முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய பொம்மை கண்காட்சி-2021-ன் இணையதளம் துவக்கம்

ஜவுளித்துறை அமைச்சகம் இந்திய பொம்மை கண்காட்சி-2021-ன் இணையதள




த்தை மத்திய அமைச்சர்கள் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, திருமதி ஸ்மிரிதி ஜுபின் இரானி மற்றும் திரு பியுஷ் கோயல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

இந்தியாவில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பிரதமர் விடுத்த அறைகூவலை தொடர்ந்தும், ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம்’ ஆகிய பிரச்சாரங்களை சார்ந்தும், சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய பொம்மை கண்காட்சி-2021 ஏற்பாடு செய்யப்படுகிறது.

2021 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இணைய முறையில் நடைபெறும் இக்காண்காட்சியின் இணையதளத்தை மத்திய அமைச்சர்கள் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, திருமதி ஸ்மிரிதி ஜுபின் இரானி மற்றும் திரு பியுஷ் கோயல் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு கோயல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்கும் வகையில் தரம்வாய்ந்த பொம்மைகளை உருவாக்கவும், நற்பெயர் ஈட்டவும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு இந்திய பொம்மை கண்காட்சி ஊக்கமளிக்கும் என்றார்.

கல்வி அமைச்சர் திரு நிஷாங்க் பேசுகையில், பொம்மை கண்காட்சியில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து 1.27 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெறுவது இதுவே முதல் முறை; இன்று தொடங்கப்பட்ட இணையதளம் நாட்டின் பொம்மை கைவினைஞர்களுக்கு ஒரு மெய்நிகர் தளத்தை வழங்கும் என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தர நிர்ணயக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பொம்மைகள் பாதுகாப்பு தரத்தில் தோல்வியடைந்தன என்றும்,

அதன்பிறகு, வெளிநாட்டு பொம்மைகளுக்கான இறக்குமதி வரி 60% ஆக உயர்த்தப்பட்டு, தரக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் கூறினார்.

நாட்டின் முதல் பொம்மை கண்காட்சியை ஏற்பாடு செய்ய 6 மத்திய அமைச்சகங்கள் கைகோர்த்துள்ளன. இதற்கான பதிவு செய்யும் தளத்தை இன்று அறிமுகப்படுத்துகிறோம் என்று ஜவுளி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி இரானி கூறினார்.

வர்த்தக அமைச்சகத்தின் உதவியுடன் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன என்று கூறிய அவர், இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல், பாரம்பரிய பொம்மை கைவினைஞர்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்படுகின்றன என்றார் அவர்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது ஓய்வூதியதாரர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஓய்வூதியர்களின் அச்சங்களை போக்குவதற்காக 20 இந்திய நகரங்களில்,  ஓய்வூதியர்களை சென்றடையும் வகையில் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவைக் கொண்டு காணொலி உரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. யோகா குறித்த இணைய நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

கொவிட் பெருந்தொற்றின் போது மின்னணு முறைகளை பின்பற்றி சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டது. மேலும், தபால்காரர்களின் மூலம் ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று சான்றிதழை பெறும் சேவையும் தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் அனுமதியளிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 3802779 ஆகும். 3118956 பேர் தற்போது பணியில் உள்ளனர். ஓய்வு பெறுதல், ராஜினாமா செய்தல், இறப்பு, பதவி உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள், விதிகளை பின்பற்றி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன..

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த