தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதியுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ்
கட்சியின் சார்பில் மாதவராவ் வேட்பாளராகப் போட்டியிட்டார். பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போதே, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட பின், கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானதனையடுத்து, மதுரையில் தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாதவராவ் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். கொரோனோ இரண்டாவது அலை வீரியம் கொண்டதாக இருக்கிறது...
ஆனால் அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் முக்கிய தலைவர்கள்.என ஒருவரை விடாமல் தொடர்கிறது ஆனால் சாமானிய மக்களுக்கு இதுவரை பாதிப்பு ஆனதாக தெரியவில்லை. பரபரப்பான தேர்தல் பணிகளுக்கிடையில் விருதுநகர் மாவட்ட சி.பி.எம் செயற்குழு உறுப்பினர் சந்திரமோகனுக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர்.மாதவராவ் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சைக்கு மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பொழுது நம்பிக்கையான வார்த்தைகளை வந்தும் காலம் பறித்துக்கொண்டது.
இருவரும் தற்போது இல்லை கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் அனைவரும் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். ஶ்ரீவில்லிபுத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒருவேளை மாதவராவ் வென்றால், இடைத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையத் . தகவல் வருகிறது தற்போது அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை கொரோனா தொற்று உறுதியானதால்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 7 ஆம் தேதி மோகன் பகவத்துக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டது. பகவத்துடன், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி நாவ்பூரின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுக் கொண்ட நிலையில், ஹிந்தியில் ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் "ராஷ்டிரிய சுயம்சேவ சங்கத்தின் டாக்டர் மோகன் பகவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் உள்ளன, மேலும் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோணா தொற்று காரணமாக விட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட அவர், இன்று மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தற்போது.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் சித்தப்பா துரைசிங்காரத்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கருத்துகள்