டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை. சட்டசபைத் தேர்தல் வரும் நிலையில், முன் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் செய்து வருகின்றது. தற்போது டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்கிறது.
இந்தியாவில் கொரானாவினால் பல பணிகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாக பாதுகாப்புக் கருதி பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வருகிறது.
குறிப்பாக சுங்கசாவடிகளில் பாஸ்டேக் முறை, விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் டிஜிட்டல் சேவைகளை இருக்கின்ற நிலையில் தேர்தல் கமிஷன் மின்னணு முறையிலான வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்கிறது. இன்று தேசிய வாக்காளர் தினம் என்ற நிலையில், இன்று இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்கிறது.
இது பிடிஎஃப் பார்மெட்டில் கிடைக்கும்
இந்த மின்னணு வாக்காளர் அடையாள் அட்டையை பிடிஎஃப் பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும். ஆக இதனை எடிட் செய்ய முடியாது. இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பதிவு செய்யும் வாக்காளர்கள் மட்டுமே பெற முடியும். முதல் கட்டமாக இந்த மின்னணு சேவை பெற ஜனவரி 25 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தாஎதி வரையிலான காலகட்டத்தில், உங்களது மொபைல் எண்ணினை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யலாம்.
மொபைல் நம்பரை பதிவு செய்யாத வாக்காளர்கள், இதனை பதிவு செய்த பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதியதாக மின்னணு வடிவில் வாக்காளர் அட்டை டிஜிட்டல் முறையில் பெறும் வாக்காளர், அதனை அட்டையாகவும் பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் தாமதம் இருக்காது.
இந்த மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் டவுன்லோடு செய்து இணையத்தில் லாகின் செய்த பின்பு, E- EPIC என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இந்த பதிவிறக்கம் காலை 11.14 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கருத்துகள்