முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் முதலாவது பிரத்யேக சர்வதேச கப்பல் துறைமுகத்தை கேரளாவில் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

பிரதமர் அலுவலகம் இந்தியாவின் முதலாவது பிரத்யேக சர்வதேச கப்பல் துறைமுகத்தை கேரளாவில் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை



கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், முதல்வர் திரு பினராயி விஜயன், மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மாநில அமைச்சர் திரு. மன்சுக் மான்டவியா அவர்களே, இணை அமைச்சர் திரு. முரளிதரன் அவர்களே,

மேடையில் உள்ள மதிப்புக்குரியவர்களே,

நண்பர்களே,

கொச்சிக்கு நமஸ்காரம். கேரளாவுக்கு நமஸ்காரம். அரபிக் கடலின் ராணி எப்போதும் அழகானதாக உள்ளது. உங்கள் மத்தியில் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சியைக் கொண்டாடுவதற்காக நாம் இன்றைக்கு ஒன்று கூடியிருக்கிறோம். கேரளாவின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியைக் கொண்டாடுகிறோம். இன்று தொடங்கப்படும் பணிகள், பல்வேறு துறைகளைச் சார்ந்தவையாக உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு உந்துதல் தருபவையாக இவை இருக்கும்.

நண்பர்களே,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குச் சென்றேன். இந்தியாவில் மிக நவீனமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாக அது உள்ளது. இன்றைக்கு, கொச்சியில் மீண்டும் ஒரு சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறோம்: கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோகெமிக்கல் மூலம் கிடைக்கும் புரொப்பிலின் பொருட்கள் உற்பத்தி வளாகம் தொடங்கப்படுகிறது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்தை பலப்படுத்த இது உதவும். இந்த வளாகம் செயல்படத் தொடங்குவதால் அன்னியச் செலாவணி மிச்சமாகும். இதன் மூலம் பல வகையான தொழிற்சாலைகள் உருவாகி, நிறைய வேலைவாய்ப்புகள் பெருகும்.

நண்பர்களே,

தொழில், வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரமாக கொச்சி உள்ளது. நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நகர மக்கள் அறிவார்கள். சரியான வகையில் போக்குவரத்து இணைப்பு வசதி தேவை என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர். அதனால் தான், ரோ-ரோ சேவையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது விசேஷமான விஷயமாக உள்ளது. சாலை வழியாக முப்பது கிலோ மீட்டர் பயணம் என்பது, நீர்வழித் தடத்தில் மூன்றரை கிலோ மீட்டர் என குறைகிறது. அதாவது சௌகரியம் அதிகம், வணிகம் அதிகம், திறன் உருவாக்கல் அதிகம், நெரிசல் குறைவு, மாசு ஏற்படுதல் குறைவு போன்றவை இதன் மூலம் சாத்தியமாகிறது. போக்குவரத்துச் செலவும் குறைகிறது.

நண்பர்களே,

சுற்றுலாவாசிகள் கேரளாவில் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணத்தில் இடைவழி இடமாக கொச்சி நகருக்கு வருவதில்லை. கலாச்சாரம், உணவு, கடற்கரைகள், மார்க்கெட் பகுதிகள், வரலாற்று முக்கியத்துவமான இடங்கள், ஆன்மிகத் தலங்கள் நன்கு அறியப்பட்டவையாக உள்ளன. இங்கு சுற்றுலா தொடர்பான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொச்சியில் சகரிக்கா என்ற சர்வதேச கப்பல் முனையம் தொடங்கப்படுவது இதற்கு ஓர் உதாரணமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சௌகரியமாகவும், வசதியானதாகவும் இந்த முனையம் இருக்கும். கப்பலில் வரும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இதன் மூலம் பயன் பெறுவர்.

