முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொவிட்-19 தடுப்பு பொது சுகாதார நடவடிக்கைகளின் தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு


பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 தடுப்பு பொது சுகாதார நடவடிக்கைகளின் தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு

பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்கு மாற்று எதுவும் இல்லை: பிரதமர்

கொவிட் நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்

உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்திறனுடனும், மக்களின் கவலைகளுக்கு உணர்வு பூர்வமாக அக்கறை செலுத்த வேண்டும்: பிரதமர்

ரெம்டெசிவிர் மற்றும் இதர மருந்துகளின் விநியோக நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்

மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட வேண்டும்: பிரதமர்

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க, ஒட்டுமொத்த நாட்டின் திறனையும் பயன்படுத்த வேண்டும் : பிரதமர்

கொவிட்-19 தொற்றை சமாளிக்கும் தயார் நிலை குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.  மருந்துகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

அனைவருடனும் இணைந்து, இந்தியா கடந்தாண்டு கொவிட் தொற்றை முறியடித்தது.  அதே விதிமுறைகளுடன், ஆனால் மேலும் வேகம் மற்றும் ஒருங்கிணைப்புடன்  இந்தியாவால் கொரோனாவை  மீண்டும் தோற்கடிக்க முடியும் என பிரதமர் கூறினார்.

கொவிட் பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்கு மாற்று எதுவும் இல்லை என பிரதமர் வலியுறுத்தினார்.  உயிரிழப்பை குறைக்க,  ஆரம்ப பரிசோதனை மற்றும் முறையான கண்காணிப்பு அவசியம்.  உள்ளூர் நிர்வாகம் செயல் திறனுடன் இருக்க வேண்டும் மற்றும் மக்களின் கவலைகளுக்கு உணர்வுபூர்வமாக அக்கறை செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.

தொற்றை கையாள்வதில், மாநிலங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டார்.  கொவிட் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.

தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமை மையங்கள் மூலம் கூடுதல் படுக்கைகள் விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் உத்தரவிட்டார்.

பல மருந்துகளின் தேவைகளை பூர்த்தி செய்ய, இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள  வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

ரெம்டெசிவிர் மற்றும் இதர மருந்துகளின் விநியோக நிலவரம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.  ரெம்டெசிவிர் மருந்து அனைவருக்கும் கிடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது.

அரசின் முயற்சிகள் மூலம், ரெம்டெசிவர் உற்பத்தியை மே மாதத்தில் 74.10 லட்சம் குப்பிகளாக அதிகரிக்க முடியும்.  மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விநியோக சங்கிலியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும் அவர் உத்தரவிட்டார்.  ரெம்டெசிவிர் மற்றும் இதர மருந்துகளை  அனுமதிக்கப்பட்ட மருந்துவ வழிகாட்டுதல்களுடன் பயன்படுத்தவும் பிரதமர் உத்தரவிட்டார்.

அனுமதிக்கப்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணியை விரைவு படுத்தவும் பிரதமர் உத்தரவிட்டார்.   32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 162 ஆக்ஸிஜன் ஆலைகள், பிரதமரின் நல நிதியை பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. 

1 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் அவைகள் விரைவில் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதிகம் பாதிப்புள்ள 12 மாநிலங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால ஆக்ஸிஜன் தேவைகளுக்கான மதிப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் கூறினர்.

வென்டிலேட்டர்கள் கிடைக்கும் நிலவரம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.  இதற்காக கண்காணிப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த முறையை செயல்திறனுடன் பயன்படுத்தி கொள்ள  சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என  உத்தரவிட்டார்.

கொவிட் தடுப்பூசி போடுவதில், ஒட்டு மொத்த நாட்டின் திறனையும் பயன்படுத்தி கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பிரதமருடன், அமைச்சரவை செயலாளர், முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர்கள், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மருந்தக செயலாளர் மற்றும் நிதி ஆயோக்கை சேர்ந்த மருத்துவர் வி.கே.பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...