முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தை” இந்திய உணவுக் கழகம் கொண்டாடுகிறது


 “பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தை” இந்திய உணவுக் கழகம் கொண்டாடுகிறது

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் 2021 மார்ச் 12 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்த அரசின் நிகழ்ச்சியான பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவகத்தில் (தெற்கு) பாரதத்தின் அம்ருத் மகோத்சவத்தின் தொடக்க நிகழ்வு முறைப்படி நடைபெற்றது.

இது தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு ஆர் டி நசீம், இஆப, செயல் இயக்குநர் (தெற்கு), இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் (தெற்கு), இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் 75 வாரங்களுக்கு (2021 மார்ச் 15 முதல் 2022 ஆகஸ்ட் 22 வரை) நடைபெறவுள்ள கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்திய உணவுக் கழகத்தின் தலைமை அலுவலகம் திட்டமிட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகள்/செயல்பாடுகளிலும் பங்கு பெறுமாறு அனைத்து பணியாளர்களையும் டாக்டர் வி ஏழுமலை, பொது மேலாளர் (பொது) கேட்டுக்கொண்டார்.

மூத்த அதிகாரிகள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய திரு ஆர் டி நசீம், இஆப, செயல் இயக்குநர் (தெற்கு), இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் (தெற்கு), நிறுவனத்தின் மதிப்பை பொதுமக்கள் மத்தியில் உயர்த்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் தங்களது முழுத் திறமையுடன் ஈடுபடுவதற்கு அனைத்து பணியாளர்களுக்கும் கிடைத்துள்ள சிறப்பான வாய்ப்பு இது என்று கூறினார்.

 சமூக ஊடகங்களில் துடிப்புடன் செயலாற்றுமாறும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகம் போன்ற எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடாமல் பயன்படுத்தி இந்த நிகழ்வை பெரும் வெற்றி பெற செய்யவேண்டுமென்றும் அனைத்து பணியாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

“75 வார நிகழ்ச்சிக்கான” செயல்பாடுகள்:

இணையக் கருத்தரங்கம், போட்டிகள், பொது ஊடகம், புகைப்பட கண்காட்சி, முன்னாள் இந்திய உணவுக் கழக அலுவலர்களுடன் நேர்முகம், சுவரொட்டி செய்தல், உள்ளூர்வாசிகள்/கிராமங்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள், தொண்டு நிறுவனங்கள்/உள்ளூர் நபர்களை சந்தித்தல், தெரு நாடகங்கள், வினாடி வினா, பட்டிமன்றம், குறும்படங்கள், அறிக்கை சமர்ப்பித்தல், வெளியீடுகள், புகைப்படங்கள், தொழில்நுட்ப அறிக்கைகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், கிடங்கை பார்வையிடுதல், விளம்பரம், பொம்மலாட்டம், ஆய்வுக் கட்டுரைகள், உள்ளூர் மக்களுக்கு தாவரங்களை வழங்குதல் உள்ளிட்டவை.

மேற்கண்ட தகவல்களை இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர் திருமதி ஷைனி வில்சன் செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.