முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் .
தமிழக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் .
அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகளை நவம்பர் 20 ஆம் தேதி மற்றும் ஜனவரி 2 ஆம் தேதி இரண்டு கட்டமாக வெளியிடப்பட்டதில் வேதியியல் பாடத்திற்காக 121 பின்னடைவுப் பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்களென மொத்தம் 356 பணியாளர்கள் தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த பணியிடங்களுக்கான நியமனத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொதுப் பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்த மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் பணிநியமனம் வழங்கப்பட்ட பட்டியலை மீண்டும் பரிசீலனை செய்து அதன்பின் தான் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிடவே.
தமிழக அரசு இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல் வேறு இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது தவறென்றும் கண்டனம் தெரிவித்தது.
கருத்துகள்