இபிஎப்ஓ ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டம் மார்ச் 25ம் தேதி நடக்கிறது
தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, ஓய்வூதியம் குறைதீர்ப்பு கூட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு( இபிஎப்ஓ), எண் 37, சென்னை ராயப்பேட்டை ஹை ரோட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில், 2021 மார்ச் 25ம் தேதி மாலை 2.30 மணிக்கு நடத்துகிறது.
ஓய்வூதியம் தொடர்பான குறைகளை தீர்க்க விரும்பும் ஓய்வூதியதாரர்கள், மார்ச் 22ம் தேதிக்குள் நேரிலோ அல்லது pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரியில் பொருள்: “PENSION ADALAT” FOR EPS 1995’’ என குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டல அலுவலக, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 திரு ரிதுராஜ் மேதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்