முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதத் திருநாட்டின் 72-வது குடியரசு தின நிகழ்வுகள்

 குடியரசுத் தலைவர் செயலகம் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் நாளை உரையாற்றுகிறார்

நாட்டின் 72-வது குடியரசு தின







த்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாளை (ஜனவரி 25, 2021) உரையாற்றுவார்.

குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் இந்தியிலும் அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படும்.‌ தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் இந்தி மற்றும் ஆங்கில உரையைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் மாநில மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாகும். அகில இந்திய வானொலியில் இரவு 9:30 மணி முதல் சம்பந்தப்பட்ட மண்டல அலைவரிசைகளில் குறிப்பிட்ட மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும்.                 பிரதமர் அலுவலகம்

குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்


‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கமளித்தல்’, தற்சார்பு இந்தியாவின் வெற்றி இளைஞர்களைச் சார்ந்துள்ளது: பிரதமர்

தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், இதர அமைப்புகளைக் கேட்டுக்கொண்டார்

குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி விருந்து நிகழ்ச்சியின்போது இன்று கலந்துரையாடினார்.‌ மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அர்ஜுன் முண்டா, திரு கிரன் ரிஜிஜு, திருமதி ரேணுகா சிங் ஸ்ருதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், குடியரசு தின அணிவகுப்பில் பழங்குடி விருந்தினர்கள், கலைஞர்கள், நாட்டு நல திட்டப்பணி மற்றும் தேசிய மாணவர் படை வீரர்களின் பங்களிப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆற்றலை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.‌ நாட்டின் பன்முகத்தன்மையை அவர்கள் எடுத்துக் காட்டுவது அனைவரையும் பெருமையில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சமூக- கலாச்சார பாரம்பரியத்திற்கும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு உயிர்தரும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் குடியரசு தின அணிவகுப்பு மரியாதை செலுத்துவதாக பிரதமர் கூறினார்.

இந்த வருடம் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைப்பதையும், குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாளை இந்த வருடம் நாம் கொண்டாடவிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் பராக்கிரம தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளும் இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் நமது நாட்டிற்காக மீண்டும் அர்ப்பணிக்க நம்மை ஊக்கப்படுத்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களது உயர்ந்த லட்சியத்தின் கூட்டு வலிமைக்கு இந்தியா எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர்  விருந்தினர்களிடம் தெரிவித்தார்.  பல மாநிலங்கள்- ஒரே தேசம், பல சமூகங்கள்-ஒரே உணர்ச்சி, பல பாதைகள்- ஒரே இலக்கு, பல பழக்கவழக்கங்கள்- ஒரே பயன், பல மொழிகள்- ஒரே வெளிப்பாடு பல நிறங்கள் ஒரு மூவண்ணம் என்பது தான் இந்தியா என்று அவர் கூறினார்.  இந்த பொதுவான இலக்குதான் ஒரே பாரதம் உன்னத பாரதம். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் விருந்தினர்களிடம் அவர்களது பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள், மொழிகள் போன்றவை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.  ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்குவித்தல்' திட்டத்திற்கு ஒரே பாரதம் உன்னத பாரதம் வலு சேர்க்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஒரு பகுதியின் பொருட்களை எண்ணி மற்றொரு பகுதி பெருமை கொண்டு, ஊக்கப்படுத்தும்போதுதான் உள்ளூர் தயாரிப்புகள் நாடெங்கிலும், உலகெங்கிலும் சென்றடையும். ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கமளித்தல்’, ‘தற்சார்பு இந்தியா’வின் வெற்றி இளைஞர்களைச் சார்ந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

நாட்டின் இளைஞர்களுக்கு முறையான திறன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திறனின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 2014-ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கப்பட்டதாகவும், அதன்மூலம் 5.5 கோடி இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளும் சுய வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்புக்கான உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

செயல்திறன் சார்ந்த அறிவை  வழங்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையில் திறனின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. ஒருவருக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது இந்த கொள்கையின் முக்கிய அம்சமாகும். தொழிற்கல்வியை பிரதான கல்வியுடன் இணைப்பதற்கு இந்தக் கொள்கையில் முதன்முதலாக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் தங்களது விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ற வகையிலான பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும். அதன் பிறகு இடை நிலையில் கல்வியையும் தொழிற்கல்வியையும்  ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா போன்ற நெருக்கடியான தருணங்களில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட வீரர்கள் நாட்டிற்காக பணியாற்றியதை பிரதமர் பாராட்டினார். பெருந்தொற்றுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டத்திற்கு அவர்கள் முன்னேறுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். தடுப்பூசித் திட்டத்திற்கு அவர்கள் உதவிக்கரம் அளிக்க முன்வருமாறும்,  தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாடு முழுவதும் அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.”தடுப்பூசியைக் கண்டுபிடித்ததன் வாயிலாக நமது விஞ்ஞானிகள் அவர்களது கடமையை நிறைவேற்றியுள்ளனர், தற்போது உங்களது தருணம். புரளிகளையும், தவறான தகவல்களையும் பரப்பும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் முறியடிக்க வேண்டும்”, என்று பிரதமர் வலியுறுத்தினார்.

 பாதுகாப்பு அமைச்சகம்

குடியரசு தினவிழா அணிவகுப்பில், டிஆர்டிஓ தயாரிப்புகள் பங்கேற்பு

தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணி வகுப்பில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின்(டிஆர்டிஓ) தயாரிப்புகள் அலங்கார ஊர்திகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் டிஆர்டி தயாரிப்புகள் அலங்கார ஊர்திகளில் கொண்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் டிஆர்டிஓ தயாரிப்புகள் கொண்டு செல்லப்படுகின்றன.

கடற்படை பயன்பாட்டுக்கு தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானம், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பலில் தரையிறங்கி, ஏறியது. இந்த சாதனையை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்தி, டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள், ஆகாஷ் மற்றும் அஸ்த்ரா ஏவகணைகளை எடுத்து செல்லும் விமானப்படை அலங்கார ஊர்திகளும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கின்றன. 

முப்படைகளுக்கும் தேவையான தளவாடங்களை டிஆர்டிஓ உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து, தற்சார்பு இந்தியா உணர்வை வெளிப்படுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த