நண்பர்களே,

கடந்த சில மாதங்களில் சில விஷயங்களை நான் கவனித்து வருகிறேன். நிறைய பேர் தாங்கள் உள்ளூர் பகுதிகளில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்த படங்களை சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள், எனக்கும் கூட பலர் எழுதியிருக்கிறார்கள். உலக அளவிலான பெருந்தொற்று சர்வதேச பயணங்களைப் பாதித்த நிலையில், மக்கள் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்கின்றனர். இது நமக்கு நல்லதொரு வாய்ப்பு. ஒருபுறம், உள்ளூர் சுற்றுலா தலங்களை நம்பியுள்ள மக்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும் நிலையில், நமது இளைஞர்களுக்கு நம் கலாச்சாரம் மீதான ஈர்ப்பும் அதிகரிக்கிறது. பார்க்க, கற்க, புதியவற்றைக் கண்டறிய இதில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஸ்டார்ட் அட் நிறுவனங்கள் தொடங்கும் இளைஞர்கள், சுற்றுலா தொடர்பான சேவைகளில் புதுமையான சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, முடிந்த வரையில் முயற்சிக்க வேண்டும் என உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சுற்றுலாத் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உலக சுற்றுலா மதிப்பீட்டு பட்டியலில், 65வது இடத்தில் இருந்து இந்தியா 34வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இதைவிட இன்னும் சிறப்பாக நம்மால் உயர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நண்பர்களே,

பொருளாதார வளர்ச்சியில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன: திறன் வளர்ப்பு மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப நவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அடுத்த இரு வளர்ச்சிப் பணிகள் இந்த விஷயங்கள் தொடர்பானவை. `விக்யான் சாகர்' என்பது கொச்சி கப்பல் கட்டும் தள வளாகத்தில் புதிய அறிவுசார் வளாகமாக இருக்கும். இதன் மூலம், நமது மனித வள மேம்பாட்டு திறன் விரிவாக்கம் செய்யப்படும். தொழில் திறன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இது இருக்கும். கடல்வளம் சார்ந்த பொறியியல் கல்வி பயில்வோருக்கு உதவுவதாகவும் இந்த வளாகம் அமையும். வரக்கூடிய காலங்களில், இந்தத் துறை முக்கியத்துவம் பெறும் என்று நான் நம்புகிறேன். இந்தத் துறையில் அறிவார்ந்துள்ள இளைஞர்களின் வீட்டு வாசலைத் தேடி வாய்ப்புகள் வரும். பொருளாதார வளர்ச்சிக்கு, இப்போதுள்ள திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். இங்கே தென்பகுதி நிலக்கரி இறங்குதளம் மறுகட்டுமானத்துக்கு இப்போது அடிக்கல் நாட்டுகிறோம். இதன் மூலம் சரக்குப் போக்குவரத்து செலவுகள் குறையும், சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும். வணிகம் வளமாக அமைவதற்கு இவை இரண்டுமே முக்கியமானவை.

நண்பர்களே,

இன்றைக்கு, கட்டமைப்பு என்பதற்கான வரையறையும், வாய்ப்புகளும் மாறியுள்ளன. நல்ல சாலைகள், வளர்ச்சிப் பணிகள், சில நகரங்களுக்கு இடையில் போக்குவரத்து இணைப்பு வசதி என்பவற்றைத் தாண்டியதாக அவை உள்ளன. வரக் கூடிய தலைமுறையினருக்கு உயர் தரத்திலான, அதிக அளவிலான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துகிறோம். தேசிய கட்டமைப்புத் திட்டத்தின் மூலம் ரூ.110 லட்சம் கோடி அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் படுகின்றன. அதில் கடலோரப் பகுதிகளுக்கு, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இன்றைக்கு, எல்லா கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்தும் உயர் லட்சியத் திட்டத்தை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதேபோல,  நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிக துறைமுகங்கள் உருவாக்குதல், இப்போதுள்ள துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தி, பணியாற்றி வருகிறோம். கடலோரப் பகுதியில் மின் உற்பத்தி, நீடித்த கடலோரப் பகுதி மேம்பாடு, கடலோரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா அமல் செய்யப்படுகிறது. மீனவர் சமுதாய மக்களின் பன்முகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத் திட்டம் அமைந்துள்ளது. அதிக கடன் வசதி கிடைக்க இதில் ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல, கடல் உணவு ஏற்றுமதிக்கான மையமாக இந்தியாவை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கடல்பாசி வேளாண்மை பிரபலம் அடைந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மீன்வளத் துறையை இன்னும் துடிப்பானதாக ஆக்குவதற்கு, ஆராய்ச்சியாளர்களும், புதுமை சிந்தனையாளர்களும் புதிய சிந்தனைகளை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடினமாக உழைக்கும் நமது மீனவர்களுக்கு பெரிய மரியாதை அளிப்பதாக இது இருக்கும்.

