டெல்லியிலிருந்து டேராடூன் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் உத்தராகண்ட் மாநிலம் கன்ஸ்ரே ரயில் நிலையம் அருகே தீடிரென தீப்பிடித்தது
ரயிலின் C4 கம்பார்ட்மென்ட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளது என்றும் பயணிகள் யாருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று உத்தராகண்ட் மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து டேராடூனுக்கும் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஹரித்வார் அருகே கன்ஸ்ரோ நிலையம் அருகே தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ பயங்கரமாகப் பரவ ஆரம்பத்துள்ளது. ரயிலின் டி -4 கம்பார்ட்மென்ட் ஜன்னல்களிலிருந்து அதிக தீப்பிழம்புகள் எழத் தொடங்கின. ரெய்வாலா மற்றும் கன்ஸ்ரோ ரயில்வே தொகுதிகளில் மதியம் 12 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இரயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனேயே, ரயில்வே அதிகாரிகள் அவசரமாக எச்சரிக்கப்பட்டனர். தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் பல முயற்சிகளுக்குப் பிறகு இரயிலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தினர்.
கருத்துகள்