முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்ததின கொண்டாட்டங்கள்

குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட செய்தி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்ததின ஆண்டு முழுக் கொண்டாட்டம்













: அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 23, 2021) திறந்துவைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருடம் முழுவதும் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின் துவக்கமாக இந்த உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலகத் தகவல் படி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று பிரதமர் மரியாதை செலுத்தினார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுட்டுரைச் செய்தி வாயிலாக பிரதமர் தமது மரியாதையை செலுத்தினார்.உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் 

மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு அவரது 125-வது பிறந்த நாளன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்

நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு கவுகாத்தியில் திரு அமித் ஷா மலரஞ்சலி செலுத்தினார் 

மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு அவரது 125-வது பிறந்த நாளன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு கவுகாத்தியில் திரு அமித் ஷா மலரஞ்சலி செலுத்தினார்

 

அப்போது பேசிய அமைச்சர், புத்திசாலி மாணவராகவும், திறன்வாய்ந்த நிர்வாகியாகவும், தேர்ந்த ஒருங்கிணைப்பாளராகவும், ஒப்பில்லா போர்குணம் கொண்ட தலைவராகவும் நேதாஜி விளங்கினார் என்று கூறினார்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு நேதாஜியின் துணிச்சலும், வீரமும் புதிய பலத்தை தந்தது என்று கூறிய திரு அமித் ஷா, சவாலான காலகட்டத்தில் நாட்டின் இளைஞர்களை தமது வசீகர தலைமையின் கீழ் அவர் ஒன்று திரட்டியதாகக் கூறினார்.

நாட்டின் விடுதலைக்காக கொல்கத்தா முதல் ஜெர்மனி வரை நேதாஜி பயணம் மேற்கொண்டார். சாலை வழியாக 7,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாகவும், நீர்மூழ்கி மூலம் சுமார் 27,000 கிலோமீட்டர்களும் பயணித்து தமது அசைக்கமுடியாத துணிச்சலை அவர் பறைசாற்றினார்.

ஒட்டுமொத்த தேசமும் என்றும் நேதாஜிக்கு கடன்பட்டிருப்பதாக கூறிய உள்துறை அமைச்சர், அவரது பிறந்த நாளை பராக்கிரம தினமாக அறிவித்து, யாரும் செய்யாத புகழஞ்சலியை பிரதமர் திரு நரேந்திர மோடி செய்துள்ளதாக கூறினார்.

இனி வரும் தலைமுறைகள், குறிப்பாக குழந்தைகள், நேதாஜி பற்றி அறிந்துகொள்வதற்காகவும், தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடையும் நோக்கிலும், பராக்கிரம தினம் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் அவர் கூறினார்.உள்துறை அமைச்சகம்

சுபாஷ் சந்திர போஸ் நினைவாக தன்னலமற்ற தொண்டாற்றும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு விருதுகள்

பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றி வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்னும் வருடாந்திர விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினமான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு வருடமும் இந்த விருது அறிவிக்கப்படும். அமைப்பாக இருப்பின் ரூ 51 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும், தனிநபராக இருக்கும் பட்சத்தில் ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த வருடத்திற்கான விருதுக்கு, 2020 ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.  இது குறித்து அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விரிவாக விளம்பரப்படுத்தப்பட்டு, 371 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

இந்த வருட விருதிற்கு அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனிநபர் பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் மேலாண்மை குறித்த, குறிப்பாக நிலச்சரிவுகள் குறித்த, அறிவியல் ஆய்வுகளுக்கு இந்தியாவில் அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரி ஆவார். சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ மற்றும் மூன்று இதர இடங்களில் நிலச்சரிவு குறித்த இந்தியாவின் முதல் ஆய்வகத்தை அவர் உருவாக்கினார்.சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவல் 

“21-ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முக்கியத்துவம்” என்னும் தலைப்பில் இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

“21-ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முக்கியத்துவம்” என்னும் தலைப்பில் நமது தேசத்தை பாருங்கள் வரிசையின் கீழ் 73-வது இணைய கருத்தரங்கை 2021 ஜனவரி 22 அன்று மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

நேதாஜி குறித்த திறந்தவெளி தளத்தின் ஒருங்கிணைப்பாளரும், செய்தி தொடர்பாளருமான திரு சந்திர குமார் போஸ் இந்த இணைய கருத்தரங்கை வழங்கினார். இந்திய சமூக ஜனநாயக பேரவையோடு இணைந்துள்ள அவர், சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

கொல்கத்தா மற்றும் லண்டனில் செயல்பட்டு வரும் ஆய்வு நிறுவனமான நேதாஜி சுபாஷ் ஃபவுண்டேசன் என்னும் அமைப்புடனும் அவர் இணைந்து பணியாற்றுகிறார். ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


ஜனவரி 22 அன்று நடைபெற்ற இணைய கருத்தரங்கில், இந்திய சுதந்திர போரட்டத்திற்கு நேதாஜி ஆற்றிய பங்கு குறித்தும், அவரது லட்சியங்கள், தத்துவங்கள் மற்றும் ஒன்றுபட்ட & வளமான இந்தியாவுக்கான அவரது கனவு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இணைய கருத்தரங்கின் காணொலியை https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்னும் முகவரியிலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் காணலாம்.தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் 

நேதாஜியின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்: இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ திரைப்படம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த ஆண்டை நாடு கொண்டாடும் இந்தத் தருணத்தில் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் திரு ஷ்யாம் பெனகலின் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ' திரைப்படம் கோவாவின் பனாஜியில் இன்று (ஜனவரி 23 2021) சிறப்பாக திரையிடப்படுகிறது.

நேதாஜியின் உறுதியான மனநிலையையும், தன்னிகரற்ற சேவையையும் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம தினமாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

 

நேதாஜி பற்றிய சிறப்புத் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த திருவிழாவின் இயக்குநர் திரு சைத்தன்ய பிரசாத், “இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகவும் போற்றுதலுக்குரிய தேசிய தலைவர்களுள் ஒருவராகவும் உயரிய சக்தியாகவும் நேதாஜி தொடர்ந்து நினைவு கூரப்படுகிறார்”, என்று கூறினார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகரும் இயக்குநருமான திரு சச்சின் கெடேகர் நேதாஜியாக நடித்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடுக்கான சிறந்த திரைப்படங்கள் பிரிவில் தேசிய விருதையும் இந்தத் திரைப்படம் வென்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த