முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாமானியரும் புரிந்து கொள்ளும் தன்மையில் சட்ட நடைமுறைகளை அமைக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்



குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய வகையில், குறைந்த செலவில், புரிந்து கொள்ளும் தன்மையில் சட்ட நடைமுறைகளை அமைக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

சாமானிய மனிதனுக்கு  நீதி முறையாகக் கிடைப்பதற்கு, மிகுதியான காலதாமதம், சட்ட நடைமுறைகளின் கட்டணம், அணுக இயலாமை போன்றவை  தடைகளாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் பொன்மொழியைக் குறிப்பிட்ட திரு நாயுடு, “நீதியை நாடும் ஏழை மனிதனை” பற்றிய சிந்தனையும், செயல்பாடுகளும் தான் வழக்கறிஞர்களின் முக்கிய உந்து சக்தியாக விளங்க வேண்டும் என்று கூறினார்.

சட்ட நடைமுறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய  திரு நாயுடு, பொது மக்களுக்காக சேவையாற்றுவோருடன் தொடர்புடைய குற்ற வழக்குகள் விரைவாகவும், உணர்ச்சி வயப்படாத வகையிலும், பாரபட்சமற்ற முறையிலும் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நோக்கத்திற்காக, அரசு ஊழியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளை பிரத்தியேகமாக கையாள்வதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம் என்று குடியரசு துணைத்தலைவர் யோசனை தெரிவித்தார்.

தேர்தல் சம்பந்தமான வழக்குகள் மற்றும் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு தனியே விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். சட்டமன்ற கட்சித் தாவல் வழக்குகள், உரிய கால கட்டத்திற்குள் விரைவாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களின் சட்டமன்றங்களில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து திரு நாயுடு கவலை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு மன்றத்திலும் உயரிய அறநெறிகளையும், முன்மாதிரியான நடத்தைமுறையையும் கடைப்பிடிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

மக்களவை நடவடிக்கைகளில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், 'எந்த ஒரு பிரச்சனையையும் ஆலோசனை, விவாதம், தீர்வு ஆகியவை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும், இடையூறு ஏற்படுத்துவது அல்ல', என்று கூறினார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய குடியரசு துணைத் தலைவர், தங்களது தொழிலில் சிறந்து விளங்குவதற்காக பட்டதாரிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய வகையில், குறைந்த செலவில், புரிந்து கொள்ளும் தன்மையில் சட்ட நடைமுறையை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காலனித்துவ மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த குடியரசு துணைத் தலைவர், பட்டமளிப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்நாட்டு உடைகளை பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களையும், நீதிமன்றங்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்திய நடைமுறைகளில் சட்டம் மற்றும் நீதியின் முக்கியத்துவம் பற்றி பேசுகையில், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் தெரிவித்துள்ளபடி நீதியை பாதுகாப்பதற்காக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.‌

“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை”  என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, நடுநிலையான விசாரணை, உணர்ச்சி வயப்படாமல் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து, அனைத்து குடிமக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதே சிறந்த நீதி முறையாகும் என்று தெரிவித்தார்.


நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றொரு முக்கிய சவால் என்று திரு நாயுடு குறிப்பிட்டார். உரிய காலத்திற்குள் நீதி வழங்குவதின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய அவர், நாட்டில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி வழக்குகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கான முறையைக் கண்டறிய வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றங்களில் சுமார் 87 சதவீத வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுநல வழக்குகள் பற்றியும் இதுபோன்ற வழக்குகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய திரு வெங்கையா நாயுடு, தேவையற்ற சம்பவங்களுக்கு பொது நல வழக்குகள் தொடுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  “பொதுநல வழக்குகள், தனியார் நல வழக்குகளாக மாறக்கூடாது”, என்றார் அவர்.


நலிந்த பிரிவினர் குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கு குடியரசு துணைத் தலைவர் மரியாதை செலுத்தினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயனடையும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயரிய கொள்கைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் போது மட்டும்தான் நமது குடியரசு மீது டாக்டர் அம்பேத்கர் கொண்டிருந்த கனவு நனவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டி எஸ் என் சாஸ்திரி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த