முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரீம்கஞ்சில் வாக்குப் பதிவு இயந்திரம். உண்மை நிலை அறிக்கை



தேர்தல் ஆணையம்

கரீம்கஞ்சில் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்புடைய சம்பவம் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தும் அறிக்கை

1.   ரதபாரி (எஸ் சி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண். 149 இந்திரா எம் வி பள்ளியை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் 2021 ஏப்ரல் 1 அன்று துரதிருஷ்டவசமான விபத்து ஒன்றில் சிக்கினர். தலைமை அதிகாரி மற்றும் மூன்று தேர்தல் அலுவலர்கள் இதில் அடங்குவர். காவலர் ஒருவர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவரும் உடன் இருந்தனர்.

2. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகள் ஏபிஎஸ்ஐ லுஹித் கோஹைன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்போடு பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். பலத்த மழையின் காரணத்தால் சாலைகளில் மண் தேங்கியிருந்தது.

3. மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளை கரிம்கஞ்சோடு இணைக்கும் ஒரே முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை 8, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் திரும்பிக் கொண்டிருந்ததால் சுமார் 1300 வாகனங்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது.

4. மேற்கண்ட தேர்தல் குழுவினர் நீலம் பஜாரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, துணை ஆணையர் அலுவலகத்தின் தேர்தல் பிரிவால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனம் 2021 ஏப்ரல் 1 அன்று இரவு சுமார் 9 மணியளவில் பழுதடைந்தது. வண்டியிலிருந்து இறங்கிய அதிகாரிகள் பகுதி அதிகாரியான திரு அஜோய் சூத்திரதாருக்கு தகவல் அளித்தனர். பகுதி அதிகாரி வேறு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், தாங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்திருந்த காரணத்தால், அதை ஒப்படைக்க வேண்டிய மையத்தை விரைவில் அடைய விரும்பி தாங்களே மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.

5. சுமார் 9.20 மணி அளவில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த வாகனமொன்றில் அது யாருடையது என்பதை தெரிந்து கொள்ளாமல் வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் இதர பொருட்களோடு தேர்தல் அதிகாரிகள் ஏறினர். AS-10B-0022 என்ற எண்ணுடைய அந்த வாகனத்தில் அவர்கள் கரீம்கஞ்சில் உள்ள கனாய்ஷில்லை அடைந்தபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, சுமார் 50 பேர் கொண்ட ஒரு  கும்பல் அவர்களை சுற்றி வளைத்து கற்களால் அடித்து, வசைபாடி வாகனத்தை முன்னேற விடாமல் தடுத்தனர். அந்த கும்பலின் தலைவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அருகிலுள்ள பதர்கண்டி தொகுதியில் போட்டியிடும் திரு கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமான வாகனம் அதுவென்றும் வாக்கு பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வதற்காக அதை அதிகாரிகள் எடுத்துச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அப்போது தான் உணர்ந்து கொண்ட தேர்தல் அலுவலர்கள் பகுதி அதிகாரிக்கு உடனடியாக தகவல் அளித்தனர். ஆனால் பெரிய கும்பல் அதற்குள் கூடி அவர்களை தாக்க ஆரம்பித்தனர். வாகனம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தோடு அதிகாரிகளையும் அவர்கள் சுமார் 9. 45 மணி அளவில் பிடித்து வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு கருவியில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினர்

6. தகவல் கிடைத்தவுடன் கரிம்கஞ்ச் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சுமார் 11.20 மணிக்கு அங்கு சென்றனர். அதற்குள்ளாக அந்த வாகனத்தின் பதிவு விவரங்கள் கண்டறியப்பட்டன.

பதர்கண்டி தொகுதியில் போட்டியிடும் திரு கிருஷ்ணேந்து பாலின் மனைவி திருமதி மதுமிதா பாலின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டிருந்தது.

சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்த போது  தேர்தல் அலுவலர்களை வாகனத்திலிருந்து இழுத்து அவர்களை அக்கும்பல் தாக்க முயன்று கொண்டிருந்தது. வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கல்லால் அடித்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர் சிறிய அளவில் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கும்பலை கலைப்பதற்காக வானத்தை நோக்கி சுடப்பட்டது. சம்பவத்தினால் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் முதல் தேர்தல் அதிகாரி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் மீதமுள்ள அலுவலர்கள் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டனர்.

சோதித்து  பார்த்தபோது வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீல் மற்றும் இதர உபகரணங்கள் பத்திரமாக இருந்ததும் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருந்ததும் கண்டறியப்பட்டு பாதுகாப்புடன் கூடிய அறையில் அவை வைக்கப்பட்டன.

7. இரவு முழுவதும் நடைபெற்ற தேடுதலுக்கு பின்னரும், 2021 ஏப்ரல் 2 அன்று காலை வரை தலைமறைவான முதல் தேர்தல் அதிகாரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்க சில மணி நேரங்கள் தாமதமானது.

8. இந்த சம்பவம் தொடர்பாக, விதிமுறைகளை மீறியதற்கான காரணங்களை விளக்க கோரி தலைமை அதிகாரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியும் மூன்று இதர அதிகாரிகளும் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சீல்கள் பத்திரமாக இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரதபாரி (எஸ் சி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண். 149 இந்திரா எம் வி பள்ளியில் மறு வாக்குப் பதிவு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பார்வையாளரிடமிருந்து அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...