ரூ.200 லஞ்சம் வி.ஏ.ஓ வுக்கு 4 ஆண்டு சிறை இரண்டாயிரம் அபராதம் சிவகங்கை ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
ரூ.200 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் இரண்டாயிரம் அபராதம் விதித்து சிவகங்கை ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திலுள்ள நடுவிக்கோட்டை கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி விசாலாட்சி கடந்த 2006 ஆம் ஆண்டு பொது வினியோக திட்ட குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியிலிருந்த நாடிமுத்து என்பவர் விசாலாட்சியிடம் ரேசன் கார்டு வழங்க பரிந்துரை செய்ய ரூ200 லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க விருப்பமில்லாமல்
அது குறித்து சிவகங்கை ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் விசாலாட்சி புகார் தெரிவித்த நிலையில், அவர்களின் வழிகாட்டுதல்படி இரசாயனம் தடவிய 200 ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் நாடிமுத்துவிடம் விசாலாட்சி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பணம் பெற்றுக் கொண்ட கையோடு பிடித்த நிலையில் இந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில் கிராம நிர்வாக அலுவலர் நாடிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உதய வேலவன் தீர்ப்பளித்துள்ளார்.
கருத்துகள்