பிரதமர் அலுவலகம் டாக்கா சென்றடைந்த பிரதமர்
வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி டாக்கா சென்றடைந்தார். ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாளான முஜிப் போரஷோ; இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு ஏற்பட்டதன் 50-வது ஆண்டு; வங்கதேசத்தின் விடுதலைக்கான போரின் 50-வது ஆண்டு ஆகியவற்றை குறிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க பயணம் இதுவாகும்.
சிறப்பு மரியாதையாக வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதமர் திரு மோடிக்கு ஹஸரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்ப
ளித்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு 19 குண்டுகள் முழங்க, அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.பின்
வங்கதேச தேசிய போர்வீரர்கள் நினைவிடத்துக்கு சென்றார் பிரதமர்
இரண்டு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி சென்றடைந்ததும், 1971ம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் மரியாதை செலுத்துவதற்காக தேசிய போர்வீரர்கள் நினைவிடத்துக்கு (ஜதியோஸ்ரீதிஷவ்டோ) சென்றார்.
இந்த நினைவிடம், தலைநகர் டாக்காவுக்கு வடமேற்கே 35 கி.மீ தொலைவில் சாவர் என்ற இடத்தில் உள்ளது. இதை சையத் மைனுல் ஹூசைன் என்பவர் வடிவமைத்தார்.
நினைவிட வளாகத்தில் அர்ஜூன் மரக்கன்றையும் பிரதமர் நட்டு, பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். ‘‘
சாவர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு, உண்மையின் உன்னத வெற்றியின் நீடித்த நினைவூட்டலாகவும், வஞ்சம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான தைரியமாகவும் விளங்க வேண்டும் என நான் வேண்டுகிறேன்’’ என பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோதி எழுதினார்.
பின்
வங்கதேசத்தில் சமூகத் தலைவர்களைச் சந்தித்தார் பிரதமர்
இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பிரதிநிதிகள், வங்கதேச முக்திஜோதாஸ், பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அண்ட் யூத் ஐகான்ஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அடுத்ததாக
வங்கதேச எதிர்கட்சி தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
வங்கதேசத்துக்கு மேற்கொண்டுள்ள 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள எதிர்கட்சி தலைவர்கள் பலரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இருநாடுகளின் இருதரப்பு நல்லுறவு விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.,. ,"Some glimpses from Dhaka. Interacted with different sections of Bangladesh society". டாக்காவிலிருந்து சில பார்வைகள். பங்களாதேஷ் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்பு கொண்டது.என பிரதமர் தனது பதிவில் தெரிவித்தார்.
கருத்துகள்