நடிகர் கமல்ஹாசன் பிரிக்கிற வாக்குகள் எல்லாமே அதிமுக பாஜக ஓட்டுக்கள் என உளவுத்துறை ரிப்போர்ட்டால,
பிரச்சாரத்தைத் தற்காலிகமா நிறுத்தி ஓய்வெடுக்கச் சொல்லி கமலுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் அவரது மேலிடம். கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதற்காக கடந்த சில நாட்களாகவே கோவையில் தங்கி பிரசாரம் மேற்கொள்கிறார்.
கோவை காந்தி பார்க் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். அந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவர் அவரது காலில் மிதித்து விட்டதாகத் தெரிகிறது.
இதே காலில் தான் ஆபரேஷன் செய்திருந்தார். இதனால் திடீரென அவருக்கு வலி ஏற்பட்டது. வலி அதிகமாக கமல்ஹாசன் உடனடியாகத் தனியார்
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு எக்ஸ்ரே எடுத்து சிறிது நேரம் ஒய்வெடுத்து கொள்ளுங்கள். வலி சரியாகிவிடும் என்று கூறியதையடுத்து தான் தங்கியுள்ள ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுத்து வருகிறார்.
முன்னதாக காலை 11 மணியளவில் சூலூர் மற்றும் பல்லடத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து காலை முதலே சூலூர் நால்ரோட்டில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் குவிந்திருந்தனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சூலூர், பல்லடம் பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்தார். இந்த அறிவிப்பு அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளிடம் ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கருத்துகள்