நண்பர்களே,

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில், கேரளாவுக்குப் பயன்தரக் கூடிய பல திட்டங்களை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோவின் அடுத்த கட்ட விரிவாக்கம் இதில் அடங்கும். இந்த மெட்ரோ நெட்வொர்க் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. ஆக்கபூர்வ பணி செயல்பாடுகளுக்கு நல்ல உதாரணமாக இது அமைந்துள்ளது.

நண்பர்களே,

கடந்த ஆண்டு, மனிதகுலம் இதுவரை சந்தித்திராத சவாலை சந்தித்த ஆண்டாக அமைந்துவிட்டது. 130 கோடி இந்தியர்கள் மூலம் கிடைத்த சக்தியால், கோவிட்-19 பாதிப்புக்கு எதிரான நமது தேசத்தின் நடவடிக்கைகள் உணர்வுப்பூர்வமானதாக அமைந்திருந்தன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் தேவைகள் குறித்து அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக வளைகுடா பகுதியில் உள்ள இந்தியர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறது. வளைகுடா பகுதியில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது நாடு பெருமைப்படுகிறது. கடந்த முறை நான் சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் சென்ற சமயங்களில் அங்கு வாழும் இந்தியர்களுடன் நேரத்தை செலவிட்டது எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். அவர்களுடன் நான் உணவருந்தி, கலந்துரையாடினேன். வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலமாக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற முக்கியமான தருணங்களில் அவர்களுக்கு உதவுவதை அரசு பெருமையாகக் கருதுகிறது. கடந்த சில ஆண்டுகளில், வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடிக் கொண்டிருந்த பல இந்தியர்களை அந்த அரசுகள் விடுதலை செய்துள்ளன. அதுபோன்ற மக்களுக்காக அரசு எப்போதும் குரல் கொடுக்கும். இந்த விஷயத்தில் கனிவுடன் நடந்து கொண்ட அந்த நாடுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தனிப்பட்ட கோரிக்கைகளை வளைகுடா நாடுகளின் அரசுகள் கனிவுடன் ஏற்றுக் கொண்டு, நம் மக்கள் மீது சிறப்பு அக்கறை காட்டியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள இந்தியர்கள் திரும்பி வருவதற்கு அவர்கள் உயர் முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த சேவைக்கு உதவ போக்குவரத்து வசதிகளை நாம் உருவாக்கினோம். வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்த அரசு எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

நண்பர்களே,

இன்றைக்கு நாம் வரலாற்றின் முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். இன்றைய சூழலில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான், வரக் கூடிய காலங்களில் நமது வளர்ச்சிப் பாதைக்கு அடித்தளம் அமைப்பதாக இருக்கும். பிரச்சினைகள் வரும் போது மீண்டெழுந்து, உலக நன்மைக்கான பங்களிப்பு செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. சரியான வாய்ப்புகள் கிடைத்தால் தங்களால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என நமது மக்கள் காட்டியுள்ளனர். அந்த வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொண்டே இருப்போம். நாம் ஒன்றுபட்டு நின்று தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம். இன்றைக்கு தொடங்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக கேரள மக்களுக்கு மீண்டும் ஒரு முறை என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. மிக்க நன்றி. ஓராயிரம் நன்றி

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த