முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக் கடந்து விட்டது


கேந்திரியா வித்யாலயாவில் தடுப்புமருந்து முகாம்

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவில் மருத்துவரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட கொவிட் தடுப்புமருந்து முகாம் நடைபெற்றது.

 கேந்திரியா வித்யாலயா சங்கத்தின் சென்னை பிராந்திய அலுவலக துணை ஆணையர் டாக்டர் (திருமதி) எம் ராஜேஸ்வரி மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் தலைவர் திரு வி ஜகதீஷ் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்கசாமி இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அடையார் மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கோமதியின் மேற்பார்வையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. தடுப்பு மருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பலன்கள் குறித்து அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

சுமார் 125 பேர்  தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் பணியாளர்கள், கேந்திரியா வித்யாலயா சங்கத்தின் சென்னை பிராந்திய அலுவலகத்தின் அலுவலர்கள், கேந்திரிய வித்யாலயா சிஎல்ஆர்ஐ மற்றும் வனவாணி வித்யாலயா ஆகியவற்றின் பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

வேளச்சேரி சேவா நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இம்முகாமை ஒருங்கிணைந்து நடத்தினர்.

முகாமில் கலந்து கொண்டு திறம்பட பணியாற்றிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் நன்றி தெரிவித்தார்.

மேற்கண்ட தகவல்களை, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் முதல்வர் டாக்டர் எம் மாணிக்கசாமி செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் வழங்கப்படும்.

நாடு முழுவதிலும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை அதிக அளவில் விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் தடுப்பு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய அரசு, 2021 ஏப்ரல் மாதத்தில் அரசு விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கு  தேவையான நடவடிக்கைகளை தடுப்பு மருந்து வழங்கும் மையங்களில் எடுக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் வேகத்தையும், வீச்சையும் அதிகரிப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தடுப்பு மருந்து மையங்களையும் சிறப்பாக பயன்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் 2021 மார்ச் 31 அன்று நடைபெற்ற விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து வழங்கலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் மேம்பட்ட மற்றும் செயல்திறன்மிக்க அணுகலை சார்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களை கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் வழிமுறை உயர்மட்ட அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.

தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து 2021 ஏப்ரல் 1 முதல் 45 வயதிறகு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கலை தொடங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

ஆயக்கர் பவனில் கொவிட் தடுப்பூசி முகாம்

சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக, சென்னை, நுங்கம்பாக்கம் எம்.ஜி ரோட்டில் உள்ள ஆயக்கர் பவனில் உள்ள ‘வைகை அரங்கில்’(பழைய ஆடிட்டோரியம்) 1.4.2021 முதல் 2.4.2021 வரை 2 நாள் கொவிட்-19 தடுப்பூசி முகாமுக்கு  தமிழகம் மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம், அரசின் வழிகாட்டுதல்கள் படி ஏற்பாடு செய்துள்ளது. 

இந்நிகழ்ச்சியை வருமானவரித்துறை ஆணையர் (நிர்வாகம் & டிபிஎஸ்) திரு என்.ரெங்கராஜ், ஐஆர்எஸ் தொடங்கி வைத்தார். இதற்கு வருமானவரித்துறையின் கூடுதல் ஆணையர் (நிர்வாகம் & டிபிஎஸ்)  திரு. பி. திவாகர் ஐஆர்எஸ் தலைமை தாங்கினார்.  சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளின் தீவிர ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வருமானவரித்துறையின் ஒப்பந்த தொழிலாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இத்திட்டம் மூலம் 200க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது தொடக்கம்

45 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது, இன்று முதல்  தொடங்கியது.

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில், கொவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.61 சதவீதம் பேர் மேற்கண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக, தினசரி கொவிட் பாதிப்பு 39,544ஆக உள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,84,055 ஆக உள்ளது.

மொத்த கொவிட் பரிசோதனையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை 70 சதவீதத்துக்கும் அதிகமாக மேற்கொள்ளும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடுவது இன்று முதல் தொடங்கியது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக்  கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6,51,17,896 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

75வது நாளான நேற்று, மொத்தம் 20,63,543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,14,74,683 -ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 459 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் திரு. பி. திவாகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...