“பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தை” இந்திய உணவுக் கழகம் கொண்டாடுகிறது
இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் 2021 மார்ச் 12 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்த அரசின் நிகழ்ச்சியான பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவகத்தில் (தெற்கு) பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தின் தொடக்க நிகழ்வு முறைப்படி நடைபெற்றது.
இது தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு ஆர் டி நசீம், இஆப, செயல் இயக்குநர் (தெற்கு), இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் (தெற்கு), இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் 75 வாரங்களுக்கு (2021 மார்ச் 15 முதல் 2022 ஆகஸ்ட் 22 வரை) நடைபெறவுள்ள கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்திய உணவுக் கழகத்தின் தலைமை அலுவலகம் திட்டமிட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகள்/செயல்பாடுகளிலும் பங்கு பெறுமாறு அனைத்து பணியாளர்களையும் டாக்டர் வி ஏழுமலை, பொது மேலாளர் (பொது) கேட்டுக்கொண்டார்.
மூத்த அதிகாரிகள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய திரு ஆர் டி நசீம், இஆப, செயல் இயக்குநர் (தெற்கு), இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் (தெற்கு), நிறுவனத்தின் மதிப்பை பொதுமக்கள் மத்தியில் உயர்த்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் தங்களது முழுத் திறமையுடன் ஈடுபடுவதற்கு அனைத்து பணியாளர்களுக்கும் கிடைத்துள்ள சிறப்பான வாய்ப்பு இது என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் துடிப்புடன் செயலாற்றுமாறும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகம் போன்ற எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடாமல் பயன்படுத்தி இந்த நிகழ்வை பெரும் வெற்றி பெற செய்யவேண்டுமென்றும் அனைத்து பணியாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
“75 வார நிகழ்ச்சிக்கான” செயல்பாடுகள்:
இணையக் கருத்தரங்கம், போட்டிகள், பொது ஊடகம், புகைப்பட கண்காட்சி, முன்னாள் இந்திய உணவுக் கழக அலுவலர்களுடன் நேர்முகம், சுவரொட்டி செய்தல், உள்ளூர்வாசிகள்/கிராமங்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள், தொண்டு நிறுவனங்கள்/உள்ளூர் நபர்களை சந்தித்தல், தெரு நாடகங்கள், வினாடி வினா, பட்டிமன்றம், குறும்படங்கள், அறிக்கை சமர்ப்பித்தல், வெளியீடுகள், புகைப்படங்கள், தொழில்நுட்ப அறிக்கைகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், கிடங்கை பார்வையிடுதல், விளம்பரம், பொம்மலாட்டம், ஆய்வுக் கட்டுரைகள், உள்ளூர் மக்களுக்கு தாவரங்களை வழங்குதல் உள்ளிட்டவை.
மேற்கண்ட தகவல்களை இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர் திருமதி ஷைனி வில்சன் செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளார்.
கருத்துகள்