முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக் கடந்து விட்டது


கேந்திரியா வித்யாலயாவில் தடுப்புமருந்து முகாம்

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவில் மருத்துவரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட கொவிட் தடுப்புமருந்து முகாம் நடைபெற்றது.

 கேந்திரியா வித்யாலயா சங்கத்தின் சென்னை பிராந்திய அலுவலக துணை ஆணையர் டாக்டர் (திருமதி) எம் ராஜேஸ்வரி மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் தலைவர் திரு வி ஜகதீஷ் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்கசாமி இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அடையார் மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கோமதியின் மேற்பார்வையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. தடுப்பு மருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பலன்கள் குறித்து அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

சுமார் 125 பேர்  தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் பணியாளர்கள், கேந்திரியா வித்யாலயா சங்கத்தின் சென்னை பிராந்திய அலுவலகத்தின் அலுவலர்கள், கேந்திரிய வித்யாலயா சிஎல்ஆர்ஐ மற்றும் வனவாணி வித்யாலயா ஆகியவற்றின் பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

வேளச்சேரி சேவா நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இம்முகாமை ஒருங்கிணைந்து நடத்தினர்.

முகாமில் கலந்து கொண்டு திறம்பட பணியாற்றிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் நன்றி தெரிவித்தார்.

மேற்கண்ட தகவல்களை, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்கசாமி செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் வழங்கப்படும்.

நாடு முழுவதிலும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை அதிக அளவில் விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் தடுப்பு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய அரசு, 2021 ஏப்ரல் மாதத்தில் அரசு விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கு  தேவையான நடவடிக்கைகளை தடுப்பு மருந்து வழங்கும் மையங்களில் எடுக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் வேகத்தையும், வீச்சையும் அதிகரிப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தடுப்பு மருந்து மையங்களையும் சிறப்பாக பயன்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் 2021 மார்ச் 31 அன்று நடைபெற்ற விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து வழங்கலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் மேம்பட்ட மற்றும் செயல்திறன்மிக்க அணுகலை சார்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களை கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் வழிமுறை உயர்மட்ட அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.

தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து 2021 ஏப்ரல் 1 முதல் 45 வயதிறகு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கலை தொடங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

ஆயக்கர் பவனில் கொவிட் தடுப்பூசி முகாம்

சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக, சென்னை, நுங்கம்பாக்கம் எம்.ஜி ரோட்டில் உள்ள ஆயக்கர் பவனில் உள்ள ‘வைகை அரங்கில்’(பழைய ஆடிட்டோரியம்) 1.4.2021 முதல் 2.4.2021 வரை 2 நாள் கொவிட்-19 தடுப்பூசி முகாமுக்கு  தமிழகம் மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம், அரசின் வழிகாட்டுதல்கள் படி ஏற்பாடு செய்துள்ளது. 

இந்நிகழ்ச்சியை வருமானவரித்துறை ஆணையர் (நிர்வாகம் & டிபிஎஸ்) திரு என்.ரெங்கராஜ், ஐஆர்எஸ் தொடங்கி வைத்தார். இதற்கு வருமானவரித்துறையின் கூடுதல் ஆணையர் (நிர்வாகம் & டிபிஎஸ்)  திரு. பி. திவாகர் ஐஆர்எஸ் தலைமை தாங்கினார்.  சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளின் தீவிர ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வருமானவரித்துறையின் ஒப்பந்த தொழிலாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இத்திட்டம் மூலம் 200க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது தொடக்கம்

45 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது, இன்று முதல்  தொடங்கியது.

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில், கொவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.61 சதவீதம் பேர் மேற்கண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக, தினசரி கொவிட் பாதிப்பு 39,544ஆக உள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,84,055 ஆக உள்ளது.

மொத்த கொவிட் பரிசோதனையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை 70 சதவீதத்துக்கும் அதிகமாக மேற்கொள்ளும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடுவது இன்று முதல் தொடங்கியது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக்  கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6,51,17,896 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

75வது நாளான நேற்று, மொத்தம் 20,63,543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,14,74,683 -ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 459 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் திரு. பி. திவாகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த