கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக திரு முகமது கவுஸ் சுக்குரே கமாலை குடியரசுத் தலைவர் நியமித்தார்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக திரு முகமது கவுஸ் சுக்குரே கமாலை குடியரசுத் தலைவர் நியமித்தார்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 224-வது பிரிவின் ஒன்றாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக திரு முகமது கவுஸ் சுக்குரே கமாலை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் பெங்களூரிலுள்ள இதர நீதிமன்றங்களிலும் 23 வருடங்களுக்கும் அதிகமாக திரு முகமது கவுஸ் சுக்குரே கமால் பணியாற்றியுள்ளார்.
சிவில், கிரிமினல், அரசியலமைப்பு, தொழிலாளர், நடுவர் மன்றம், வருவாய் மற்றும் வக்பு சார்ந்த வழக்குகளில் இவர் பணியாற்றியுள்ளார்.
கருத்துகள்