முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தகவலைத் தெரிந்து கொள்வதைவிட நடத்தை மாற்றமே முக்கியம் --கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா

தகவலைத் தெரிந்து கொள்வதைவிட நடத்தை மாற்றமே முக்கியம் --கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா



வலியுறுத்தல்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொதுமக்கள் எளிதில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்கின்றனர்.  சமூக ஊடகங்களும் தகவல்களை எளிதில் பரப்புகின்றன.  கொரோனாவைப் பற்றி தகவல் தெரியாத ஒரு நபர்கூட இருக்க முடியாது.  தகவல்களைத் தெரிவிப்பது, தகவலைத் தெரிந்து கொள்வது என்பது மாற்றத்திற்கான முதல் படிதான்.  மக்களிடம் நடத்தை மாற்றம் ஏற்படுவதே தேவையான கடைசி படி ஆகும்.  முகக் கவசத்தை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதால் எந்த நன்மையும் கிடையாது.  எனவே சமூகப் பணியாளர்கள் மற்றும் தொடர்பியல் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் மக்களிடம் நடத்தை மாற்றத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று கடலூர் கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகம், கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து இன்று குள்ளஞ்சாவடியில் நடத்திய தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு முகாமில் சிறப்புரை ஆற்றிய போது ராஜ கோபால் சுங்கரா இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு வழுதலம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருமிகு கலைச்செல்வி இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் திரு க.சதீஷ்குமார் துவக்கவுரை ஆற்றினார்.  கழிவறை இல்லாத வீடே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க முயன்று வருகிறோம்.  பொதுவெளியில் மலம், சிறுநீர் கழிப்பவர்களை மற்றவர்கள் தட்டிக்கேட்டு கண்டிக்கும் காலம் உருவாக வேண்டும்.  குப்பைகளை தெருவில் கொட்டக் கூடாது என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.  எனது கிராமம் தூய்மையான கிராமம் என்று பெருமையுடன் ஒவ்வொருவரும் கூறக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்று சதீஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மா.அகிலா கருத்துரை ஆற்றினார்.  தூய்மையான இந்தியாவை உருவாக்க தொடங்கப்பட்ட திட்டம் ஒரு இயக்கமாக வளர்ந்து உள்ளது.  தூய்மையின் அடையாளமாக மகாத்மா காந்தி திகழ்கின்றார்.  கை கழுவும் பழக்கம் குறித்து காலம் காலமாக சுகாதாரத் துறையினர் கூறி வருகின்றனர்.  ஆனால் இன்று கொரோனாதான் இதைக் கட்டாயப் பழக்கமாக மாற்றி உள்ளது. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இதுவரை 2246 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர் என டாக்டர் அகிலா தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்த மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் 2014 அக்டோபர் 2ஆம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் 10,75,03,000 கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன என்றும் 6,03,138 கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் தயக்கம் இல்லாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்.ரேவதி தூய்மைதான் ஆரோக்கியத்தின் அடிப்படை என்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  வழுதலம்பட்டு ஊராட்சியின் தூய்மை காவலர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. தொடர்ந்து புதுச்சேரி ராஜ்முகில் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக குறிஞ்சிப்பாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகு கு.சாய்ராபானு வரவேற்புரை ஆற்றினார்.  நிறைவில் களவிளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

 நிகழ்ச்சியில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைப்படி கடைபிடிக்கப்பட்டன.  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்த்து.

வழுதலம்பட்டு ஊராட்சியின் தூய்மைக் காவலர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.

ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கடலூர் கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா பரிசுகளை  வழங்கினார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...