முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரை

பிரதமர் அலுவலகம் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரை


நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிலளித்து உரையாற்றினார்.

குடியரசுத்தலைவரின் உரை இந்தியாவின் சங்கல்ப சக்தியை பறைசாற்றுவதாக அமைந்தது என்று அவர் கூறினார். அவரது உரை இந்திய மக்களிடையே நம்பிக்கையை ஊக்குவிப்பதாக இருந்தது என்று கூறிய திரு மோடி அவையின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். விவாதத்தின் போது, ஏராளமான பெண் எம்பிக்கள் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார். அவர்களது சிந்தனையின் மூலம் அவையைச் செழுமைப்படுத்தியதாக அவர் பாராட்டினார்.

உலகப் போர்களுக்குப் பின்னர், உலகம் இருந்த நிலையை வரலாற்றில் தேடிய போது, கோவிட்டுக்கு பிந்தைய உலகம் வேறு விதமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். சில சமயங்களில், உலக நடைமுறைகளில் இருந்து தனித்திருப்பது முன்னேற்றத்துக்கு  மாறாக  அமைந்து விடும். அதனால்தான், இந்தியா மேலும் உலக நன்மைக்காக, தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க பாடுபட்டு வருகிறது. உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் என்பது எந்த தனிப்பட்ட தலைவரின் சிந்தனை அல்ல. அது நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கையும் மக்களால் ஒற்றுமைப்படுத்துவதாகும்.

கொரோனாவைக் கையாண்டதன் பெருமை 130 கோடி இந்தியர்களையும் சார்ந்ததாகும் என்று பிரதமர் கூறினார். ‘’ நமது மருத்துவர்கள், செவிலியர்கள், கோவிட் வீரர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களின் மகத்தான உழைப்பால், உலகப் பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு வலு சேர்த்தனர்’’ என்று பிரதமர் கூறினார்.

கொரோனா காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாயை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி அரசு உதவியது என்று பிரதமர் தெரிவித்தார். ஜன் தன் –ஆதார்- கைப்பேசி இணைப்பு மக்களின் வாழ்வில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இது ஏழையிலும், பரம ஏழைக்கும், நலிவடைந்த, ஒடுக்கபட்ட பிரிவினருக்கும் உதவியது. கொரோனா காலத்திலும் சீர்திருத்தங்கள் தொடர்ந்ததாகவும், அது நமது பொருளாதாரத்தில் புதிய உத்வேகத்தை ஏற்டுத்தியது என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இரட்டை இலக்க வளர்ச்சி என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

நமது விவசாயிகளின் போராட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், வேளாண் மசோதாக்கள் பற்றி குரல் எழுப்பும் விவசாயிகளை இந்த அவை, அரசு உள்ளிட்ட  அனைவரும் மதிப்பதாக தெரிவித்தார். இதனால்தான், உயர்மட்டத்தில் உள்ள அமைச்சர்கள் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். விவசாயிகள் மீது பெருமதிப்பு உள்ளது. வேளாண்மை தொடர்பான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், எந்த மண்டியும் மூடப்படவில்லை. அதேபோல, எம்எஸ்பியும் உள்ளது. எம்எஸ்பி அடிப்படையில் கொள்முதலும் நடக்கிறது. மண்டிகளை வலுப்படுத்த பட்ஜெட்டில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளைப் புறக்கணிக்க முடியாது.

இந்த அவையை முடக்குபவர்கள் திட்டமிட்ட உத்தியின் படி நடந்து கொள்வதாக திரு. மோடி கூறினார். மக்கள் உண்மையை உணர்ந்துள்ளதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களது நடவடிக்கைகள் மூலம், மக்களின் நம்பிக்கையை ஒரு போதும் வெல்ல முடியாது. கோரிக்கை வைக்காமல், ஒரு சீர்திருத்தத்தை ஏன் அரசு கொண்டு வரவேண்டும் என்ற வாதத்தையை அவர் முன்வைத்தார். அனைத்தும், விருப்பத்தின் அடிப்படையிலானது என்று கூறிய அவர், கேட்பதற்காக நாம் காத்திருக்க முடியாது என்றார். காலத்தின் தேவைக்கு ஏற்ப, பல முற்போக்கான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மக்களை வலுக்கட்டாயப்படுத்துவதோ, கெஞ்சுவதோ ஜனநாயகமாக இராது. நாட்டின் தேவைக்கு ஏற்ப மக்கள் நலனுக்காக, நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு உழைத்து வருகிறோம். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம். எண்ணம் சரியாக இருக்கும் போது, அதன் பயன்களும் சரியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

