கிராமசபை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம்
நடத்துவது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கொரானா காரணமாக குடியரசு தினத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்தக் கூடாதெனவுண் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்திக்கு நடத்தப்படும். கடந்த ஆண்டு குடியரசு தினத்தை தவிர்த்து வேறு எந்த தினத்திலும் கூட்டம் நடத்தப்படவில்லை. கொரானா காரணமாக, கூட்டங்களை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது நீதிமன்றம் வரை சென்றது.கிராம சபை கூட்டம், இந்தாண்டு குடியரசு தினத்தில் ஜனவரி 26 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கையில், கொரோனா அச்சறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள்