முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொர்ணவிராலியங்கிரி எனும் விராலிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு பிப்ரவரி 25 குடமுழுக்கு விழா

பிப்ரவரி 25 ஆம் தேதி  விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு நடத்த தெய்வீகத் தமிழ்ப் பேரவை  அமைப்பு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில்  மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் மதுரை ஆண்ட பாண்டிய மன்னர்களும் புதுக்கோட்டை  சமஸ்தானத்தின் மன்னர்களும்  திருப்பணி செய்த  பிரசித்தி பெற்ற.  சொர்ணவிராலியங்கிரி எனும் விராலிமலை  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடக்கும் சூழலில்  அருணகிரிநாதரால் பாடல் பெற்ற புகழுடைய ஸ்தலமான விராலிமலையில் குடமுழுக்கு விழாவை தமிழ் திருமுறைகள் முழங்க ஓதுவார்கள் நடத்த வேண்டுமென பலர் கோரிக்கை.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பாலசுப்பிரமணியர் கோயில் அருணகிரிநாதரும்  பாடப்பெற்ற சித்தர்கள் வணங்கிய இந்துத் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் கோவிலின் குடமுழுக்கு தமிழில்தான் நடத்த வேண்டுமென்றும், தமிழகத்தில் உள்ள அரசு கோவில்களில் யாகசாலை பூஜை முடிந்து  தமிழில் திருமுறைகள் மூலம் பூஜை செய்வதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே நூல்கள் அச்சிட்டு வெளியிட உள்ளது. ஏற்கனவே தஞ்சை பிகதீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நீதிமன்ற வழிகாட்டுதல் முறைப்படி தமிழில் திருமுறைகள் படிக்க  குடமுழுக்கு நடத்தப்பட்டது அதைப் போல விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலும் வருகிற 25ம் தேதி தமிழில்  தமிழ் ஓதுவார் பெயர்களை குடமுழுக்கு அழைப்பிதழில் அச்சிட வேண்டுமெ எனவும் தெய்வீக தமிழ்பேரவை அமைப்பினர் கூறிவர காரணம் பல அரசியல் 

ஸ்ரீ







சண்முகநாதர் ஆறுமுகமாக அருள்தர உடன்  வள்ளி, தெய்வானை இருக்க காசி வில்வம் ஸ்தல விருட்ஷமாகிய சரவணப் பொய்கை எனும் நாக தீர்த்தமாக  தொன்மை வாய்ந்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன ஆலயம் திருச்சிராப்பள்ளியில் வயலூர் ஸ்தலத்துக்கு வந்த அருணகிரி நாதரிடம் 'விராலிமலைக்கு வா’ என்று முருகப்பெருமான் அழைக்க.  மலையைத் தேடிச் சென்ற அருணகிரிநாதர். வழி தெரியாமல் தவிக்கவே, வேடனாக வந்து ஸ்தலத்தை அடையாளம் காட்டியருளினார் கந்தவேள் என்கிறது ஸ்தல புராணம். அதோடு அருணகிரிநாதருக்கு அஷ்டமா ஸித்திகளையும் தந்தருளிய தலமாகும் விராலிமலை. முருகக்கடவுளை மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரியார் 

சொர்ண விராலியங்கிரி என்று புராணங்கள் குறிப்பிடும் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுப்ரமணியரை வணங்கினால், சகல ஐஸ்வரியங் களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் விழாக்கள் உண்டு. ஐப்பசியில் கந்தசஷ்டி விழா, பிரமாண்டமாக நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் விழாவில் பங்கேற்று வழிபட்டால், மனதில் அமைதி நிலவும்; 

திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரை சாலையில்  ஆங்காங்கே மயில்களின் நடமாட்டத்தைக் காணலாம். அப்படி மயில்களை ரசிக்கிற போதே பிரமாண்ட மலை கண்ணுக்குத் தெரியும்.மலை வைத்தே ஊரின் அமைப்பு உரூவானது. மையப்பகுதியில், பிரமாண்ட மலையின் மேல் அழகுறக் கோவில் கொண்டிருக்கிறார், ஆறுமகங்களுடன் அருளாளர் முருகக் கடவுள்.

சுமார் 2,000 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம். ஆறுமுகங்களுடன் அசுர மயிலில் அமர்ந்தபடி, அற்புதமாகக் காட்சி தருகிறார் மயில்வாகனன். எப்படியும் இங்கே ஆயிரத்து ஐந்நூறு மயில்களுக்கும் அதிகமாக இருக்கின்றன என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர், பக்தர்கள்.

ஒருகாலத்தில் குரா எனும் வகை மரங்கள் அடர்ந்த வனமாக, மலை சூழ்ந்த இடமாகத் திகழ்ந்தது இந்தப் பகுதி. வேடன்  வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவனுக்குப் போக்குக் காட்டி ஓடியது. அந்த வேங்கையை எப்படியும் பிடித்துவிடுவதென வேடனும் பின்னால் ஓடிவந்தான். அப்போது குரா மரத்துக்கு அருகில் வந்ததும் வேங்கை சட்டென்று காணாமல் போகவே. திடுக்கிட்டுப் போன வேடன். அங்கே திடீரென்று தோன்றிய மயிலும் விபூதி வாசனை யும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை அறிவிக்க, பூரித்துப் போனான். பிறகு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முருகப்பெருமானின் விக்கிரகத் தைப் பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர் என்கிறது ஸ்தல புராணம். அதை பாண்டிய மன்னர் திருப்பணி செய்தது வரலாறு. அதன் குடமுழுக்கு விழா சிறப்பாக நடக்க உள்ளது பக்தர்கள் வழிபட்டு  அருள் பெருக

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...