முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை




பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்  கிராமப்புற பெண்களுக்கு நிதி அதிகாரமளித்தல்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திரு ஸ்மிரிதி ஜுபின் இரானி, கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 417,498,276. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 231,226,199 ஆகும்.

பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 9,88,79,708. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 2,67,91,274 ஆகும்.

பிரதமரின் ஜீவன் சுரக்‌ஷா பீமா திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 22,26,96,354. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 8,34,94,070 ஆகும்.

அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 28,510,260. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 12,445,034 ஆகும்.

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 274,761,862. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 186,045,718 ஆகும்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 110,333. இதில் பெண்களுக்கு சொந்தமான கணக்குகள் 90,185 ஆகும்.

பெண்கள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவும், பெண் குழந்தைகளுக்கான நல திட்டத்தின் நிர்வாக அமைப்புகளாக செயல்படவும் மகிளா சக்தி கேந்திரா திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சீரடைந்து வருகிறது. 2014-15-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 917 ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 2019-20-ஆம் ஆண்டில் 943 ஆக அதிகரித்தது.

ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம், சுவதர்கிரேஹ் திட்டம் மற்றும் விதவைகளுக்கான இல்லங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் 60:40 என்னும் விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றன. வட கிழக்கு மாநிலங்களில் இது 90:10 என்னும் அளவிலும், யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத நிதியை மத்திய அரசு ஏற்கும் வகையிலும் இத்திட்டம் அமைந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பதற்கும், ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கிடைப்பதற்கும் அரசு உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்காக 8.66 லட்சம் ஸ்மார்ட் கைபேசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அங்கன்வாடிகளை நவீனமயமாக்குவதற்கான முயற்சியில், நான்கு லட்சம் அங்கன்வாடி மையக் கட்டிடங்களை கட்டுவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டது.

தண்ணீர் வசதிகளுக்காக ஒரு அங்கன்வாடி மையத்திற்கு ரூ.10,000-ம், கழிவறை வசதிகளுக்காக ஒரு அங்கன்வாடி மையத்திற்கு ரூ.

12,000-ம் வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான போக்சோ சட்டம் 2019-ல் திருத்தம் செய்யப்பட்டு, 2020-ஆம் ஆண்டில் போக்சோ விதிகளை அரசு அறிவித்தது.

தத்தெடுத்தலை முறைப்படுத்துவதற்காக ஆன்லைன் முறை ஒன்றை கேரிங்ஸ் என்னும் பெயரில் அரசு செயல்படுத்தியுள்ளது. 2016-17-ஆம் ஆண்டில் இருந்து 2020-21 (2021 பிப்ரவரி 3) வரை 725 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்கள் முதல் 6 வருடங்கள் வயது வரையிலான குழந்தைகளுக்காக தேசிய தொட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 1724 குழந்தைகள் காப்பகங்களுக்கு 2017-18-ஆம் ஆண்டில் ரூ. 4,10,13,960.00 வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களுக்கு குடிதண்ணீர், கழிவறை உட்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளுக்கு 2017-18-ஆம் ஆண்டில் ரூ 52469.95 லட்சமும், 2018-19-ஆம் ஆண்டில் ரூ 73451.70 லட்சமும், 2019-20-ஆம் ஆண்டில் ரூ 74546.32 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.