முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைபர் மிரட்டல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் வழீ : தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா




இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது, சைபர் மிரட்டல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் : தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா

          இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது, சைபர் மிரட்டல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறினார். 

 பெண்களுக்கான சைபர் பாதுகாப்பு’ என்ற இணைய வழி கருத்தரங்கை சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து, கோவை மண்டல மக்கள் தொடர்பு கள அலவலகம்,  2021 பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்தியது.

          இந்த இணைய வழி கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களையும் மற்றும் நிபுணர்களையும், சென்னை, பத்திரிகை தகவல் அலுவலகம்/மண்டல கள அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு. எம். அண்ணாத்துரை, ஐஐஎஸ் வரவேற்றார்.

இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது, அதை பாதுகாப்பான வழியில் பயன்படுத்துவதன் அவசியத்தை சுட்டிகாட்டுகிறது என அவர் அப்போது கூறினார்.

இதில் துவக்கவுரை நிகழ்த்திய தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் திருமதி. ரேகா சர்மா, ‘‘கடந்த 10 ஆண்டுகளில் இணையதளம் நமது வாழக்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, அதன் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது’’ என்றார்.

          இணையதளம் அதன் பயன்களால் நமது வாழ்க்கையைn

  எளிதாக்கியுள்ள போதிலும்,  தவறான பயன்பாட்டால் தனிநபர் பாதுகாப்புக்கு குறிப்பாக பெண்களுக்கு அச்சுறுத்தல் போன்ற சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பொது ஊரடங்கு  காலத்தில், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட குடும்ப வன்முறைகள் அதிகரித்தது, தேசிய பெண்கள் ஆணையத்துக்கு வந்த புகார்கள் மூலம் தெரியவந்தது என திருமதி. ரேகா சர்மா கூறினார். 

          இணையதளம் பெண்களை பல வழிகளில் மேம்படுத்தியுள்ளது. அவர்களால் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெற முடிகிறது. இது இணைய யுகத்தின் நேர்மறையான விஷயங்களாகும்.

மற்றொரு பக்கம், சைபர் உலகில் பெண்கள் குறிவைக்கப்படுவதும் அதிகரிக்கிறது. சைபர் சட்டங்கள் பற்றி பலர் அறியாமல் உள்ளனர். சில நேரங்களில் காவல் துறையினரும், புதிய சவால்களை சந்திக்கின்றனர்.  சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமங்கள் உள்ளதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதிலும் சிரமங்கள் உள்ளன. 

சமூக இணையதளங்களில் ஆபாச படங்கள்  மற்றும் தகவல்களை அனுப்புவது, படங்களில் உருவத்தை மாற்றுவது, குறும்புத்தனமான தொடர்புகளை அனுப்புவது போன்ற செயல்கள் அதிகரிக்கின்றன. 

          பெரும்பாலான நேரங்களில், ஆன்லைன் தொந்தரவுக்கு ஆளான  பெண்கள், அவர்களுக்கு தெரிந்த நபர்களாலேயே, உறவு மோசமாகும் போது, தொந்தரவு செய்யப்பட்டுள்ளனர். 

          தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் 2021 அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு நன்றி. இதன் மூலம் கூகூள், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர முக்கிய சமூக ஊடகங்கள், கூடிய விரைவில் தவறான உபயோகத்தை தடுப்பதற்கு சீர்திருத்தங்களை மேற்கொண்டு, சுய கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

          சைபர் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிப்பதில், காவல்துறையுடன், தேசிய பெண்கள் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்படுவதாக திருமதி. ரேகா சர்மா கூறினார்.

          கடந்த 2 ஆண்டுகளில், பேஸ்புக் மற்றும் சைபர் அமைதி அமைப்பு ஆகியவற்றுடன் தேசிய பெண்கள் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பெண்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு சமூக இணையதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சியை அளித்து வருகிறது.

முதல் ஆண்டில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்தாண்டுக்குள் ஒரு லட்சத்துக்கும்  அதிகமான பெண்களுக்கு தேசிய பெண்கள் ஆணையம் பயிற்சி அளிக்கும்.

