முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரத்தின் வைர விழா ‘அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடும் தேசிய குழுவில் பிரதமர் உரை

பிரதமர் அலுவலகம்  சுதந்திரத்தின் வைர விழா ‘அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடும் தேசிய குழுவில் பிரதமர் உரை


சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடுவதற்கான 5 தூண்களை பட்டியலிட்டார்

நிலையான இந்தியாவின் பெருமை மற்றும் நவீன இந்தியாவின் ஜொலிப்பு ஆகியவை கொண்டாட்டங்களை குறிக்க வேண்டும்: பிரதமர்

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது : பிரதமர்

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை (அம்ருத் மகோத்சவம்) கொண்டாடும் தேசியக் குழுவின் முதல் கூட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். 

இந்தக் குழுவில் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஊடகத்தினர், ஆன்மீக தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.

தேசியக் குழுவின் உறுப்பினர்களான முன்னாள் குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவி சிங் படேல், முன்னாள் பிரதமர் திரு எச்.டி. தேவகவுடா, திரு நவீன் பட்நாயக், திரு மல்லிகார்ஜூன கார்கே, திருமதி மீரா குமார், திருமதி சுமித்ரா மகாஜன், திரு ஜே.பி.நட்டா மற்றும் மவுலானா வாஹிதுதின் கான் ஆகியோர் இந்த கூட்டத்தில் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர். 

75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாட  திட்டமிடுவதற்காக பிரதமருக்கு தேசியக் குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த விழாவின் நோக்கத்தை விரிவுபடுத்த  அவர்கள் தங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்தனர். 

இந்த விழா தொடர்பாக இன்னும் பல கூட்டங்கள் நடைபெறும் எனவும், அப்போது இன்று பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்றும்  மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  ‘‘நாடு 75 வது சுதந்திர ஆண்டை, தனது வரலாற்று சிறப்பு, பெருமை ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடும்’’ என்றார்.

குழு உறுப்பினர்களிடம் இருந்து வந்த புதிய கருத்துக்கள் மற்றும் பல்வேறு சிந்தனைகளையும் அவர் பாராட்டினார். சுதந்திரத்தின் 75வது  ஆண்டு விழாவை, அவர் இந்திய மக்களுக்காக அர்ப்பணித்தார். 

சுதந்திர போராட்ட உணர்வு, தியாகிகளுக்கு புகழஞ்சலி,  மற்றும் இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களின் உறுதிமொழி ஆகியவற்றை உணரும் விழாவாக,  சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழா இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்

நிலையான இந்தியாவின் பெருமை மற்றும் நவீன இந்தியாவின் ஜொலிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த விழா இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

இந்த விழா முனிவர்களின் ஆன்மீக  ஒளியையும், நமது விஞ்ஞானிகளின் திறமையையும் வலிமையையும் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

இந்த நிகழ்ச்சி, நமது 75 ஆண்டுகள் சாதனையை உலகுக்கு தெரிவிப்பதாகவும்  மற்றும்  அடுத்த 25 ஆண்டுகளுக்கு நமக்கு தீர்வுகளைக் கூறும் கட்டமைப்பையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொண்டாட்டம் இல்லாமல், எந்த உறுதி மொழியும் வெற்றிகரமாக இருக்காது என பிரதமர் கூறினார்.  உறுதிமொழி கொண்டாட்டமாக மாறும்போது, அந்த உறுதிமொழிகளுடன், கோடிக்கணக்கானவர்களின் சக்தியும் ஒன்று  சேர்கிறது.

75வது ஆண்டு சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்,  130 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன்  இருக்க வேண்டும். மக்களின் பங்களிப்புதான் இந்த விழாவில் முக்கியம்.  இந்த பங்கேற்பில் நாட்டு மக்கள் 130 கோடி  பேரின் உணர்வுகள், ஆலோசனைகள்  மற்றும் கனவுகள் அடங்கியுள்ளன.

75வது ஆண்டு கொண்டாட்டத்துக்கு 5 தூண்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார்.  அவைகள், சுதந்திர போராட்டம், 75ம் ஆண்டில் கருத்துக்கள், 75ம் ஆண்டில் சாதனைகள், 75ம் ஆண்டில் செயல்பாடுகள், 75ம் ஆண்டில் தீர்மானங்கள் ஆகும்.

இவை அனைத்திலும், 130 கோடி இந்தியர்களின் கருத்துக்கள் மற்றும் உணர்வுகள் அடங்கியிருக்க வேண்டும்.

குறைவாக அறியப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட  வேண்டும். அவர்களின் கதைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். 

தியாகிகளின் தியாகம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிறைந்துள்ளது. அவர்களின் கதைகள், நாட்டுக்கு நிலையான ஊக்குவிப்பாக இருக்கும்.   ஒவ்வொரு பிரிவினரின் பங்களிப்பையும், நாம் முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும் என அவர் கூறினார். 

பல தலைமுறைகளாக நாட்டிற்காக சிறந்த  பணிகளைச் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு, சிந்தனை மற்றும் கருத்துக்கள் தேசிய முயற்சிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழா, சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றுகிறது.  அவர்கள் ஆசைப்பட்ட உயரத்துக்கு நாட்டை முன்னேற்றும் ஒரு முயற்சிதான் இந்த விழா என பிரதமர் கூறினார். 

சில ஆண்டுகளுக்கு முன் நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை இந்தியா தற்போது சாதிக்கிறது என அவர் உறுதிப்பட கூறினார். இந்தியாவின் வரலாற்று பெருமைக்கு தகுந்தபடி இந்த கொண்டாட்டம் இருக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த