கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி உதவி வழங்குகிறது கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கு 135 கோடி நிதி உதவி; கூகுள் நிறுவனம்.
இந்தியாவில் கொரோனா பரவல் நிலவரம் மோசமடைந்துள்ள நிலையில், மருத்துவ உள்கட்டமைப்புகளுக்காக கூகுள் நிறுவனம் இந்திய மக்களுக்கு உதவும் விதமாக, ரூ.135 கோடியை வழங்குவதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு துணையாகத் தேவையான உதவியை அளிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ள நிலையில் கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் ரூபாய்.135 கோடி நிதி உதவியை அளிக்க இருப்பதாக திரு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி இ ஓ சத்ய நாதெல்லா, இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து கூறிய தகவல்: இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் கடும் வேதனை அளிக்கிறது. ஆக்சிஜன் கருவிகள் போன்ற மருத்துவ பொருட்கள் அளிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கும்” என்றார்.
கருத்துகள்