முன்பு அசாமில் ஏ ஜி பி கட்சி பிஜேபிக்கு 20 தொகுதிகள் விட்டுத் தந்தது. காலம் மாறிய பின் பிஜேபி ஏஜிபி க்கு 20 தொகுதிகளை ஒதுக்குமளவில் வளர்ந்தது. அதேபோல் இன்று ஏஜிபி தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரபுல்ல குமார் மகந்தாவிற்கு அவரது சொந்த தொகுதியைக் கூட பிஜேபி தராமல் அதன் வேட்பாளரைக் களமிறக்கியுள்ளது். இதை உணர அரசியல் தெரிய வேண்டும். இல்லை எனில் அந்தமாநில நிலை மாறிப்போகும்.
டாக்டர் சுப்பிரமணிய ன் சுவாமி தற்போது கருத்தாக பாஜகவைத் தவிர தமிழகக் கட்சிகள் அனைத்தும் எனது ஒப்புதலை நாடுகின்றன. ஆனால் பாஜக கேட்க வேண்டிய அவசியமில்லை. நான் ஒரு பாஜக உறுப்பினர், எனவே அலுவலகப் பொறுப்பாளர்கள் என்னிடம் கேட்கிறார்களா இல்லையா என்பதை கட்சிக்கு உறுதியளித்துள்ளோம். சிலர் என்னிடம் கேட்க மிகவும் பயப்படுகிறார்கள். எனக் கூறக் காரணம் பல .1980 லிருந்து 2016 வரை தமிழ்நாட்டில் பாஜக 935 இடங்களில் போட்டியிட்டு 885 முறை டெபாசிட் இழந்து வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. வாக்கு வங்கி 3% - வெற்றி சதவீதம் 0.5% - இந்தப் பலவீனமான கட்சி 20 இடங்களை கூட்டணி வழங்கி 2021 ஆட்சியில் வெற்றி அல்லது தோல்வியை உறுதி செய்துள்ளனர். தற்போது BJP நிற்கும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் உத்தேச பட்டியலில் வேட்பாளர்கள் பெயருடன் உலா மயிலாப்பூர K.T.ராகவன்,காரைக்குடி எச்.ராஜா சேப்பாக்கம் குஷ்பு, வேளச்சேரி டால்பின் ஸ்ரீதர், காஞ்சிபுரம் கேசவன் ,திருத்தணி சக்கரவர்த்தி ,பழனி கார்வேந்தன், சிதம்பரம் ஏழுமலை, கிணத்துக்கடவு அண்ணாமலை, கோவை தெற்கு வானதி சீனிவாசன் ,நாமக்கல் ராசிபுரம எல்.முருகன், ஆத்தூர் வி.பி.து.பிரேம், திருவாரூர் கருப்பு முருகானந்தம், திருவண்ணாமலை தணிகைவேல், வேலுர் கார்த்தியாயினி, ஒசூர் நரேந்திரன், தூத்துக்குடி சிவ முருக ஆதித்தன், நெல்லை நயினார நாகேந்திரன் இராஜபாளையம் நடிகை கௌதமி, துறைமுகம் வினோஜ் பி.செல்வம்,. இது இவ்வாறு இருக்க திமுகவில் மதிமுகவுக்கு 6 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல்
இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் திமுக - மதிமுக இடையே உடன்பாடு எட்டவே. திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வரை பேசி
திமுக ஒதுக்க முன்வந்துள்ள 6 தொகுதிகளை ஏற்க மதிமுக தயார் மதிமுகவின் அவசர உயர்நிலைக் குழு கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கூடி
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையிலான குழு திமுக தேர்தல் கூட்டணி குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இதில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற மதிமுக தலைவர் வைகோ கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலமாக திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது. தேர்தலுக்கு பிறகு கட்சி இணைந்து விட முடியும். அதிமுகவிடம் பாமக பெற்றுள்ள 23 தொகுதிகளுக்கான பட்டியல் தொடர்பான தகவல் வெளி வந்துள்ளது. வேளச்சேரி, செய்யார், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், குடியாத்தம், திருப்பத்தூர் வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, வந்தவாசி, செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், ஓமலூர், மேட்டூர், பரமத்திவேலூர், கீழ்வேளூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, அணைக்கட்டு, ஆற்காடு தொகுதிகளிலும் போட்டியிட பாமக விருப்பம் தெரிவித்துள்ளது.
அதிமுக - தேமுதிக கூட்டணி நிலவரம்.17 ல் நிற்க கடிதப் போக்குவரத்து மாநிலங்களவை எம்.பி.யாக சுதீஷுக்கு வாய்ப்பு காத்திருக்கும் நிலை
ஆனால், பாமக செல்வாக்கு பெற்றிருக்கும் தொகுதிகளிலேயே செல்வாக்காக இருக்கும் தேமுதிகவும் பெரும்பாலும் அதே தொகுதிகளை கேட்டு வருகிறது. அத்துடன், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் தொகுதிகளையும் தேமுதிக கேட்டு வருகிறது. அக்கட்சியுடன் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அதனையும் கருத்தில் கொண்டுதான் இறுதி பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது. காங்கிரஸ் நிலை முடிவுகள் இழுபறி
கருத்துகள்