 3வது கட்டப்பயிற்சி அகில இந்திய அளவில் தொடங்கப்படவுள்ளது. 

          பொதுவாக, பெரும்பாலான பெண்கள் மற்றும் மாணவிகள், சமூக ஊடகங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை அறியாமல் உள்ளனர் என திருமதி. ரேகா கூறினார்.

          தனிப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை சமூக ஊடங்களில் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்றும், அப்போதுதான், அதை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது என்றும்  இந்த இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முன், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அது பற்றிய அனைத்து விஷயங்களையும் பெண்களும், மாணவிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

          இணையதளம் போதிய பயன்களை அளித்தாலும், அதன் பாதகங்களுக்கு நாம் இரையாகாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

          எந்தவித தொந்தரவுகள் ஏற்பட்டாலும், அது குறித்த புகார்களை உள்ளூர் காவல்துறை, சைபர் குற்றப் பிரிவு மற்றும் தேசிய பெண்கள் ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

          சைபர் குற்றங்களை விசாரிப்பதில், இந்தியாவின் முதல் பெண் விசாரணையாளரான திருமதி. தன்யா மேனன் பேசுகையில்,  நமது வாழ்க்கையை சிறப்பாகவும், எளிதாகவும் ஆக்குவதற்கு உருவாக்கப்பட்ட உபகரணம்தான் இணையதளம்.

ஆனால், அதன் அடிப்படையை அறியாமலேயே, தற்போது பலர் இணையளத்தை பயன்படுத்துகின்றனர். இந்த தொழில்நுட்பத்தை நல்லது அல்லது தீய விஷயங்களுக்கு பயன்படுத்துவது தனிநபரின் நோக்கத்தை பொறுத்தது’’ என்றார்.

          சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஓடிடி தளம் போன்றவற்றுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த புதிய விதிமுறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

          போதைப் பொருள் கடத்தல், மனித கடத்தல், போன்ற குற்றங்கள் இணையதளத்தில் ஆரம்பித்து மக்களை உடல் ரீதியாக பாதிப்பதில் முடிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் குறி வைக்கப்படுவதால், சமூக ஊடகங்களில் தங்களை வெளிப்படுத்தும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

          நிறைவு உரையாற்றிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலக இயக்குனர் திரு. ஜே.காமராஜ், ஐஐஎஸ் கூறுகையில்,  இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது என்பது,  தனிநபர் அடையாளத்தையும், கவுரவத்தையும் பாதுகாப்பதில் முக்கியமானது என்று கூறினார்.

          இந்த டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்களின் அனைத்து நல்லது மற்றும் கெட்ட விஷயங்களை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.

 சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால வழிகாட்டுதல்கள், சைபர் குற்றங்களை தடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

          மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பயனுள்ள இந்த இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்று,  வெற்றிபெறச் செய்தவர்களுக்கு   கோவை மக்கள் தொடர்பு கள அலுவலக  உதவி இயக்குனர் திருமதி. கரீனா பி.தெங்கமம் நன்றி தெரிவித்தார்.

          எஸ்கேஏஎஸ்சி முதல்வர் திருமதி. பி.பேபி ஹகிலா, எஸ்கேஏஎஸ்சி எம்எஸ்டபிள்யூ துறைத் தலைவர் திரு. அழகர் சாமி, கற்பகம் பல்கலைக்கழகம் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ தர்மராஜ், என்எஸ்எஸ் அதிகாரி திரு. கே. வீராசாமி, கோவை மக்கள் தொடர்பு கள அலுவலக உதவியாளர் திரு. எஸ்.ஆர் சந்திரசேகரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

          இந்நிகழ்ச்சியை பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்.

          இந்த இணைய வழி கருத்தரங்கம், சென்னை மண்டல கள அலுவலகம், கோவை கள அலுவலகத்தின் சமூக இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் இந்த இணைய வழி கருத்தரங்கில் இடம் பெற்றன. இந்த இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு இ-சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த