கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவது பற்றி புகார் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: அமைத்த வருமானவரித்துறை
தேர்தல் செலவிற்கு கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவது பற்றி புகார் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: வருமானவரித்துறை அமைத்தது
தேர்தல் செலவிற்கு கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவது பற்றி புகார் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை வருமானவரித்துறை தலைமை இயக்குனரகம் அமைத்ததுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத் தேர்தல் ஆகியவை 06.04.2021-ம் தேதி நடைபெறவுள்ளதால், தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்கு வருமானவரித்துறை தலைமை இயக்கனரகத்தின் (புலனாய்வு) உதவியை, இந்திய தேர்தல் ஆணையம் நாடியுள்ளது. தேர்தல் செலவிற்கு கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக செலவு செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற தேவையான உதவிகளை வழங்குவது வருமானவரித்துறை இயக்குனரகத்தின் பங்கு.
இதற்காக, தேர்தல் செலவிற்கு கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதை கண்டறிந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் வருமானவரித்துறையின் புலனாய்வு இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும்.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வருமானவரித்துறை தலைமை இயக்குனரகம்(புலனாய்வு), 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பொது மக்களிடம் இருந்து தகவல்கள் மற்றும் புகார்களை பெற இங்கு இலவச தொலை பேசி எண், பேக்ஸ் எண், இ-மெயில் முகவரி, வாட்ஸ் அப் எண் ஆகியவை உள்ளது. இதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இலவச தொலை பேசி எண் : 1800 425 6669
பேக்ஸ் எண் : 044 - 28271915
இ-மெயில்: itcontrol.chn@gov.in
வாட்ஸ் அப் எண் : 9445394453.
தேர்தலில் செலவு செய்வதற்காக அதிக அளவிலான பணம், நகை மற்றும் இதர விலைமதிப்பான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பது அல்லது கொண்டு செல்லப்படுவது பற்றி தெரிந்தாலோ / தகவல் கிடைத்தாலோ அதை மேற்கண்ட எண்களில்/இ-மெயில் முகவரியில் பொது மக்கள் தெரிவிக்கலாம் என தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறையின் (புலனாய்வு) கூடுதல் இயக்குனர் திரு பி.எஸ். சிவசங்கரன் ஐஆர்எஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்