பலவீனமான பிரிவினருக்காக இந்திய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பிந்தைய மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை திருத்தியதன்
மூலம் நிதி ஒதுக்கீடு .5 .59,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு பயனளிக்கும் மற்றும் பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்யும். மைய அரசு திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பினை தொடரும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவ / மாணவியர்க்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் முறையே ரூ.1,00,000/- மற்றும் ரூ.1,08,000/-க்கு மிகாமல் இருப்பின், குறிப்பேடுகள் வாங்குதல் போன்ற கட்டாயச் செலவுகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் ஆகியவற்றை ஈடுசெய்ய அதிக அளவாக மாதம் ஒன்றிற்கு ரூ.330/- வரை அவர்கள் பயிலும் படிப்புக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.
இவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயில்பவராக இருப்பின் இத்தொகை அவர்கள் பயிலும் படிப்புக்கு ஏற்றவாறு அதிக அளவாக மாதம் ஒன்றிற்கு ரூ.740/- வரை பராமரிப்புப்படியாக வழங்கப்படுகிறது.
இவை தவிர மாணவ / மாணவியர்களால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் அக்கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன.
கருத்துகள்