முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரீம்கஞ்சில் வாக்குப் பதிவு இயந்திரம். உண்மை நிலை அறிக்கை



தேர்தல் ஆணையம்

கரீம்கஞ்சில் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்புடைய சம்பவம் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தும் அறிக்கை

1.   ரதபாரி (எஸ் சி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண். 149 இந்திரா எம் வி பள்ளியை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் 2021 ஏப்ரல் 1 அன்று துரதிருஷ்டவசமான விபத்து ஒன்றில் சிக்கினர். தலைமை அதிகாரி மற்றும் மூன்று தேர்தல் அலுவலர்கள் இதில் அடங்குவர். காவலர் ஒருவர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவரும் உடன் இருந்தனர்.

2. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகள் ஏபிஎஸ்ஐ லுஹித் கோஹைன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்போடு பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். பலத்த மழையின் காரணத்தால் சாலைகளில் மண் தேங்கியிருந்தது.

3. மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளை கரிம்கஞ்சோடு இணைக்கும் ஒரே முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை 8, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் திரும்பிக் கொண்டிருந்ததால் சுமார் 1300 வாகனங்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது.

4. மேற்கண்ட தேர்தல் குழுவினர் நீலம் பஜாரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, துணை ஆணையர் அலுவலகத்தின் தேர்தல் பிரிவால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனம் 2021 ஏப்ரல் 1 அன்று இரவு சுமார் 9 மணியளவில் பழுதடைந்தது. வண்டியிலிருந்து இறங்கிய அதிகாரிகள் பகுதி அதிகாரியான திரு அஜோய் சூத்திரதாருக்கு தகவல் அளித்தனர். பகுதி அதிகாரி வேறு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், தாங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்திருந்த காரணத்தால், அதை ஒப்படைக்க வேண்டிய மையத்தை விரைவில் அடைய விரும்பி தாங்களே மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.

5. சுமார் 9.20 மணி அளவில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த வாகனமொன்றில் அது யாருடையது என்பதை தெரிந்து கொள்ளாமல் வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் இதர பொருட்களோடு தேர்தல் அதிகாரிகள் ஏறினர். AS-10B-0022 என்ற எண்ணுடைய அந்த வாகனத்தில் அவர்கள் கரீம்கஞ்சில் உள்ள கனாய்ஷில்லை அடைந்தபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, சுமார் 50 பேர் கொண்ட ஒரு  கும்பல் அவர்களை சுற்றி வளைத்து கற்களால் அடித்து, வசைபாடி வாகனத்தை முன்னேற விடாமல் தடுத்தனர். அந்த கும்பலின் தலைவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அருகிலுள்ள பதர்கண்டி தொகுதியில் போட்டியிடும் திரு கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமான வாகனம் அதுவென்றும் வாக்கு பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வதற்காக அதை அதிகாரிகள் எடுத்துச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அப்போது தான் உணர்ந்து கொண்ட தேர்தல் அலுவலர்கள் பகுதி அதிகாரிக்கு உடனடியாக தகவல் அளித்தனர். ஆனால் பெரிய கும்பல் அதற்குள் கூடி அவர்களை தாக்க ஆரம்பித்தனர். வாகனம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தோடு அதிகாரிகளையும் அவர்கள் சுமார் 9. 45 மணி அளவில் பிடித்து வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு கருவியில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினர்

6. தகவல் கிடைத்தவுடன் கரிம்கஞ்ச் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சுமார் 11.20 மணிக்கு அங்கு சென்றனர். அதற்குள்ளாக அந்த வாகனத்தின் பதிவு விவரங்கள் கண்டறியப்பட்டன.

பதர்கண்டி தொகுதியில் போட்டியிடும் திரு கிருஷ்ணேந்து பாலின் மனைவி திருமதி மதுமிதா பாலின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டிருந்தது.

சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்த போது  தேர்தல் அலுவலர்களை வாகனத்திலிருந்து இழுத்து அவர்களை அக்கும்பல் தாக்க முயன்று கொண்டிருந்தது. வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கல்லால் அடித்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர் சிறிய அளவில் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கும்பலை கலைப்பதற்காக வானத்தை நோக்கி சுடப்பட்டது. சம்பவத்தினால் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் முதல் தேர்தல் அதிகாரி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் மீதமுள்ள அலுவலர்கள் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டனர்.

சோதித்து  பார்த்தபோது வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீல் மற்றும் இதர உபகரணங்கள் பத்திரமாக இருந்ததும் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருந்ததும் கண்டறியப்பட்டு பாதுகாப்புடன் கூடிய அறையில் அவை வைக்கப்பட்டன.

7. இரவு முழுவதும் நடைபெற்ற தேடுதலுக்கு பின்னரும், 2021 ஏப்ரல் 2 அன்று காலை வரை தலைமறைவான முதல் தேர்தல் அதிகாரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்க சில மணி நேரங்கள் தாமதமானது.

8. இந்த சம்பவம் தொடர்பாக, விதிமுறைகளை மீறியதற்கான காரணங்களை விளக்க கோரி தலைமை அதிகாரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியும் மூன்று இதர அதிகாரிகளும் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சீல்கள் பத்திரமாக இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரதபாரி (எஸ் சி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண். 149 இந்திரா எம் வி பள்ளியில் மறு வாக்குப் பதிவு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பார்வையாளரிடமிருந்து அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த