பாமக வின் கோட்டையாகக் கருதப்படும் சேலம் மாவட்டத்தில் அவதூறாகப் பேசிய திமுக எம்பி தயாநிதிமாறன் பேச்சுக்கு எதிர்ப்பு இருதரப்பு மோதல் தடுக்கப்பட்டதுதமிழகத்தில் சட்டமன்றப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி எனும் மு.க. ஸ்டாலின் குரல் எனும் தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களைச் சந்திக்கும் கூட்டங்கள் நடைபெறுவதில் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாமக திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளதா என கேள்விக்கு பதிலளித்தவர், பாமக யாருடன் பேரம் பேசுகிறது என்ற தகவல் தனக்கு தெரியாது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை, தங்களிடம் கொள்கைதானிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போதே அதிமுகவிடம் 400 கோடி ரூபாய் பாமக பெற்றதாக பேசப்பட்டு வந்ததாகவும், இந்த முறையும் பாமக தரப்பில் பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறவே இத் தகவல் பாமக தரப்பினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஓமலூரை அருகில் சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், பொட்டிபுரம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பேசிமுடித்துவிட்டு, பூசாரிப்பட்டியை நோக்கி தயாநிதிமாறன் செல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் திரண்டு விட்டதுடன் கருப்பு கொடி காட்டிய விவகாரம் தெரிந்து திமுகவினரும் கூடவே திமுக - பாமக இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது.. இந்த மோதலில் தயாநிதி மாறனின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. காரின் முன் பகுதியில் உள்ள விளக்கும் நொறுங்கியது.பின் கார் வேகமாகச் சென்று விட இருதரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை குவிக்கப்பட்டனர். டிசம்பர்.21ஆம் தேதி, கட்டுமானத் தொழிலாளர்கள், வெள்ளித் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், விவசாயத் தொழிலாளர்கள், உருக்காலை, மேக்னசைட் தொழிலாளர்கள் எனச் சந்திப்பும் நடந்தது. டிசம்பர்.22 ஆம் தேதி, பனை, செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கரும்பாலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள், மலர் விவசாயிகள், வியாபாரிகள், பழங்குடியினரிடம் கலந்துரையாடினார். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி. ஏம். செல்வகணபதியும் இருந்தனர். எல்லா இடத்திலுமே தயாநிதி மாறன், மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமைச்சட்டம் மாநில அரசின் ஊழல்கள் ஆகிய மூன்று விபரங்களைப் பேசினார். கிராமப்புறங்களில் இந்தத் தேர்தல், உங்களுக்கானத் தேர்தல் மட்டுமல்ல; உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தேர்தல்; புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அ.தி.மு.க.வின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் ஆதரித்து வாக்களித்தார். ராஜ்யசபா எம்.பி. அன்புமணியும் வேளாண் சட்டத்தை ஆதரித்தார். அ.தி.மு.க.,- பாஜக கூட்டணி மக்களுக்கு துரோகம் செய்கின்றன என்று பேசினார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தயாநிதி மாறன், எம்.பி.சி.க்கு இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு எல்லாம் முன்னால் முதல்வர் கருணாநிதி ஆட்சியின்போதே வழங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில்தான் அவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துவார்கள். இதெல்லாமே பா.ம.க. நடத்தும் தேர்தல் கால அரசியல் நாடகம்'' எனச் சொன்னார். தயாநிதி மாறனின் பேச்சு சமூக வளைதளத்தில் வேகமாகப் பரவ, பா.ம.க. தரப்பு கொதிப்படைந்து உடனடியாக மக்கள் செல்வாக்கு பெற்ற பா.ம.க.மூத்த முன்னோடியாக உள்ள மாநில துணைச்செயலாளர் சேலம் இரா. அருள், தயாநிதி மாறனுக்குக் கண்டனம் தெரிவித்தார். ஆரம்பத்தில், ஒருவரின் கருத்துக்கு எதிர்த்தரப்பின் எதிர்வினை எல்லாமே கருத்தியல் மோதலாகத்தான் இருந்தது. நேற்று இரவு 7 மணியளவில், பொட்டியபுரத்தில் பூ வியாபாரிகளுடன் கலந்துரையாடலை முடித்துவிட்டு, காடையாம்பட்டி அடுத்த கண்ணப்பாடி அருகே பழங்குடி மக்களைச் சந்திப்பதற்காக தயாநிதி மாறன் தனது பரப்புரை வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று பா.ம.க. நிர்வாகிகள் அண்ணாமலை, மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் கையில் கறுப்புக்கொடி ஏந்தியபடி தி.மு.க. மற்றும் தயாநிதி மாறனுக்கு எதிராகச் சாலையோரம் நின்றபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். என்ன ஏதென்று பார்ப்பதற்குள் வந்த பரப்புரை வேன், அந்தக் கும்பலைக் கடந்து சென்று விட்டது. ஆனால், பா.ம.க.வினர் பின்னர் சாலை மறியலில் இறங்கினர். போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாத பகுதி என்பதால் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓமலூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர் இது நடந்து கொண்டிருக்கும்போதே சிலர்கல் வீச்சிலும் ஈடுபடவே இருதரப்புமே கல்வீச்சில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுவதில், பார்த்திபன் எம்.பி., சென்ற கார் லேசாகச் சேதம் அடைந்துள்ளது. பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி வந்த ஒரு கார் கண்ணாடியும் சேதம் அடைந்தது. தி.மு.க. தொண்டர்களும் களத்தில் இறங்க, இருதரப்பினருக்கும் இடையே லேசாகக் கைகலப்பும் நடந்தது. பா.ம.க.வினர் கறுப்புக்கொடி கட்டி வந்த தடிகளால் தாக்கத் தொடங்க அதற்குள் காவல்துறையினர் வரவே நிலைமை கட்டுக்குள் வந்தது.இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். பா.ம.க.வினர் திடீரென்று இப்படியான சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என தி.மு.க. எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அதனால்தான் சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்கள் சாலையில் அமர்ந்ததுடன், கல் வீச்சிலும் ஈடுபட்டனர் சம்பவம் தொடர்பாக தி.மு.க., பா.ம.க. இருதரப்பும் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலுக்குப் பின்னால் வேறொரு சம்பவம் இருப்பதாகவும் தெரிகிறது. ஆக அரசியல் ஆரம்பம் .
கருத்துகள்