பத்திரிகை தகவல் அலுவலகத்தில் கொவிட்-19 தடுப்பூசி முகாம்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த கொவிட்-19 தடுப்பூசி முகாமில் சுமார் 140 பேர் பயன் பெற்றனர்.
பத்தி்ரிகை தகவல் அலுவலகம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து சென்னை சாஸ்திரி பவன், பத்திரிகை தகவல் அலுவலக கூட்ட அரங்கில் கொவிட்-19 தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முகாமில் பத்திரிகை தகவல் அலுவலகம், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், மத்திய பொதுப்பணித்துறை உட்பட சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு.மா.அண்ணாதுரை மற்றும் இயக்குனர் திரு.குருபாபு பலராமன் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்துகள்