வேளாண்மை என்பது சமூகம், கலாச்சாரம், நமது விழாக்களின்  ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் விதை விதைத்தல், அறுவடை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. நமது மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான  பேரைப் புறக்கணிக்க முடியாது. சிறு விவசாயிகளைப் புறக்கணிக்க முடியாது. சிறிய அளவில் நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்திலிருந்து போதுமான வருமானம் பெற முடியாத நிலை கவலைக்குரியதாகும். விவசாயத்தில் போடும் முதலீடு பாதிப்புக்குள்ளாகிறது. சிறு விவசாயிகளுக்கான நடவடிக்கைகள் மிகவும் அவசியம். எனவே, நமது விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்ற வேண்டிய அவசியம் நமக்குள்ளது.

அவர் தனது பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பதற்கும், எந்தப் பயிரையும் விளைவிப்பதற்கும் அவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.  விவசாயத்தில் செய்யப்படும் முதலீடு வேலை வாய்ப்புக்கு வழி வகுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

 

அவர்களுக்கு சமமான சூழல், நவீன தொழில் நுட்பம், நம்பிக்கையை விதைத்தல் ஆகியவற்றை நம்மால் உருவாக்க முடிந்தால், ஆக்கபூர்வமான சிந்தனை வேண்டும், பழைய வழிகள், அளவுகோல்கள் எடுபடாது என்று பிரதமர் கூறினார்.

பொதுத்துறை அவசியம் தான் என்று கூறிய திரு மோடி, அதேசமயம், தனியார் துறையின் பங்கேற்பும் மிகவும் அவசியம் என்றார். தொலைத் தொடர்பு, மருந்து என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், தனியார் துறையின் பங்களிப்பை நம்மால் காண முடியும். இந்தியா மனித நேயத்துடன் தொண்டாற்ற முடிந்துள்ளது என்றால், அது தனியார் துறையின் பங்களிப்பால் தான். ‘’தனியார் துறைக்கு எதிராக முறையான சொற்களைப் பயன்படுத்தியதால், கடந்த காலத்தில் சிலருக்கு வாக்குகளை வேண்டுமானால் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், அந்தக் காலம்  மலையேறி விட்டது. தனியார் துறையை குறைகூறும் கலாச்சாரம் இனி மேல் எடுபடாது. நமது இளைஞர்களை இதைப்போல அவமதிக்க முடியாது’’ என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை பிரதமர் விமர்சித்தார். '' விவசாயிகள் இயக்கம் புனிதமானதாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஆனால், ஒரு பிரிவினர், புனிதமான இயக்கத்தைக் கையில் எடுத்த போது, கடும் குற்றங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை காட்டியது எந்த நோக்கத்தை நிறைவேற்றும்? சோதனைச் சாவடிகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை. தொலைத் தொடர்பு கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. இவை எல்லாம் புனிதமான இயக்கமா? ‘’ என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். செயல் புரிபவர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் வேறுபாடு உள்ளதை நாம் உணரவேண்டும். சரியான விஷயங்களை மட்டும் சிலர் பேசுவார்கள். ஆனால், அதே பிரிவினர், சரியான செயல்களைச் செய்ய வேண்டிய நிலை வரும்போது, வார்த்தைகளை செயலில் காட்ட தவறி விடுவார்கள்.

தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி பேசுபவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்ப்பார்கள். பாலின நீதி பற்றி அவர்கள் பேசுவார்கள். ஆனால், முத்தலாக்கை எதிர்ப்பார்கள். இத்தகைய பிரிவினர் நாட்டை தவறான வழியில் இட்டுச் செல்கின்றனர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு பாடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். சமச்சீரான வளர்ச்சியை நோக்கி நாட்டை எடுத்துச் செல்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கிழக்கு இந்தியாவுக்கான இயக்க வழியில் அரசு உழைத்து வருவதாக பிரதமர் கூறினார். பெட்ரோலியத் திட்டங்கள், சாலைகள், விமான நிலையங்கள், நீர்வழிகள், சிஎன்ஜி, எல்பிஜி இணைப்பு, இணைய தொடர்பு திட்டங்களை அப்பிராந்தியத்தில் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

எல்லைக் கட்டமைப்பை, வரலாற்று புறக்கணிப்பு செய்வதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நமது எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை பாதுகாப்பு படைகள் நிறைவேற்றி வருகின்றன. வீரர்களின் துணிச்சல், வலிமை, தியாகம் ஆகியற்றைப் பிரதமர் பாராட்டினார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.