முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தகவலைத் தெரிந்து கொள்வதைவிட நடத்தை மாற்றமே முக்கியம் --கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா

தகவலைத் தெரிந்து கொள்வதைவிட நடத்தை மாற்றமே முக்கியம் --கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா



வலியுறுத்தல்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொதுமக்கள் எளிதில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்கின்றனர்.  சமூக ஊடகங்களும் தகவல்களை எளிதில் பரப்புகின்றன.  கொரோனாவைப் பற்றி தகவல் தெரியாத ஒரு நபர்கூட இருக்க முடியாது.  தகவல்களைத் தெரிவிப்பது, தகவலைத் தெரிந்து கொள்வது என்பது மாற்றத்திற்கான முதல் படிதான்.  மக்களிடம் நடத்தை மாற்றம் ஏற்படுவதே தேவையான கடைசி படி ஆகும்.  முகக் கவசத்தை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதால் எந்த நன்மையும் கிடையாது.  எனவே சமூகப் பணியாளர்கள் மற்றும் தொடர்பியல் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் மக்களிடம் நடத்தை மாற்றத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று கடலூர் கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகம், கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து இன்று குள்ளஞ்சாவடியில் நடத்திய தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு முகாமில் சிறப்புரை ஆற்றிய போது ராஜ கோபால் சுங்கரா இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு வழுதலம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருமிகு கலைச்செல்வி இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் திரு க.சதீஷ்குமார் துவக்கவுரை ஆற்றினார்.  கழிவறை இல்லாத வீடே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க முயன்று வருகிறோம்.  பொதுவெளியில் மலம், சிறுநீர் கழிப்பவர்களை மற்றவர்கள் தட்டிக்கேட்டு கண்டிக்கும் காலம் உருவாக வேண்டும்.  குப்பைகளை தெருவில் கொட்டக் கூடாது என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.  எனது கிராமம் தூய்மையான கிராமம் என்று பெருமையுடன் ஒவ்வொருவரும் கூறக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்று சதீஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மா.அகிலா கருத்துரை ஆற்றினார்.  தூய்மையான இந்தியாவை உருவாக்க தொடங்கப்பட்ட திட்டம் ஒரு இயக்கமாக வளர்ந்து உள்ளது.  தூய்மையின் அடையாளமாக மகாத்மா காந்தி திகழ்கின்றார்.  கை கழுவும் பழக்கம் குறித்து காலம் காலமாக சுகாதாரத் துறையினர் கூறி வருகின்றனர்.  ஆனால் இன்று கொரோனாதான் இதைக் கட்டாயப் பழக்கமாக மாற்றி உள்ளது. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இதுவரை 2246 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர் என டாக்டர் அகிலா தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்த மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் 2014 அக்டோபர் 2ஆம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் 10,75,03,000 கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன என்றும் 6,03,138 கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் தயக்கம் இல்லாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்.ரேவதி தூய்மைதான் ஆரோக்கியத்தின் அடிப்படை என்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  வழுதலம்பட்டு ஊராட்சியின் தூய்மை காவலர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. தொடர்ந்து புதுச்சேரி ராஜ்முகில் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக குறிஞ்சிப்பாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகு கு.சாய்ராபானு வரவேற்புரை ஆற்றினார்.  நிறைவில் களவிளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

 நிகழ்ச்சியில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைப்படி கடைபிடிக்கப்பட்டன.  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்த்து.

வழுதலம்பட்டு ஊராட்சியின் தூய்மைக் காவலர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.

ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கடலூர் கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா பரிசுகளை  வழங்கினார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.