முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகாத்மாவின் படைப்புகள் வருங்கால சந்ததியினரை நீதி, நேர்மையுடன் செயல்படத் தூண்டும்


மகா



த்மா காந்தியின் தூய்மைக்கொள்கை தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாக கொண்டது

மகாத்மாவின் படைப்புகள் வருங்கால சந்ததியினரை நீதி, நேர்மையுடன் செயல்படத் தூண்டும்

சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியாவை மரியாதையும், மதிப்பும் மிக்க நாடாக உயர்த்தவும் நம்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும் காந்திய வழியில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிகர்நிலை பல்கலைக்கழகமான காந்திகிராம் ஊரக நிறுவனத்தின் சமூக அறிவியல் பிரிவின் தலைவரும், காந்திய படிப்புகளுக்கான மையத்தின் பேராசிரியருமான திரு எம் வில்லியம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து ‘இருவார கால தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தியாகிகள் தினம்' என்ற தலைப்பில் நடத்திய இணையதள கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

ஒரு நாடு சிறப்பானதாகக் கருதப்படுவதற்கு சில அலகுகள் உள்ளன என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டுமே இந்த நிலையை வழங்க முடியாது என்றும் அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டுமே இளைஞர்கள் சார்ந்து இருக்கக் கூடாது, மாறாக ஆழமாகப் படித்து செயல்வீரர்களாக காந்தியின் குறிக்கோள்களை பின்பற்றி  அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மகாத்மா காந்தி சுகாதாரத்திற்கும் உணவு பழக்க வழக்கங்களுக்கும் முக்கியத்துவத்தை வழங்கியதோடு, எண்ணிலடங்கா மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயத்தில் அங்கு பரவிய பிளேக் நோயைக் கண்டு அஞ்சாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணிந்து அவர் உதவிகள் செய்தார். நம் மனது தூய்மையாக இருப்பின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்று மகாத்மா காந்தி நம்பியதாக பேராசிரியர் தெரிவித்தார். அந்தப் பகுதியில் நிலவிய மோசமான சுகாதார சூழ்நிலையே பெருந்தொற்றின் பரவலுக்குக் காரணம் என்பதை அவர் உணர்ந்தார். இதனைக் கருத்தில் கொண்டு சுகாதாரம், தனிநபர் சுகாதாரம், பொது துப்புரவு, தூய்மை, மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் போன்ற தலைப்புகளில் 34 கட்டுரைகளை மகாத்மா எழுதியதை பேராசிரியர் வில்லியம் பாஸ்கரன் நினைவு கூர்ந்தார்.

சுகாதாரமான வாழ்க்கை முறையை மகாத்மா காந்தி தொடர்ந்து வலியுறுத்தியதையும், புனிதத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு நிலவிய சுகாதாரமற்ற நிலையை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்ததையும் அவர் எடுத்துரைத்தார். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு,  சுதந்திர இந்தியாவில், அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான தூய்மையான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவதையே மகாத்மா நோக்கமாகக் கொண்டிருந்தார். ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த மகாத்மா, அவர் சென்ற இடங்களிலெல்லாம் தன்னார்வ தொண்டர்களை உருவாக்கி பொது நலனிற்காக இணைந்து செயல்படும் வகையில் அவர்களுக்கு ஊக்கமளித்தார்.

புதுதில்லியின் ராஜ்காட்டில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநரான திரு ஏ. அண்ணாமலை பேசுகையில், மகாத்மா காந்தி துப்புரவு பணிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி, வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் தமது கழிவறைகளோடு, பொது கழிவறைகளையும் சுத்தம் செய்து தமது செயல்களின் வாயிலாகவும் உண்மையான முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார். அன்றைய காலகட்டத்தில் அனைத்து பொருட்களும் மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்பட்டதால் கழிவுகள் இல்லாத நிலை இருந்தது. மேலும் மறுசுழற்சிமுறை நமது பொருளாதாரத்தில் மிகப்பெரும் பங்கை ஆற்றியது என்று அவர் நினைவு கூர்ந்தார். அதற்கு நேர் மாறாக இன்று ஏராளமான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகின்றது. கழிவுகளை உருவாக்காத வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறிய திரு அண்ணாமலை, மகாத்மா காந்தி வேப்பங்குச்சியில் பல் துலக்கியதாகவும் குச்சியின் இரு முனைகளும் தேய்ந்த பிறகு அதனை அடுப்பை மூட்டுவதற்கான எரி வாயுவாகவும், அதைத்தொடர்ந்து அதன் சாம்பலை தாவரங்களுக்கு உரமாகவும் அவர் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக அறிமுக உரை நிகழ்த்திய பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா. அண்ணாதுரை, தூய்மை குறித்த மகாத்மா காந்தியின் எண்ணங்கள் நமது சமூகத்திலிருந்து தீண்டாமையை ஒழிக்கும் காரணியாக இருந்தது என்று கூறினார். ஒரு பிரிவு மக்கள், இதர பிரிவினரின் தூய்மை மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டதை மகாத்மா காந்தி வன்மையாக எதிர்த்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்ததோடு கடைசி மூச்சு வரை அகிம்சையை பின்பற்றிய அவரது இந்த நடவடிக்கைகள் உலகளவில் ஏராளமான மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இணை இயக்குநர் திரு ஜெ. காமராஜ் வரவேற்பு உரையையும், அதிகாரி செல்வி ஆர் வித்யா நன்றி உரையையும் வழங்கினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...