தமிழகத்தில் பொது ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பு
தமிழக அரசு செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கெனவேயுள்ள நடைமுறையில் பல்வேறு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள் பார்களுக்கு அனுமதி இல்லை.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. சென்னை மாநகராட்சி, நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சலூன்கள், அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து மத வழிப்பாட்டு தலங்களில் அனுமதி இல்லை. திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 நபர்களாக இருந்த நிலை 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அது போல் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 50 பேராக இருந்த நிலையில் தற்போது 25 பேராகக் குறைந்துள்ளது.
கோயில் குடமுழுக்குகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம். உணவகங்கள், தேனீர் கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
அனைத்து உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
அனைத்து மின் வணிக சேவைகள் (இ காமர்ஸ்) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் என்பதாகும்.
கருத்துகள்