சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி அருகே கேசராபட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் பள்ளியின் எதிரே திருச்சியிலிருந்து துவரங்குறிச்சி புழுதிபட்டி. உலகம்பட்டி வழியாக பொன்னமராவதி வந்த தனியார் பேருந்தும் பொன்னமராவதி யிலிருந்து இரும்புப் பாரம் ஏற்றிவந்த லாரியும் கேசராபட்டியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.காலில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுனர் அருகிலிருந்த அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒருவர் கவலைக்குரிய நிலையில் உள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்விடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், ஆய்வாளர் தனபால் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்