுங்கத்துறை நடவடிக்கைகளில் பிடிபட்ட கடத்தல் தங்கம் மற்றும் பொருள்கள்



 சுங்கத்துறை நடவடிக்கைகள் முதலாவதாக. 

ரூ 81.4 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ 6.6 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல், ஒருவர் கைது.

சென்னையை சேர்ந்த ஜாகிர் உசேன், 40, என்பவர், இண்டிகோ விமானம் மூலம் சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த நிலையில், வெளிநாட்டு பணத்தை

அனுமதியின்றி அவர் எடுத்துச் செல்வதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து புறப்பாடு முனையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது உடைமைகளை சோதனையிட்டபோது, அவரது கைப்பையில் இருந்து ரூபாய் 6.6 லட்சம் மதிப்புடைய 7,500 யூரோக்கள் கண்டறியப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், துபாயில் இருந்து சென்னை வந்த விமானங்களில் ஐந்து தங்கக் கடத்தல் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஃபிளை துபாய் விமானத்தில் சென்னை வந்திறங்கிய திருச்சிராப்பள்ளியை சேர்ந்த முகமது இத்ரீஸ், 25, ராமேஸ்வரத்தை சேர்ந்த முகமது இர்பான், 36, மற்றும் லியாகத் அலி, 36, ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் வெளியே செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்டபோது உடலுக்குள் மறைத்து வைத்து ஏழு பொட்டலங்களில் தங்கப் பசையை கடத்தி வந்தது தெரியவந்தது. 1.33 கிலோ எடையுடைய ரூபாய் 67.1 லட்சம் மதிப்புடைய 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த அபுபக்கர் சித்திக், 21, மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹிர், 21, ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனை செய்து பார்த்தபோது ஜீன்ஸ் கால் சட்டைப்பைக்குள் தங்க பசையை மறைத்து வைத்து தைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து 285 கிராம் எடையுடைய ரூபாய் 14.34 லட்சம் மதிப்புடைய 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் ரூ 81.4 லட்சம் மதிப்புள்ள 1.62 கிலோ தங்கம், ரூ 6.6 லட்சம் மதிப்புள்ள 7,500 யூரோக்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்க ஆணையர் செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.    இரண்டாவதாக மேலும் மற்றொரு சம்பவம். 

மருந்து கட்டு, ஜீன்ஸ் உடையுள் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 14.73 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

இன்று துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 1644 என்னும் விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 27 வயதான திரு அஹமத் அனாஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் அவரது உடலில் மருந்து கட்டு போடப்பட்டு இருப்பதையும், சந்தேகத்தின் பெயரில் அதனை சோதனையிட்டதில் அதனுள் 168 கிராம் எடையில் இரண்டு தங்கப் பசை பொட்டலங்கள்  இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இடமிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பில் 147 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று துபாயிலிருந்து ஏர் இந்தியா ஏஐ 906 விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 48 வயதான திரு ஜும்மா கான் மற்றும் 46 வயதான திரு முகமது ரஃபி ஆகியோரை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர். அவர்களை சோதனையிட்டதில், அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் உடையின் உள்ளே 176 கிராம் எடையுள்ள 4 தங்க பொட்டலங்கள் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 7.23 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த இரு சம்பவங்களில் இருந்தும் மொத்தம் 289 கிராம் எடையில் ரூ. 14.73 லட்சம் மதிப்பிலான தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...