குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட செய்தி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்ததின ஆண்டு முழுக் கொண்டாட்டம்
: அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 23, 2021) திறந்துவைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருடம் முழுவதும் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின் துவக்கமாக இந்த உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலகத் தகவல் படி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று பிரதமர் மரியாதை செலுத்தினார்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுட்டுரைச் செய்தி வாயிலாக பிரதமர் தமது மரியாதையை செலுத்தினார்.உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்
மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு அவரது 125-வது பிறந்த நாளன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்
நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு கவுகாத்தியில் திரு அமித் ஷா மலரஞ்சலி செலுத்தினார்
மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு அவரது 125-வது பிறந்த நாளன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு கவுகாத்தியில் திரு அமித் ஷா மலரஞ்சலி செலுத்தினார்
அப்போது பேசிய அமைச்சர், புத்திசாலி மாணவராகவும், திறன்வாய்ந்த நிர்வாகியாகவும், தேர்ந்த ஒருங்கிணைப்பாளராகவும், ஒப்பில்லா போர்குணம் கொண்ட தலைவராகவும் நேதாஜி விளங்கினார் என்று கூறினார்.
இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு நேதாஜியின் துணிச்சலும், வீரமும் புதிய பலத்தை தந்தது என்று கூறிய திரு அமித் ஷா, சவாலான காலகட்டத்தில் நாட்டின் இளைஞர்களை தமது வசீகர தலைமையின் கீழ் அவர் ஒன்று திரட்டியதாகக் கூறினார்.
நாட்டின் விடுதலைக்காக கொல்கத்தா முதல் ஜெர்மனி வரை நேதாஜி பயணம் மேற்கொண்டார். சாலை வழியாக 7,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாகவும், நீர்மூழ்கி மூலம் சுமார் 27,000 கிலோமீட்டர்களும் பயணித்து தமது அசைக்கமுடியாத துணிச்சலை அவர் பறைசாற்றினார்.
ஒட்டுமொத்த தேசமும் என்றும் நேதாஜிக்கு கடன்பட்டிருப்பதாக கூறிய உள்துறை அமைச்சர், அவரது பிறந்த நாளை பராக்கிரம தினமாக அறிவித்து, யாரும் செய்யாத புகழஞ்சலியை பிரதமர் திரு நரேந்திர மோடி செய்துள்ளதாக கூறினார்.
இனி வரும் தலைமுறைகள், குறிப்பாக குழந்தைகள், நேதாஜி பற்றி அறிந்துகொள்வதற்காகவும், தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடையும் நோக்கிலும், பராக்கிரம தினம் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் அவர் கூறினார்.உள்துறை அமைச்சகம்
சுபாஷ் சந்திர போஸ் நினைவாக தன்னலமற்ற தொண்டாற்றும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு விருதுகள்
பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றி வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்னும் வருடாந்திர விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினமான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு வருடமும் இந்த விருது அறிவிக்கப்படும். அமைப்பாக இருப்பின் ரூ 51 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும், தனிநபராக இருக்கும் பட்சத்தில் ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த வருடத்திற்கான விருதுக்கு, 2020 ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இது குறித்து அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விரிவாக விளம்பரப்படுத்தப்பட்டு, 371 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இந்த வருட விருதிற்கு அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனிநபர் பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மை குறித்த, குறிப்பாக நிலச்சரிவுகள் குறித்த, அறிவியல் ஆய்வுகளுக்கு இந்தியாவில் அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரி ஆவார். சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ மற்றும் மூன்று இதர இடங்களில் நிலச்சரிவு குறித்த இந்தியாவின் முதல் ஆய்வகத்தை அவர் உருவாக்கினார்.சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவல்
“21-ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முக்கியத்துவம்” என்னும் தலைப்பில் இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது
“21-ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முக்கியத்துவம்” என்னும் தலைப்பில் நமது தேசத்தை பாருங்கள் வரிசையின் கீழ் 73-வது இணைய கருத்தரங்கை 2021 ஜனவரி 22 அன்று மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது
நேதாஜி குறித்த திறந்தவெளி தளத்தின் ஒருங்கிணைப்பாளரும், செய்தி தொடர்பாளருமான திரு சந்திர குமார் போஸ் இந்த இணைய கருத்தரங்கை வழங்கினார். இந்திய சமூக ஜனநாயக பேரவையோடு இணைந்துள்ள அவர், சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
கொல்கத்தா மற்றும் லண்டனில் செயல்பட்டு வரும் ஆய்வு நிறுவனமான நேதாஜி சுபாஷ் ஃபவுண்டேசன் என்னும் அமைப்புடனும் அவர் இணைந்து பணியாற்றுகிறார். ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஜனவரி 22 அன்று நடைபெற்ற இணைய கருத்தரங்கில், இந்திய சுதந்திர போரட்டத்திற்கு நேதாஜி ஆற்றிய பங்கு குறித்தும், அவரது லட்சியங்கள், தத்துவங்கள் மற்றும் ஒன்றுபட்ட & வளமான இந்தியாவுக்கான அவரது கனவு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இணைய கருத்தரங்கின் காணொலியை https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்னும் முகவரியிலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் காணலாம்.தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில்
நேதாஜியின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்: இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ திரைப்படம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த ஆண்டை நாடு கொண்டாடும் இந்தத் தருணத்தில் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் திரு ஷ்யாம் பெனகலின் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ' திரைப்படம் கோவாவின் பனாஜியில் இன்று (ஜனவரி 23 2021) சிறப்பாக திரையிடப்படுகிறது.
நேதாஜியின் உறுதியான மனநிலையையும், தன்னிகரற்ற சேவையையும் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம தினமாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
நேதாஜி பற்றிய சிறப்புத் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த திருவிழாவின் இயக்குநர் திரு சைத்தன்ய பிரசாத், “இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகவும் போற்றுதலுக்குரிய தேசிய தலைவர்களுள் ஒருவராகவும் உயரிய சக்தியாகவும் நேதாஜி தொடர்ந்து நினைவு கூரப்படுகிறார்”, என்று கூறினார்.
இந்தத் திரைப்படத்தில் நடிகரும் இயக்குநருமான திரு சச்சின் கெடேகர் நேதாஜியாக நடித்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடுக்கான சிறந்த திரைப்படங்கள் பிரிவில் தேசிய விருதையும் இந்தத் திரைப்படம் வென்றது.
கருத்துகள்