முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றுப் பாலினத்தவர் குறித்த காணொலிக் கருத்தரங்கு


மாற்றுப் பாலினத்தவர் குறித்த 



மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் து.ரவிக்குமார் வலியுறுத்தல்

திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவரின் நலனுக்காக கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. அதில் இருந்த பாதகமான அம்சங்கள் குறித்து மாற்றுப்பாலினத்தவர் போராடிய பிறகு இந்த ஆண்டு திருத்தங்களுடன் இந்தச் சட்டத்துக்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.  இப்போது மாற்றுப்பாலினத்தவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைத்துள்ளது.  ஆனால் சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால் இவர்கள் சமுதாயத்தில் கண்ணியமாக வாழ்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. எனவே மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே அரசு, தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்காகப் பாடுபட வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் து.ரவிக்குமார் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் விழுப்புரம் & கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியன இணைந்து இன்று நடத்திய மனித உரிமைகளும் மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளும் என்ற காணொலி கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசியபோது திரு ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

`அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ள சமத்துவம் நீடித்து நிலைக்க வேண்டுமானால் சமூகம் மற்றும் பொருளாதாரத் தளங்களிலும் சமத்துவம் ஏற்பட வேண்டும். நரிக்குறவர் வாரியம், அரவாணிகள் வாரியம் உருவாக்க நான் பாடுபட்டுள்ளேன். பெண்களுக்கான உரிமைகள் மதிக்கப்படாத சூழல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் மறைமுகமாகத் தொடர்கின்றது. இவற்றை மாற்றி சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் சமத்துவம் ஏற்பட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது அவசியம்’ என்று திரு ரவிக்குமார் மேலும் வலியுறுத்தினார்.

சென்னையில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.மா.அண்ணதுரை தலைமையுரை ஆற்றினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தன்னளவில் மனித உரிமைகள் பலவற்றை உறுதி செய்கின்றது. சொல்லப்பட்டுள்ள உரிமைகளோடு சொல்லப்படாத மறைமுகமான உரிமைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன. பல்வேறு சூழல்களில் மனித உரிமைகள் மறுக்கப்படும்போதுதான் பிரச்சினை எழுகின்றது.  அடுத்தவரின் உரிமைகளை மதிக்கவும் அவற்றை அங்கீகரிக்கவும் செய்தால் சமுதாயத்தில் சமநிலை ஏற்படும்.

கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் திருமிகு. கோ.அன்பழகி தனது சிறப்புரையில் மாவட்டத்தில் 2008-இல் திருநங்கைகள் நல வாரியம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில்  400 மாற்றுப் பாலினத்தவர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 236 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 150 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் 23 பேருக்கு குடிமைப் பொருள் வழங்கல் (ரேஷன்) அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான ஓய்வூதியங்கள் 2019-20 ஆம் ஆண்டில் 36 பேருக்கும் 2020-21 ஆம் ஆண்டில் 51 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.. 84 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் தரப்ப்ட்டுள்ளன. சுய தொழில் தொடங்க முன்பு 20,000 ரூபாய் மானியமாகத் தரப்பட்டது. இப்போது இது 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  20 பேருக்கு ரூ.20,000 வீதமும் 3 பேருக்கு ரூ.50,000 வீதமும் சுய தொழில் தொடங்க மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று அன்பழகி மேலும் தெரிவித்தார்.

அறிமுகவுரை ஆற்றிய மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது உரையில் கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கும் பணிகளின் அடிநாதமாக மனித உரிமைகள் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது. சுகாதார வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; ஒருவரும் கவனிப்பில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது; புறக்கணிப்பு, கறைப்படுத்தல் எதுவும் இருக்கக் கூடாது; ஊரடங்கு மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை வலியுறுத்தி  உள்ளதாக  தெரிவித்தார்.

மதுரையில் உள்ள மாற்றுப் பாலினத்தவர்களுக்கான ஆதார வள மைய டிரஸ்ட்டி திருமிகு பிரியாபாபு தமிழ்நாட்டில் வரலாற்று ரீதியில் திருநங்கைகள் சமுதாயத்தில் மேன்மையாக நடத்தப்பட்டு வந்ததையும் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட 1871 ஆம் ஆண்டின் குற்றப் பரம்பரையினர் சட்டம் இவர்களைக் கீழ்நிலைக்குத் தள்ளியதையும் பல உதாரணங்களுடன் விளக்கிப் பேசினார்.

புதுச்சேரியில் உள்ள சகோதரன் அமைப்பின் தலைவர் டாக்டர் ஷீத்தல் சமுதாயத்தில் மாற்றுப்பாலினத்தவருக்கு உரிய இடம் வழங்கப்படாமல்தான் இருக்கிறது. ஆனால் இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் எங்களையும் மனிதர்களாக மதிக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் மீது அன்பு செலுத்தினாலே போதும்; பச்சாதாபம் வேண்டாம் என்று தனது உரையில் தெரிவித்தார்.

முன்னதாக கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்.ராஜீஸ் குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில்  விழுப்புரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.ராம்சந்திரன் நன்றி கூறினார். கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணத்தார்.

இந்தக் காணொலிக் கருத்தரங்கில் இளையோர் மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் என சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த