கேந்திரியா வித்யாலயாவில் தடுப்புமருந்து முகாம்
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவில் மருத்துவரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட கொவிட் தடுப்புமருந்து முகாம் நடைபெற்றது.
கேந்திரியா வித்யாலயா சங்கத்தின் சென்னை பிராந்திய அலுவலக துணை ஆணையர் டாக்டர் (திருமதி) எம் ராஜேஸ்வரி மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் தலைவர் திரு வி ஜகதீஷ் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்கசாமி இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அடையார் மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கோமதியின் மேற்பார்வையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. தடுப்பு மருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பலன்கள் குறித்து அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.
சுமார் 125 பேர் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் பணியாளர்கள், கேந்திரியா வித்யாலயா சங்கத்தின் சென்னை பிராந்திய அலுவலகத்தின் அலுவலர்கள், கேந்திரிய வித்யாலயா சிஎல்ஆர்ஐ மற்றும் வனவாணி வித்யாலயா ஆகியவற்றின் பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
வேளச்சேரி சேவா நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இம்முகாமை ஒருங்கிணைந்து நடத்தினர்.
முகாமில் கலந்து கொண்டு திறம்பட பணியாற்றிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
மேற்கண்ட தகவல்களை, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்கசாமி செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தடுப்பு மருந்து ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் வழங்கப்படும்.
நாடு முழுவதிலும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை அதிக அளவில் விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் தடுப்பு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய அரசு, 2021 ஏப்ரல் மாதத்தில் அரசு விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தடுப்பு மருந்து வழங்கும் மையங்களில் எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் வேகத்தையும், வீச்சையும் அதிகரிப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தடுப்பு மருந்து மையங்களையும் சிறப்பாக பயன்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் 2021 மார்ச் 31 அன்று நடைபெற்ற விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து வழங்கலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் மேம்பட்ட மற்றும் செயல்திறன்மிக்க அணுகலை சார்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களை கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் வழிமுறை உயர்மட்ட அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.
தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து 2021 ஏப்ரல் 1 முதல் 45 வயதிறகு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கலை தொடங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
ஆயக்கர் பவனில் கொவிட் தடுப்பூசி முகாம்
சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக, சென்னை, நுங்கம்பாக்கம் எம்.ஜி ரோட்டில் உள்ள ஆயக்கர் பவனில் உள்ள ‘வைகை அரங்கில்’(பழைய ஆடிட்டோரியம்) 1.4.2021 முதல் 2.4.2021 வரை 2 நாள் கொவிட்-19 தடுப்பூசி முகாமுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம், அரசின் வழிகாட்டுதல்கள் படி ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியை வருமானவரித்துறை ஆணையர் (நிர்வாகம் & டிபிஎஸ்) திரு என்.ரெங்கராஜ், ஐஆர்எஸ் தொடங்கி வைத்தார். இதற்கு வருமானவரித்துறையின் கூடுதல் ஆணையர் (நிர்வாகம் & டிபிஎஸ்) திரு. பி. திவாகர் ஐஆர்எஸ் தலைமை தாங்கினார். சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளின் தீவிர ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வருமானவரித்துறையின் ஒப்பந்த தொழிலாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இத்திட்டம் மூலம் 200க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது தொடக்கம்
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது, இன்று முதல் தொடங்கியது.
மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில், கொவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.61 சதவீதம் பேர் மேற்கண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக, தினசரி கொவிட் பாதிப்பு 39,544ஆக உள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,84,055 ஆக உள்ளது.
மொத்த கொவிட் பரிசோதனையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை 70 சதவீதத்துக்கும் அதிகமாக மேற்கொள்ளும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடுவது இன்று முதல் தொடங்கியது.
நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக் கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6,51,17,896 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
75வது நாளான நேற்று, மொத்தம் 20,63,543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,14,74,683 -ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 459 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் திரு. பி. திவாகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்