தமிழகத்தில் தற்போது அமைச்சர்களான மூன்று நபருகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
வழங்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய மூவருக்கும் போட்டியிட வாய்ப்புகள் இல்லாத நிலையில்171 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகள்
செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம் ,தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர்,மேட்டூர்,சேலம் (மேற்கு),சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேலூர். தொகுதிகளாகும். பா.ஜ.க-வுக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை நடிகை குஷ்பு எதிர்பார்த்திருந்தார். சில தினங்களுக்கு முன் தொகுதியில் வாக்கு சேகரிப்புப் பணியிலும் அவர் செயலாற்ற ஆரம்பித்த சூழலில், அவர் எதிர்பார்த்த தொகுதியை அ.தி.மு.க ஒதுக்க மறுத்துவிட்டதாகவும் அதேபோல, ஆயிரம் விளக்கு தொகுதியை நடிகை காயத்ரி ரகுராம் எதிர்பார்த்த நிலையில். தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு சீட் தருமா கமலாலயம் என்பது வினா. வேட்பாளர் பட்டியல் ஒரு பக்கம் இருப்பினும் தான் போட்டியிடுவதற்காக ராசிபுரம் தொகுதியை எல்.முருகன் கேட்க தொகுதியின் எம்.எல்.ஏ-வாக அமைச்சர் சரோஜா இருப்பதால்,விட்டுத்தர மறுத்த அ.தி.மு.க.,பதிலாக தாராபுரம் தொகுதியை அளித்திருக்கிறது. பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமியின் மகனுக்கு சீட் வழங்க கமலாலயம் முடிவெடுத்திருக்கிறதாம். இந்தத் தேர்தலில் முருகன் களமிறங்க மாட்டார் என்கிறார்கள். அரவக்குறிச்சியில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையும், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனும், துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வமும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறதூம். இராஜபாளையம் தொகுதியை நடிகை கெளதமி எதிர்பார்த்திருந்த நிலையில், தொகுதியை விட்டுத்தர மறுத்த அ.தி.மு.க தலைமை, அதற்குப் பதிலாக விருதுநகர் தொகுதியை அளித்திருக்கிறதாம். இங்கு கெளதமி களமிறக்கப்படலாம் என்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் நாளைக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்