54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு
. ஐ.ஜி அந்தஸ்த் அதிகாரிகளில் துவங்கி ஏ.எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரிகள் வரை பலரும் இடமாற்றம்.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யான அன்பு, திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையராகவும்,அவர் வகித்த பொறுப்பில், பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு ஐ.ஜி-யான கணேசமூர்த்தியும் நியமனம். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னரான தேன்மொழி மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி-யாகவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி-யான வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னராகவும்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் கமிஷனரான கண்ணன், சென்னை பெருநகர காவல் தெற்கு பகுதி சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பிலிருந்த தினகரன், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுதாகர் மதுரை சரக டி.ஜ.ஜி-யாகவும், வி.பாலகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு பகுதி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், தமிழ்நாடு சிறப்புக் காவல் 13 ஆவது பட்டாலியனுக்கும் கமாண்டன்ட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தூத்துக்குடி எஸ்.பி-யாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய திருநெல்வேலி எஸ்.பி-யாக கிருஷ்ணராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ஏப்ரல், 2017-ல் திருப்பூரில் நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் பெண்களை தாக்கிய புகாரில் சிக்கியவர் அப்போதைய திருப்பூர் ஏ.எஸ்.பி-யான ஆர்.பாண்டியராஜன். இதைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பாண்டியராஜனுக்கு, பின்னாளில் கரூர் மாவட்ட எஸ்.பி பொறுப்பு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் அங்கேயிருந்தும் மாற்றப்பட்டு, பொருளாதார குற்ற விசாரணைப்பிரிவின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். இவரை இப்போது நீலகிரி எஸ்.பி-யாக அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரிகளில் ஆரம்பித்து, ஏ.எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரிகள் வரை பலரையும் இடமாற்றம் செய்திருக்கிறது அரசு.
சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக இருந்த அன்பு, திருநெல்வேலி மாநகர ஆணையராக மாற்றப்பட்டிருக்கிறார். அவர் வகித்து வந்த பொறுப்பில், பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு ஐ.ஜி-யான கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னரான தேன்மொழி அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி-யாக இருந்த வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் கமிஷனரான கண்ணன், சென்னை பெருநகர காவல் தெற்கு பகுதி சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பிலிருந்த தினகரன், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுதாகர் மதுரை சரக டி.ஜி.ஜி-யாகவும், வி.பாலகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு பகுதி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார், தமிழ்நாடு சிறப்புக் காவல் 13 ஆவது பட்டாலியனுக்கு கமாண்டன்ட்டாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தூத்துக்குடி கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய திருநெல்வேலி எஸ்.பி-யாக கிருஷ்ணராஜும்
ஏப்ரல், 2017 ஆம் ஆண்டில் திருப்பூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களைத் தாக்கிய புகாரில் சிக்கிய அப்போதைய திருப்பூர் ஏ.எஸ்.பி-யான ஆர்.பாண்டியராஜன். தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பாண்டியராஜனுக்கு, கரூர் மாவட்ட எஸ்.பி யாக பொறுப்பு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் அங்கிருந்தும் மாற்றப்பட்டு, பொருளாதார குற்ற விசாரணைப்பிரிவின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். இவரை இப்போது நீலகிரி எஸ்.பி-யாக மாற்றம் செய்திருக்கிறது.
அடையாறு துணை ஆணையராக இருந்து கரூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட பகலவன், மீண்டும் சென்னை மாநகரத்துக்குள் வருகிறார். அவருக்குத் திருவல்லிக்கேணி துணை ஆணையர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சரவணன், போலீஸ் பயிற்சி பள்ளியின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய துணை ஆணையராக வி.ஆர்.ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பணியிட மாற்றத்தின்படி, எட்டு மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்குள் மட்டும் ஒன்பது அதிகாரிகள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் இரண்டு கூடுதல் ஆணையர்கள், நான்கு இணை ஆணையர்கள், இரண்டு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர்கள், ஒரு போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் என சென்னை காவல்துறை மொத்தமாகவே மாற்றமடைந்திருக்கிறது.
கருத்துகள்