பிப்ரவரி 25 ஆம் தேதி விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு நடத்த தெய்வீகத் தமிழ்ப் பேரவை அமைப்பு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் மதுரை ஆண்ட பாண்டிய மன்னர்களும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர்களும் திருப்பணி செய்த பிரசித்தி பெற்ற. சொர்ணவிராலியங்கிரி எனும் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடக்கும் சூழலில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற புகழுடைய ஸ்தலமான விராலிமலையில் குடமுழுக்கு விழாவை தமிழ் திருமுறைகள் முழங்க ஓதுவார்கள் நடத்த வேண்டுமென பலர் கோரிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பாலசுப்பிரமணியர் கோயில் அருணகிரிநாதரும் பாடப்பெற்ற சித்தர்கள் வணங்கிய இந்துத் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் கோவிலின் குடமுழுக்கு தமிழில்தான் நடத்த வேண்டுமென்றும், தமிழகத்தில் உள்ள அரசு கோவில்களில் யாகசாலை பூஜை முடிந்து தமிழில் திருமுறைகள் மூலம் பூஜை செய்வதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே நூல்கள் அச்சிட்டு வெளியிட உள்ளது. ஏற்கனவே தஞ்சை பிகதீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நீதிமன்ற வழிகாட்டுதல் முறைப்படி தமிழில் திருமுறைகள் படிக்க குடமுழுக்கு நடத்தப்பட்டது அதைப் போல விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலும் வருகிற 25ம் தேதி தமிழில் தமிழ் ஓதுவார் பெயர்களை குடமுழுக்கு அழைப்பிதழில் அச்சிட வேண்டுமெ எனவும் தெய்வீக தமிழ்பேரவை அமைப்பினர் கூறிவர காரணம் பல அரசியல்
ஸ்ரீ
சண்முகநாதர் ஆறுமுகமாக அருள்தர உடன் வள்ளி, தெய்வானை இருக்க காசி வில்வம் ஸ்தல விருட்ஷமாகிய சரவணப் பொய்கை எனும் நாக தீர்த்தமாக தொன்மை வாய்ந்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன ஆலயம் திருச்சிராப்பள்ளியில் வயலூர் ஸ்தலத்துக்கு வந்த அருணகிரி நாதரிடம் 'விராலிமலைக்கு வா’ என்று முருகப்பெருமான் அழைக்க. மலையைத் தேடிச் சென்ற அருணகிரிநாதர். வழி தெரியாமல் தவிக்கவே, வேடனாக வந்து ஸ்தலத்தை அடையாளம் காட்டியருளினார் கந்தவேள் என்கிறது ஸ்தல புராணம். அதோடு அருணகிரிநாதருக்கு அஷ்டமா ஸித்திகளையும் தந்தருளிய தலமாகும் விராலிமலை. முருகக்கடவுளை மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரியார்
சொர்ண விராலியங்கிரி என்று புராணங்கள் குறிப்பிடும் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுப்ரமணியரை வணங்கினால், சகல ஐஸ்வரியங் களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் விழாக்கள் உண்டு. ஐப்பசியில் கந்தசஷ்டி விழா, பிரமாண்டமாக நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் விழாவில் பங்கேற்று வழிபட்டால், மனதில் அமைதி நிலவும்;
திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரை சாலையில் ஆங்காங்கே மயில்களின் நடமாட்டத்தைக் காணலாம். அப்படி மயில்களை ரசிக்கிற போதே பிரமாண்ட மலை கண்ணுக்குத் தெரியும்.மலை வைத்தே ஊரின் அமைப்பு உரூவானது. மையப்பகுதியில், பிரமாண்ட மலையின் மேல் அழகுறக் கோவில் கொண்டிருக்கிறார், ஆறுமகங்களுடன் அருளாளர் முருகக் கடவுள்.
சுமார் 2,000 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம். ஆறுமுகங்களுடன் அசுர மயிலில் அமர்ந்தபடி, அற்புதமாகக் காட்சி தருகிறார் மயில்வாகனன். எப்படியும் இங்கே ஆயிரத்து ஐந்நூறு மயில்களுக்கும் அதிகமாக இருக்கின்றன என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர், பக்தர்கள்.
ஒருகாலத்தில் குரா எனும் வகை மரங்கள் அடர்ந்த வனமாக, மலை சூழ்ந்த இடமாகத் திகழ்ந்தது இந்தப் பகுதி. வேடன் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவனுக்குப் போக்குக் காட்டி ஓடியது. அந்த வேங்கையை எப்படியும் பிடித்துவிடுவதென வேடனும் பின்னால் ஓடிவந்தான். அப்போது குரா மரத்துக்கு அருகில் வந்ததும் வேங்கை சட்டென்று காணாமல் போகவே. திடுக்கிட்டுப் போன வேடன். அங்கே திடீரென்று தோன்றிய மயிலும் விபூதி வாசனை யும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை அறிவிக்க, பூரித்துப் போனான். பிறகு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முருகப்பெருமானின் விக்கிரகத் தைப் பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர் என்கிறது ஸ்தல புராணம். அதை பாண்டிய மன்னர் திருப்பணி செய்தது வரலாறு. அதன் குடமுழுக்கு விழா சிறப்பாக நடக்க உள்ளது பக்தர்கள் வழிபட்டு அருள் பெருக
கருத்துகள்