பிரதமர் அலுவலகம் மத்தியப்பிரதேசம் சித்தியில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், கருணைத் தொகை
க்கு ஒப்புதல்
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கூற்றை மேற்கோள்காட்டி, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மத்தியப்பிரதேசம் சித்தியில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிக மோசமானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல்கள். விபத்து நேரிட்ட இடத்தில் அரசு அதிகாரிகள் முழு முனைப்புடன் மீட்புப் பணியிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையை வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மத்தியப்பிரதேசம் சித்தியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும், கருணைத் தொகையாக, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள்