த
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக - அமமுக கூட்டணி அமைத்ததை தொடர்ந்து, இன்று சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்தார்.
இதில் தேமுதிகவின் இப்படி முக்கிய சிறுபான்மையினர் கட்சிகள் அமமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் வாக்குகள் பெரிய அளவில் பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை அமமுக பெரிய அளவில் மாற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனுக்கு கூடுதல் பலமாக தேமுதிகவும் அமமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதே நேரம், வன்னியர்கள், கவுண்டர்கள் உள்ளிட்டோர் பெரும்பான்மையாக உள்ள வட மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளை பிரிப்பதற்கு, தேமுதிக பயன்படும் என்பது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் திட்டமாக இருக்கிறது. அதிமுகவுக்கு செல்லக்கூடிய இஸ்லாமியர்கள் வாக்குகளை பிரிப்பதற்கு ஓவைசி மற்றும் எஸ்டிபிஐ கட்சி பயன்படும் என்பதும் தினகரனின் தேர்தல் வியூகம் என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள். பிரேமலதா விஜயகாந்த் , கழக துணை தலைவர் எல்.கே.சுதிஷ்,பார்த்தசாரதி, உடன் இருந்தனர். பிரச்சாரக் களத்தில் கொரோனா காலத்தை சிறப்பாக கையாண்டோம் .என் தமிழக முதல்வர்
எடப்பாடி கே. பழனிசாமி . பேச்சு மக்கள் மனதில்
நீங்கள் கை தட்டச் சொன்னது..விளக்குப் பிடிக்கச் சொன்னது...ஆயிரம் ரூபாயை மட்டுமே கொடுத்து பசி பட்டினியோடு பலரை அலைய விட்டது..
பேங்க் லோன். EMI என மக்களை வட்டியோடு கட்ட வைத்தது .டெஸ்ட் கிட். ப்ளீச்சிங் பவுடர். என ஏகபட்ட பணத்தை சுருட்டாம..மக்களுக்காகவே மூவுலகும் செலவு செய்தீர்களே .அதைதான் சிறப்பகக் கையான்டதாக சொல்றிங்களா முதல்வரே.என பிரேமலதா விஜயகாந்த் விளாசியது தான் ஹைலைட் ஆகும்.
கருத்துகள்